கைப்பேசி : +91 9768 99 8888
அரசியல்வாதிகள்
பொறுமையாக இருக்கவேண்டும். யோகாதிபதி சுக்கிரன் எட்டாம் இடத்தில் கேதுவோடு இணைந்திருப்பதால்
பதவியில் சிக்கல்கள் வரலாம். ஒரு சிலர் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்களை அனுபவிப்பீர்கள்.
தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்கிற பழமொழியை மனதில் கொள்பவர்களுக்கு சஞ்சலங்கள் இருக்காது.
குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போகவேண்டி இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்த
வேண்டியது அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். எதிலும்
நிதானமாக இருங்கள். செவ்வாயின் நிலையினால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக
இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல்
அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும்.
இளைய
பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. புதன் நல்ல
அமைப்பில் இருப்பதால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். பேச்சில் நிதானத்தைக் காட்டுங்கள்.
காரணமின்றி கோபம் வரும். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடங்களில்
நிதானமும் எச்சரிக்கையும் தேவை. மாத பிற்பகுதியில் வம்பு, வழக்கு, தேவையற்ற வீண்பழி,
கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல், வீண்செலவு, அனாவசிய
கடன் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது
அவசியம். செல்போன் பத்திரம்.
4,5,6,13,14,15,21,22
ஆகிய நாட்களில் பணம் வரும். 9 -ம் தேதி அதிகாலை 2.01 முதல் 11 -ம் தேதி மதியம்
1.01 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க
வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால்
எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

No comments :
Post a Comment