கைப்பேசி : +91 9768 99 8888
6,8,12 ல் சுபர்கள் அமர்ந்து குருபார்வையுடன் விபரீத ராஜயோகம் ஏற்படுவதால், ரிஷபத்திற்கு இது மகிழ்வும் நிறைவும் உள்ள மாதமாக இருக்கும். உங்களில் சிலருக்கு ஏற்கனவே இருந்து வந்த பங்குச் சந்தை நஷ்டம் இப்போது சரியாகி அதிலிருந்து லாபம் வரத்தொடங்கும். வீட்டிலும் வெளியிலும் சுபமான நிகழ்ச்சிகளும், மனதில் உற்சாகமும், எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். ரிஷப ராசியின் அனைத்துக் கஷ்டங்களும் நீங்கி விட்டன. உங்களில் சிலருக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனி இருக்காது. வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள் தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மணவாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும்.
4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி காலை 11.05 முதல் 15-ம் தேதி மதியம் 1:44 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

No comments :
Post a Comment