கைப்பேசி : +91 8286 99 8888
துலாம்:
அக்டோபர் முதல் துலாம் ராசிக்காரர்களின் குடும்பத்தில் அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். குறிப்பாக கணவன்-மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு சந்தோஷச் செய்திகள் உண்டு. அடுத்த மாதம் முதல் குருபகவான் ஐந்தில் அமர்ந்து ராசியை பார்க்கப் போவதால் எண்ணியது எண்ணம் போல் நடக்கின்ற மாதம் இது. ஐந்தாமிடக் குருவால் கடந்த வருடங்களில் சாதிக்க முடியாமல் போனவைகள் எல்லாவற்றையும் இனி நிறைவேற்றிக் கொள்வீர்கள். இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியின் மூலமாக துலாம் ராசியினர் சிறப்பான நிலையை அடையப் போகிறீர்கள்.
சிலருக்கு எதிர்பாராத
அதிர்ஷ்டம் உண்டு. வெகு நாட்களுக்கு பிறகு இப்போது பொருளாதார நிலைமை மேம்படும்.
கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை
மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.
வெளிநாட்டு விஷயங்கள் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சுக்கிரன் வலுப் பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம்
வாங்குவீர்கள். நீண்டநாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு
நனவாகும். பொன்,
பொருள்
சேர்க்கை ஏதேனும் உண்டு. கலைஞர்களுக்கு இது நல்லகாலமாக அமையும். சிறு கலைஞர்கள் பிரபலமாவற்குரிய
வாய்ப்புகள் இருக்கின்றன. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது
நல்லது.
1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம்தேதி காலை 8.50 முதல் நவம்பர் 25-ம் தேதி மதியம் 2.36 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடக்காது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment