கைப்பேசி : +91 8286 99 8888
மகரம்:
மாத
முற்பகுதியில் ராஜயோகாதிபதி சுக்கிரன் நீச்சமாக இருந்தாலும் நீச்சபங்க நிலையில்
இருப்பதால், இந்த மாதம்
முழுதும் மகரத்திற்கு நல்லதும் கெட்டதும் கலந்த பலன்கள் நடக்கும். ஒரு குறிப்பிட்ட
நிலையாக உங்களுக்குப் பிடிக்காத ஒருவரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு நீங்கள்
போராட வேண்டியிருக்கும். பிடிக்காத விஷயங்களும் இப்போது நடக்கும். இளைய
பருவத்தினர் தற்போது செய்யும் வேலையை விடவே விடாதீர்கள். ஆனால் ஜென்மச் சனி விட
வைத்து விடுவார். மகர ராசி இளைஞர்களுக்கு இப்போது போராட்ட காலம். எதுவும் முயற்சி
செய்தால்தான் கிடைக்கும். சோம்பலின்றி சுறுசுறுப்பாக செயலாற்றினால் அனைத்தையும் ஜெயிக்கலாம்
என்பது உறுதி.
ஆறுக்குடையவன்
ஒன்பதில் வலுப்பெறுவதால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வந்தால் தேவைக்கு மட்டும்
வாங்குவது நல்லது. ஆடம்பர விஷயங்களுக்கு தேவையில்லாமல் கடனை வாங்கி விட்டு பின்னர்
அதிக வட்டி கட்டும் சூழலில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டி இருக்கும் என்பதால்
சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். கிரெடிட் கார்டு என்ற ஒன்று இருப்பதை மறந்து
விடுவது நல்லது. சொல்லிக் கொடுக்கும் தொழில்புரிவோர், மார்க்கெட்டிங் போன்று பேச்சுத் திறமையால்
வேலைசெய்பவர்கள், வக்கீல்கள்,
ஆசிரியர்கள் போன்றவருக்கு பணியிடங்களில்
நெருக்கடி வருவதற்கு வாய்ப்பு இருப்பதால்
அனுசரித்து போவது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

No comments :
Post a Comment