Wednesday, October 31, 2018

மீனம் - 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி

கைப்பேசி: 8681 99 8888

மீனம்:

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இப்போது மீனத்திற்குப் பொருந்தும். சிலவாரங்களாகவே மீனத்தினர் நன்றாகத்தான் இருக்கிறீர்கள். அது இன்னும் நீடிக்கும். சூரியனின் நீசபங்க வலுவால் இனிமேல் தாமதித்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீர தொடங்கும். இளையவர்களுக்கு வேலை மாற்றம் நடந்து மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும். 

நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இது நல்ல மாதமாக அமையும். கலைத்துறையினர், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதம் லாபம் தரும். இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், ரெக்கவரி வெரிபிகேஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும். 

வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவருக்கும் இது பொன்னான நேரம் என்பதால் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவி கிடைக்கும். எந்த ஒரு செயலும் தற்போது வெற்றியாக முடியும். மாத பிற்பகுதியில் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு பணவரவுகளும், சந்தோஷமான நிகழ்ச்சிகளும் உண்டு. மாதம் முழுவதும் மன மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள். இனிமேல் மீன ராசிக்காரர்களுக்கு பெரிய துன்பங்கள் எதுவுமே வரப்போவது இல்லை. பத்தாம் வீட்டோன் வலுப் பெறுவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயங்கள் இருக்கும். மனதிற்குள் சோகத்தை கொண்டிருந்தவர்கள் இனி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவீர்கள். 

3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம்தேதி காலை 8.13 முதல் 8-ம் தேதி மதியம் 1.42 வரை சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள். 

No comments :

Post a Comment