Monday, August 5, 2024

குருஜியின் வார ராசி பலன்கள் (05.08.2024–11.08.2024)

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த சில வாரங்களைப் போலவே, பெரிய அளவில் பிரச்னைகள் எதுவுமில்லாத நல்ல வாரமாகவே இது அமையும். 4, 5ம் அதிபதிகள் சூரியனும், சந்திரனும் வார ஆரம்பத்தில் அமாவாசை நிலையில் இருந்தாலும் கூட, இணைந்திருப்பது நல்ல யோகம். கடந்த காலங்களில் குழந்தைகள் விஷயத்தில் கவலைகளில் இருப்பவர்களுக்கு இப்போது அதிலிருந்து விடுதலைகள் கிடைக்கும். பதினோராமிட சனியும், ஆறாமிட கேதுவும், இரண்டாமிட குருவும் பெரிய சோதனைகள் எதையும். மேஷ ராசிக்காரர்களுக்கு தற்போது தரப்போவது இல்லை.

முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு இப்போது மாற்றங்களுக்கான விஷயங்கள் நடக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வெகுநாள் இழுத்து கொண்டிருந்த விவகாரங்கள் முடியும். பெண்கள் உதவுவார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு வருவதற்கு இடமிருக்கிறது. அது வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது.. மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது. முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரனும், புதனும் யோகாதிபதியான சனியின் பார்வையில் இருக்கும் வாரம் இது. ஒருநிலையில் பார்த்தால். ராசிநாதன் பாபத்துவம் அடைவதால் இந்த வாரம் வேலை, தொழில், வியாபார அமைப்புகளில் ரிஷப ராசிக்காரர்கள் சில குழப்பங்களை அடைவீர்கள். ஆயினும் வார இறுதியில் அவைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம், வேலையில் மாறுதல், பதவி உயர்வு, சம்பள உயர்வு, நீண்ட காலமாக அடைய வேண்டுமென்று நினைத்திருந்த ஒன்று, இப்பொழுது தொழில் ரீதியாக ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.

பத்தாமிடம் சுபத்துவத்தை அடைவதால், நல்ல வேலைக்காரர்களும், உதவியாளர்களும் இப்போது கிடைப்பார்கள். ராசியில் குரு, மங்கள யோகம் ஏற்பட்டு இருப்பதால், சகோதரர்கள் இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை மற்றும். நிலம், வீடு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இன்னும் சில வாரங்களில் தீர்வுகள் ஏற்படும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, இருவருமே பயன் அடையும் விஷயங்கள் இப்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு உண்டு. உங்களில் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்வுகள் உண்டு.

மிதுனம்:

ராசிநாதன் புதன் தன்னுடைய நண்பர்களான சுக்கிரனின் இணைவு, சனியின் பார்வையில் இருக்கும் நிலையில், அவருடைய இன்னொரு நண்பரான. சூரியனுடைய வீட்டிலும் இருப்பது இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை மேலோங்கி இருக்கும் என்பதை காட்டுகிறது. புதன் மூன்றில் இருப்பதால். இன்னும் சில வாரங்களுக்குள் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்து, அதன் மூலமாக சில சங்கடங்கள் தீரக்கூடிய அமைப்பு இப்போது மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு. வசதி படைத்தவர் அல்லது அதிகாரம் உள்ளவர் ஒருவருடைய அறிமுகம் இப்போது கிடைக்கும்.

சிலருக்கு. காதல் வரும். ஏற்கனவே இருந்து வந்த. நட்புகள் காதலாக மாறும். அது நல்லபடியாக திருமணத்திலும் போய் முடியக்கூடிய சம்பவங்கள் இருக்கும். மிதுன ராசிக் காரர்களுக்கு சோதனைகள் எதுவும் இன்னும் சில வருடங்களுக்கு இல்லை. கடந்த காலத்தில் அனைத்து சோதனையையும் நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். இனி எதிலும் ஜெயிப்பீர்கள். தொழில், வியாபாரம், வேலை முதலிய ஜீவன அமைப்புகளில் முன்னேற்றமான வகையில் நல்ல பலன்கள் நடக்கும். அலுவலகங்களில் இருப்பவர்கள் சிக்கல்கள் நீங்கப் பெறுவீர்கள்.

கடகம்:

வார ஆரம்பநாளில் ராசிநாதன். சந்திரன், ராசியிலேயே இருக்கிறார் என்றாலும் கூட அவர் அமாவாசை அமைப்பில் இருப்பது, சற்று மனக் கலக்கத்தை கொடுக்கக்கூடிய ஒன்றுதான். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஒருவிதமான குழப்ப நிலையில், கடக ராசிக்காரர்கள் இருப்பீர்கள். அதேநேரம் வாரத்தின் பிற்பகுதி ஐந்து நாட்கள் உங்களுக்கு கைகொடுக்கும் விதமாகவே அமைந்திருக்கின்றன. 11ம் இடத்தில் இன்னும் நிலை கொண்டிருக்கும். தர்ம கர்மாதிபதி யோகம் மற்றும் குரு, செவ்வாயால் ஏற்படும் மங்கள யோகம் இப்போது கடக ராசிக்காரர்களுக்கு கைகொடுக்கும்.

கடகத்திற்கு அஷ்டமச்சனியின் தாக்கங்கள் விலகிக் கொண்டிருக்கின்றன. வரும் மார்ச் மாதத்திலிருந்து அஷ்டமச்சனி உங்களை விட்டு நிரந்தரமாக விலகப்போகிறது. எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் நல்லவைகளைப் பற்றி மட்டுமே நினைத்து அதன் மூலம் சங்கடங்களை தீர்த்து கொள்ள வேண்டிய வாரமிது. குறிப்பாக ஆயில்யம் நட்சத்திரக் காரர்களுக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வரும் கவலைகளில் இருந்து இந்த வாரம் விடுதலை கிடைக்கும். எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும் வாரம் இது.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் வாரம் முழுவதும் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தாலும் கூட, சுபர்களான புதன், சுக்கிரன். ராசியில் அமர்ந்திருப்பது, நல்ல யோகம். அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். முயற்சிகள் பலிக்கும். கடந்த காலங்களில் ஏழாமிட சனியின் விளைவால் கணவன், மனைவி பிரிவினை, ஒருவருக்கு ஒருவர். பேசிக் கொள்ள முடியாத நிலை மற்றும் குடும்பத்தில் எவரும், எவரையும் புரிந்து கொள்ள முடியாமல் இருந்து வந்த நிலைமைகள் அத்தனையும் இந்த வாரம் முதல் மாறுகிறது. சனியின் தாக்கம் இனிமேல் குறையும். எனவே இப்போது சிம்ம ராசிக்காரர்களுக்கு நிம்மதி இருக்கும்.

பத்தாம் இடத்தில் குரு, செவ்வாயால் ஏற்பட்டுள்ள மங்கள யோகம், தொழில் யோகங்களை உண்டாக்கும் என்பதால் வேலை, தொழில் வியாபாரம், விவசாயம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக. இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். சுய தொழில் முனைவோர்கள் அனைவருக்குமே. தொழிலுக்கான. ஆர்டர்கள் கிடைக்கும். நல்லவை மட்டுமே நடக்கக்கூடிய யோக வாரம் இது. என்ன பிரச்னை என்றாலும் பணவரவு நன்றாக இருக்கும். யாருக்காவது ஏதாவது செய்து தருவதாக கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும்.

கன்னி:

ராசிநாதன் புதன், 12 மிடத்தில் மறைந்தாலும் கூட நண்பர்களான சுக்கிரன், சனி  தொடர்பில் இருக்கிறார். ராசிக்கு குருவின் பார்வையும் இருக்கிறது. கன்னி ராசிக்காரர்கள் ஜமாய்க்கும் வாரம் இது. ஆறாம் இடத்தில் இருக்கும் சனி, சுபத்துவத்தை அடைவதால் நல்ல கடன்கள் இப்போது கன்னிக்கு கிடைக்கும். அவரவர் பிறந்த ஜாதக தசா,புக்தி களுக்கேற்ப வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழிலை வளர்ச்சிக்கான கடன் அல்லது நிலம் முடிப்பது அல்லது ஏதேனுமொரு பொருட்சேர்க்கைக்காக கடன்கள் அமையக் கூடிய சுப வாரம் இது.

வார ஆரம்பத்தில் லாபாதிபதி, லாபத்திலேயே இருப்பதால் சிறு, குறுதொழில் செய்வோர் மற்றும் வியாபார பெருமக்கள் அனைவருக்குமே வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் நல்ல லாபம் வந்து பணக் கஷ்டங்கள் சரிக்கட்டப்படும்.  ராசி குருவின் பார்வையில் இருப்பதால் தொழில், வேலை, வியாபாரம் நன்றாக இருக்கும். இளைய சகோதரர்களால் சிலர் நன்மை அடைவீர்கள். வார இறுதியில் புனித இடங்களுக்கு செல்வதோ, குல தெய்வ வழிபாடோ செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் முணுமுணுப்புக்கள் உண்டு. 

துலாம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானமான 11 ம் இடத்தில் இருக்கிறார். 1,5,9 ஆகிய கோணாதிபதிகள் மூவரும் தங்களுக்குள் கேந்திரத்தில் இருக்க கூடிய சுப வாரம் இது. 8,12 ம் இடங்களும் இப்போது சுபத்துவத்தை அடைவதால் வெளிநாடு செல்ல வேண்டும், வெளிமாநிலம் சென்று தொழில் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்களின் எண்ணம் பலிக்கக் கூடிய நல்ல வாரம் இது. உங்களின் முயற்சிகள் அத்தனையும் இந்த வாரம் 90% அளவிற்குப் பலிக்கும்.

துலாம் ராசிக்கு இப்பொழுது பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லை. சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் பணவரவு போன்ற ஏதேனும் ஒன்று இந்த வாரம் இருக்கும். ஏற்கனவே கொடுத்த,  திருப்பி வாங்க முடியாத பணத்தை திரும்பப் பெறுதல் அல்லது உங்களுக்கு நியாயமாக வர வேண்டிய பணத்தை அடைதல் போன்ற பண வரவுகள் உள்ள நல்ல வாரம் இது. பணப் பிரச்னையால் கோர்ட்டுக்குச் சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். அனைத்துக் காரியங்களும் லாபகரமானதாகவும், எதிர்கால நன்மைக்கு உபயோகப்படுவதாகவும் இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிக நல்ல காலம் கோட்சார ரீதியாக இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. ராசிநாதன் செவ்வாய் சுபத்துவமாகி, ராசியை குருவும் பார்க்கும் அற்புத வாரம் இது. தொட்டது துலங்கும். எண்ணம் பலிக்கும். வெற்றிகள் கிடைக்கும். நினைத்தது நடக்கும். அனைத்தையும் உங்களின் பக்கம் சாதகமாக நீங்கள் மாற்றிக் கொள்ளும் சுப வாரமாக இது அமைந்திருக்கிறது. கோட்சாரத்தில் இத்தனை யோகம் அமைந்தும், நிஜத்தில் நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், கடுமையான தசா, புக்தி அமைப்புகள் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றன என்று அர்த்தம்.

90 சதவிகித விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் எண்ணியது கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். சட்ட நடவடிக்கைகள். வெற்றியைத் தரும். சிலருக்கு நண்பர்களின் மூலமான உதவிகள் மற்றும் ஆதாயங்கள் இருக்கும். புதிய நட்புகள் உருவாகும். ஏற்கனவே இருக்கும் நட்புகள் உறவாக மாறக்கூடிய இனிய வாரம் இது. ராசியின் யோகர்கள் குரு, செவ்வாய், ராசியைப் பார்க்க சூரியன் ஆட்சி நிலையில் இருப்பதால் எதிர்ப்புகள் அனைத்தும் ஒழிந்து உங்களின் திறமையும், செயல்திறனும் வெளிப்படும் வாரம் இது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு கடன் வரக்கூடிய வாரம் இது. ஆறாமிடத்தில் ராசிநாதன் குரு மங்கள யோகத்தில் இருப்பதாலும், பத்தாம் இடத்தை குரு பார்ப்பதாலும் வியாபாரம், தொழில் அல்லது வீடு, வாகனம் போன்றவைகளுக்காக கடன் வாங்கலாமா என்று யோசிப்பீர்கள். ஏற்கனவே இருக்கும் கடன்களைக் கூட, நீங்கள் சீரமைத்துக் கொள்ளும் காலமும் இதுதான். குறைந்த வட்டிக்கு மாறுவது அல்லது. ஒரு பொருளை விற்றுவிட்டு நிரந்தரமாக கடன் தொல்லையில் இருந்து விலகுவது போன்ற யோசனைகள் இப்போது. தனுசுக்கு வரும். அதை முன்னெடுத்து செய்து வெற்றியும் காண்பீர்கள்.

இரண்டாமிடம் சுபத்துவத்தை அடைவதால் சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டு. நீண்ட நாள் முயற்சி ஒன்று பலித்து, அதன் மூலமாக பண வரவு வந்து, அந்த பணத்தை வைத்து வீட்டுக்குப் பொருள் வாங்குவதோ அல்லது குழந்தைகளின் எதிர்கால முதலீடு அல்லது மனைவிக்கு நகை வாங்கி கொடுப்பது போன்ற. நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வது தனுசு ராசிக்கு இப்போது உண்டு. சிலர் ரகசியமான காரியங்களை செய்வீர்கள். அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள். தந்தையின் ஆதரவும் ஆசிகளும் இந்த வாரம் உண்டு.

மகரம்:

வாரத்தின் ஆரம்ப நாளே மகரத்திற்கு சந்திராஷ்டமமாக அமைகிறது. எட்டில் சந்திரன் சுக்கிரனுடன் சேர்வதால் பெரிய கெடுதல்கள் நடக்காது. ஆயினும், மனம் சற்றுக்  குழப்ப நிலைகளில் இருக்கும். எனவே வேலை, தொழில் மற்றும் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய முடிவுகளை முதல் மூன்று நாட்களுக்கு மகர ராசிக்காரர்கள் எடுக்க  வேண்டாம். ராசியை குரு பார்க்க, ராசிநாதனை சுக்கிரன் பார்க்கும் நல்ல வாரம் இது. கடந்த காலங்களில் இருந்து வந்த சோதனைகள், மன அழுத்தங்கள் அத்தனையையும் விலக்கக்கூடிய அமைப்புகள் இப்போது மகரத்திற்கு வந்திருக்கிறது.

சென்ற காலங்களில் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை நீங்களே உணர்ந்து அதைத் திருத்திக் கொள்ளக் கூடிய நல்ல வாரமும் இதுதான். மகரத்திற்கு இன்னும் 15 ஆண்டுகளுக்கு எந்த சோதனையும் இல்லாமல், வாழ்க்கை நல்லபடியாக அமையக் கூடிய அடிப்படை ஆரம்ப நிலைகள் இப்போது அமையும். தொழில் சிறக்கும் வேலையில் இருந்த மன அழுத்தம் விலகும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக விலகுவதை பார்க்க ஆரம்பிப்பீர்கள். 05-ம் தேதி மாலை 3.21 மணி முதல் 08 -ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

கும்பம்:

ராசியும், ராசிநாதன் சனியும் சுக்கிர பார்வையால் சுபத்துவத்தை அடைந்திருப்பதால் மிகப் பெரிய கஷ்டங்கள் எதுவும் இல்லாத வாரம் இது. குறிப்பாக சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு தற்போது இருந்து வருகிற பணக் கஷ்டம், என்னவென்றே தெரியாத மன அழுத்தம், வாகனங்களை ஓட்டுவதற்கு பயப்பட கூடிய நிலைமைகள் அத்தனையும் மாறக் கூடிய நல்ல வாரமாக இது அமைந்திருக்கிறது. வரும் மார்ச் மாதத்தில் இருந்து உங்களை இப்பொழுது வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் ஜென்மச் சனி விலகுகிறது.  

இனிமேல் கும்பத்திற்கு சோதனைகள் வராது. தொந்தரவு கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் விலகும். சுக்கிரன் ஏழில் சனி பார்வையில் இருப்பதால் பெண் உறவுகளால் வீண் செலவுகளும், விரையங்களும் இருக்கும். இது சேமிப்பு செய்ய முடியாத வாரம். அதேநேரம் வாழ்க்கைத்துணை வழியில் வரவுகளும், ஆதரவான நிலையும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். 08-ம் தேதி அதிகாலை 3.15 மணி முதல் 10-ம் தேதி மாலை 4.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

மீனம்:

எதிரிகளைக் குறிக்கும் ஆறாம் பாவகத்தில் வாரம் முழுவதும் சுக்கிர, சனி, புதன் தொடர்பு ஏற்படுவதால், நண்பர்களும் விரோதிகளாக மாறக்கூடிய. வாரமிது. மீனத்தின் தன்னம்பிக்கைக்கு இந்த வாரம் சோதனைகள் ஏற்படும். ஆயினும். எதையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றிகளை அடைவீர்கள். மூன்றாமிடம் வலுத்து காணப்படுவதாலும் மங்கள யோகம், தர்மகர்மாதிபதி யோகம் இரண்டும் இணைந்திருப்பதாலும் நல்ல பெயர் அல்லது புகழ் பெறக்கூடிய சில விஷயங்களை மீன ராசிக்காரர்கள் இப்போது செய்வீர்கள். எதையும் நீங்கள் சமாளித்துக் கொள்ளும் வாரம் இது.  

அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் மிகுதியாக உண்டு. ஆனாலும் நல்ல பெயர் கிடைக்கும். செலவு செய்வதற்கு முன் யோசிப்பது நல்லது. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபங்கள் இருக்கும். உறவுகள் உதவுவதாக சொல்வார்கள். வேலைதான் நடக்காது. கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். 10-ம் தேதி மாலை 4.18 மணி முதல் 13-ம் தேதி அதிகாலை 4.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537


No comments :

Post a Comment