ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மேஷம்:
எதிர்ப்புகள் அனைத்தையும் நீங்கள் வெற்றி கொள்ளும் வாரம் இது. 11ம் இடத்தில் உள்ள சனியும், ஆறில் உள்ள கேதுவும் எதிர்ப்புகள் அனைத்தையும் ஒடுக்கி உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள். சிலருக்கு தந்தையிடமிருந்து ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு தேவையான ஒன்றை அப்பா தருவார். வெளிநாட்டு விஷயங்கள் பலன் அளிக்கும் என்பதால் அனைத்தும் இப்போது உங்களுக்கு ஆன்லைன் வழியாக நன்மை தரும். ஒருவரை நேரில் பார்க்காமலேயே அனைத்தையும் முழுமையாக முடித்து லாபம் பெறுவீர்கள்.
நடுத்தர வயதினருக்கு தொழில் விஷயங்களில் எந்தவித
சிக்கல்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. உங்களின் வேலையும் சுமுகமாகவே நடைபெறும்.
வேலை மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு. மூன்றில்
சூரியன், சுக்கிரன் இணைவதால் அரசு ஊழியர்கள் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு
நேர்மையற்ற விஷயங்களை செய்யாதீர்கள். கணவன்-மனைவி
உறவில் இனிமேல் ஒருவருக்கு
ஒருவர் புரிந்துணர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இது நல்ல
நேரம். மேலிடத்தின் பார்வையில் உங்களின்
உழைப்பு தென்பட்டு பதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்:
கெடுபலன்கள் எதுவும் சொல்ல முடியாத வாரம்
இது. ராசிநாதன் சுக்கிரன் தன வீட்டில் இருப்பது சிறப்பான அமைப்பு. உங்களில் சிலருக்கு
இந்த வாரம் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பங்குச்சந்தை
சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேசன் துறைகளில் லாபம் வருவதும் உண்டு. சிலருக்கு தந்தைவழி
உறவினர்களிடம் மனக்கசப்பு உண்டாகும். பங்காளிப் பிரச்னை வரும். பூர்வீக சொத்து
விஷயமாக பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் கருத்து
வேறுபாடு இப்போது ரிஷபத்தினருக்கு இருக்கும்.
ராசிநாதன் வலுவாக இருப்பதால் எடுக்கின்ற
முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். பன்னிரண்டாம்
இடத்தில் செவ்வாய் ஆட்சி நிலையில் இருப்பதால் சிலருக்கு சகோதர வழியில் செலவுகளோ, விரயங்களோ இருக்கும். வீடு ரிப்பேர், வாகன பழுது போன்றவைகளை செய்ய வேண்டி
இருக்கும். பணவரவு இருக்கும் என்றாலும் அதற்கு சரியாக வீண் செலவுகளும் இருக்கும்
என்பதால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யவும். அரசுத்துறையில்
இருப்பவர்களுக்கு இது நல்ல வாரம்தான்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு எண்ணம் போலவே
எல்லாம் நடக்கின்ற வாரம் இது. ராசிநாதன் இரண்டாம் வீட்டில் வளர்பிறை சந்திரனுடன்
இணைந்து சுபத்துவமாக இருக்கின்ற அற்புதமான வாரம் இது. எல்லாம் கிடைக்கும்.
தொட்டது துலங்கும். முயற்சிகள் பலிக்கும். உங்களில் சிலருக்கு பெண்களின் மூலமான நற்
சுகங்களும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து
கிடைக்காமல் போன சில விஷயங்களும் இப்போது கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்
துணையால் செலவுகள் இருக்கலாம் அல்லது வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள்
இருக்கும்.
சிலருக்கு ஒரு காரியத்தை நல்லவிதமாக
முடித்து பாராட்டுப் பெறக்கூடிய சம்பவங்கள் உண்டு. 11 ல் உள்ள செவ்வாயால் பொருளாதார மேன்மைகள் இருக்கும். அதிகாரம் செய்யும் பதவியில்
உள்ளவர்களுக்கு இது சிறப்பான வாரம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இளைய
பருவத்தினருக்கு காதல் வரும். உங்களில் சிலர். எதிர் பாலினத்தவரிடம் உங்களின்
விருப்பத்தை தெரிவித்து சம்மதம் பெறுவீர்கள். வாழ்க்கை அடையாளம் காட்டப்படும்.
நடுத்தர வயதினருக்கு கடன், நோய், எதிர்ப்புகள் விலகக் கூடிய நல்ல வாரம் இது.
கடகம்:
அஷ்டமச்சனியின் காரணமாக கடக
ராசிக்காரர்களை இப்போது வாட்டி வதைக்கும் சோம்பல், மந்தம்,
விரக்தி மற்றும்
தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் படிப்படியாக
விலகும். பத்தாம் இடத்தில் செவ்வாய், பதினோராம் இடத்தில் குரு என நண்பர்கள்
நல்ல நிலையில் இருப்பதும், வார ஆரம்பத்தில். சந்திர மங்கள யோகம் ஏற்படுவதும் குறைகள்
எதுவும் சொல்ல முடியாத அமைப்பு. அதேநேரத்தில் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த
வாரம் பெண்கள் சம்பந்தப்பட்ட விரையங்கள் உண்டு.
என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல்
செய்த உதவியால் இப்போது நல்லபலன்கள் கிடைக்கும். ஒன்பதாம் இடத்தில் ராகு இருப்பதால்
போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது
கடினம். தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும்
அனுசரித்து போவது நல்லது. தாயார், வீடு, வாகனம் வழியில் மன வருத்தங்கள் வரும்.
வீடு கட்டுபவர்கள் காண்ட்ராக்டர்களிடம் ஏமாற நேரிடும். கவனமாக இருங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இது தடைகள் நீங்கும்
வாரமாக இருக்கும். ராசிநாதன் சூரியன் பதினோராம் இடத்தில் சுக்கிரனுடன் இணைந்து
வலுவாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது. உங்களில் வேலை,தொழிலில்
நிம்மதியின்றி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு அமைதி கிடைக்கும் நேரம் இது.
பொறுப்பில் இருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் இருக்கும். அடுத்தவர்களை நம்பி
எதையும் செய்ய வேண்டாம். கீழே வேலை பார்ப்பவரிடம் எந்த விஷயங்களையும் பகிர்ந்து
கொள்ளாதீர்கள். அதனால் சிக்கல்களும் நம்பிக்கை துரோகங்களும் இருக்கும்.
இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வருகிறது.
தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து நவம்பருக்கு மேல் திருமணம் நடக்கும். காதலித்துக்
கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க
ஆரம்பித்து வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். எவரையும் நம்பி முதலீடு
செய்வதோ, அடுத்தவரை நம்பி ஜாமீன்
கையெழுத்து போடுவதோ வேண்டாம். புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய
பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்கு சிறப்புகளைத் தரும் வாரம்
இது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் ஜெயித்து உங்களுடைய
சாமர்த்தியத்தை நிலை நாட்டுவீர்கள். கன்னிக்கு இனி ஒருபோதும் சரிவுகள் இல்லை.
ராசிநாதன் புதன் நல்ல நிலையில் இருப்பதால் இளைய பருவத்தினர் சிலருக்கு மனம்
விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். ஏழாமிட ராகுவின் பாதிப்புகளையும் மீறி உங்களுக்கு
சில நன்மைகள் உண்டு. காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பிள்ளைகளால்
நல்ல விஷயங்கள் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் உண்டு.
வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை
செய்யும் கணவன் மனைவிக்கு இப்போது ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி
நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும். தென்
மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். 5,6 ஆகிய
நாட்களில் பணம் வரும். 30-ம்தேதி காலை 7.34 மணி முதல் 2 -ம்தேதி காலை 11.14 மணி
வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் தொல்லைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மனம்
ஒருநிலையில் இருக்காது.
துலாம்:
துலாத்தினருக்கு இது யோகவாரமே. ஒரு குறிப்பிட்ட பலனாக உங்களில்
சிலருக்கு அப்பாவைப் பற்றி அல்லது அவரது
ஆரோக்கியத்தைப் பற்றி வருத்தமான சம்பவங்கள் இருக்கலாம். தந்தையின் உடல்நிலையை
கவனியுங்கள். இளைய பருவத்தினர் அனைவருக்கும் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம்
போடும் வாரம் இது. உங்களில் சிலருக்கு
நல்ல விதமான மாற்றங்கள் இப்போது இருக்கும். இரும்பு சார்ந்த துறைகளில்
இருப்பவர்களுக்கு லாபம் வரும் வாரமிது.
சிலருக்கு எதிர்காலத்தில் எந்தத் துறையில்
இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வாரம் நிர்ணயிக்கும். எதிர்ப்புகள் பலவீனமாகும்.
கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில்
லாபங்கள் உண்டு. அரசு,
தனியார்துறை
ஊழியருக்கு இது நல்ல வாரமே. 5,6 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி காலை 11.14 மணி
முதல் 4-ம்தேதி பகல் 3.58 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய
முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
விருச்சிகம்:
கேட்டை நட்சத்திரத்தினரின் நல்ல வாரம்
இது. தடைகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. முயற்சிகள்
அனைத்தும் வெற்றி பெறும். நிலுவையில் இருக்கும் விஷயங்கள் முடிவுக்கு வந்து
உங்களுக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
நல்லவை நடக்கும். காவல்துறை,
கோர்ட் போன்றவற்றில்
வழக்கு இருப்பவர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு வழக்கு சாதகமாகும். வேலை செய்யும்
இடத்தில் உங்களைப் பிடிக்காதவரின் கை தாழ்ந்து உங்கள் கை உயரும்.
அனுஷம் நட்சத்திரத்தினரின் வேதனைகள் தீரப்
போகிறது. தெய்வ அனுகூலம் முழுமையாக கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த
தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகப்
போகிறது. இனி எல்லா நாட்களும் உங்கள் நாட்கள்தான். 4-ம்தேதி பகல் 3.58 மணி முதல் 6-ம்தேதி
இரவு 10.34 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும்
வேலைகளைச் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஆயினும்
கெடுதல்கள் எதுவும் இருக்காது.
தனுசு:
உங்களின் கை தாழ்ந்து உங்களைப்
பிடிக்காதவர் கை ஓங்கும் வாரம் இது. ராசிநாதன் குரு ஆறாமிடத்தில் உள்ளதால்
சிலருக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். சிலருக்கு மருத்துவச் செலவுகள்
இருக்கலாம். பாபத்துவ சனியின் பார்வையில் செவ்வாய் இருப்பதால் உங்களின் பிடிவாதம்
இப்போது அதிகரிக்கும். உங்களில் சிலருக்கு அதிகம் கோபம் வரும். யாரையாவது நீங்கள்
கோபப்பட்டுத் திட்டி அதனால் ஏதாவது எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என்பதால் இந்த
வாரம் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது.
இளைய பருவத்தினர் வேலையில் அக்கறையுடன்
இருங்கள். எட்டில் இருக்கும் புதன் உங்களை எங்கே கொண்டு போய் கவிழ்க்கலாம் என்று
செயல்படுவார் என்பதால் எதிலும் நிதானமாக
இருப்பது நல்லது. சுக்கிரன் வலுவாக இருப்பதால் பெண்கள் விஷயத்தில் நன்மைகள்
நடக்கும். சகோதரிகள் உதவுவார்கள். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். சுய
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒருவிதமான
முடக்க நிலையை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும்.
மகரம்:
வாரம் முழுவதும் ராஜ யோகாதிபதியான
சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதும், வீடு, வாகனம், தாயார்,
கல்வி போன்றவைகளை
தரும் நான்காம் அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருப்பதும், குரு, புதன் இருவரும் ராசியைப் பார்ப்பதும், மகரத்திற்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் நல்லவை
நடக்கும் வாரம் இது. சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள்.
சுக்கிரன் வலுவாக இருப்பதால் காதல் வரும் நேரம் இது. இளைய பருவத்தினர்களுக்கு நம்பிக்கை
இல்லாமல் இருந்த வேலை தொழில் அமைப்புகள் கூடி வரும்.
வீண் செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்பதை சூரியனுடன் இணையும் சுக்கிரன்
உணர்த்தினாலும் செலவு செய்வதற்கு ஏற்ப தேவையான வருமானமும் இருக்கும் என்பதை சுக்கிரனின்
நிலை உறுதி செய்கிறது. கவலைகளுக்கு இடமில்லை. 4, 5 ஆகிய தினங்களில் பணம் வரும். உங்களில்
சிலருக்கு வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும் தேவைகள் நிறைவேறுதலும்
இருக்கும். விருப்பமான வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
அடைக்கப்பட்ட அனைத்து கதவுகளும் இனி திறக்கும். நீங்களும் அதை உணருவீர்கள்.
கும்பம்:
தகராறுகள் வரும் வாரம் இது. உங்களில் பூரட்டாதி
நட்சத்திரக்காரர்களில் மது அருந்தும் பழக்கம் உள்ள இளைஞர்கள் சிறிது காலம் அதனைக்
கை விடுவது நல்லது. முடியவில்லை என்றால் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன்
நடந்து கொள்ள வேண்டும். சனி உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால்
பலவிதமான தொல்லைகளை அவரது காரகத்துவமான மதுப் பழக்கத்தின் மூலமாகவே தருவார்
என்பதால் மனதை ஜெயிக்க முடிந்தால், மரணத்தையும் ஜெயிக்கலாம்.
குழந்தைகளில் உடல்நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு
சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம்
சிகிச்சைக்கு செல்வது நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை
தவிருங்கள். அவசரம் என்று கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன்
பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம். பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம்
செய்யாதீர்கள். பொறுமை தேவைப்படும் வாரம் இது,
மீனம்:
மீன ராசியினர் திருப்புமுனையான நல்ல
விஷயங்களை சந்திக்கும் வாரம் இது. கடந்த மூன்று வருடங்களாக உங்களுக்கு இருந்து
வந்த தொல்லைகள் படிப்படியாக நீங்க கூடிய வாரமாக இது இருக்கும். எதில் உங்களுக்கு
பின்னடைவுகள் இருந்து வந்ததோ அவைகள் அனைத்தும் தீரப் போகின்ற ஆரம்ப வாரமாக இது
அமையும். இளைஞர்களின் மன அழுத்தம் தீரப்போகிறது. காதல் வெற்றியில் முடியும்.
நினைத்த வேலை கிடைக்கும். தொழிலில் கால் ஊன்ற முடியும். இனிமேல் தொட்டது துலங்கும்.
நடுத்தர வயதினருக்கு கடன் நோய் எதிர்ப்புகள் தீர்வதற்கான ஆரம்பம் இந்த வாரம்
உண்டு.
பிள்ளைகள் விஷயத்தில் சிலருக்கு
மனவருத்தங்களும் செலவுகளும் இருக்கும். இரண்டாமிட செவ்வாய் குழந்தைகளின் போக்கில்
மாற்றங்களை உண்டு பண்ணுவார் என்பதால் பருவ வயதுக் குழந்தைகளின் மேல் ஒரு கண்
வைப்பதும் அவர்களை கண்காணிப்பதும் நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில்
சில ஏறுக்குமாறான விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.
இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதன் மூலம் எதையும் சமாளிக்கலாம் என்பதால்
பொறுத்துப் போங்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :
Post a Comment