Friday, March 22, 2024

குருஜியின் வார ராசி பலன்கள் (25.03.2024 –31.03.2024)

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

11 ல்  சனி ஆட்சியாக இருக்க, யோகாதிபதியான குரு ராசியில் இருப்பது யோகம் தான் என்றாலும், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம தினமாக அமைவதும், யோகாதிபதியான சூரியன் கிரகண தோஷத்தை அடைவதும் மேஷ ராசிக்கு நல்ல நிலை அல்ல. கடன், நோயைத் தரும் ஆறாம் அதிபதி புதன் இந்த வாரம் முதல் ராசிக்கு மாறுவதும் எந்த ஒரு நல்லதையும் முழுமையாக அனுபவிக்க முடியாத அமைப்பு. நன்மைகளும், எரிச்சல் தரும் விஷயங்களும் கலந்து நடக்கும் வாரம் இது. கூட்டுத்தொழிலில் மட்டும் பங்குதாரர்கள் இடையே இணக்கம் இருக்கும்.

வாழ்க்கைத்துணையும் நண்பர்களும் உதவுவார்கள். அண்ணன், அக்காக்களிடமிருந்து உதவிகள் உண்டு. ராசியில் குரு அமர்ந்து, ராசிநாதன் 11 ல் இருப்பது இந்த வாரம் உங்களுடைய மன உறுதியையும், தைரியத்தையும் அதிகப்படுத்தி எதையும் சாதிக்கும் திறனை அளிக்கும் என்பதால் இது கவலை இல்லாத வாரம்தான். சிலருக்கு அன்னிய, மத, மொழிக்காரர்கள் மூலம் பண வரவு இருக்கும். 29 -ந்தேதி பகல் 2.09 மணி முதல் 31-ந்தேதி இரவு 10:56 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் கவனமாக இருப்பது நல்லது. எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

ரிஷபம்:

கேந்திர, கோணாதிபதிகளான சனியும், செவ்வாயும். பத்தாம் இடத்தில் இருப்பது ரிஷபத்திற்கு ஒரு சிறப்பான நிலை. கடந்த சில வாரங்களாக நீச்சம், கிரகணம் என்கின்ற இரண்டு வித பலவீன அமைப்பில் இருந்த யோகாதிபதி புதனும் இந்த வாரம் முதல் பலத்தை அடைகிறார். ராசிநாதன் சுக்கிரன் பாபர்களுடன் இணைந்திருப்பதால் உங்களில் சிலருக்கு எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடப்பது போல தோன்றினாலும் பிறகு வேகமிழந்து ஏமாற்றங்களை தரும். சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு வரும். மருத்துவச் செலவுகள் இந்த வாரம் உண்டு.

குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. யோகத்தை தரக்கூடிய ராகு 11 ல் இருப்பதால் அடுத்த வாரம் முதல் அனைத்தும் நல்ல விதமாக நடக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு விடிவு எனும் கதவு இனிமேல் திறக்கப்போகிறது. உங்களின் எதிர்கால முயற்சிகள் முயற்சிகள் பலிக்கும். நம்பிக்கையோடும் அக்கறையோடும் உழைப்பீர்கள். சிலருக்கு சொந்தவீடு அமைவதற்கான ஆரம்பங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

மிதுனம்:

எந்த பிரச்சினை இருந்தாலும் நல்லபடியாக, சாதகமாக முடியும் வாரம் இது. பரம்பொருள் அருள் இப்போது மிதுன ராசிக்கு உண்டு. உங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். ராசிநாதன் புதன் இந்த வாரம் நீச்ச நிலையில் இருநது விலகுவது உங்களுக்கு தன்னம்பிக்கை தரும் அமைப்பு. குறிப்பிட்ட பலனாக இந்த வாரத்தின் கடைசி நாட்களில் உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். செய்வது தவறாகவே இருந்தாலும் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள்.

வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற முடியும் என்றாலும் யாருக்கும் அவசரப்பட்டு வாக்குத் தர வேண்டாம். நான்காமிடத்தில் கேது இருப்பதால் வீட்டைக் கவனியுங்கள். வீட்டிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து விடுங்கள். 26,27 ஆகிய நாட்களில் பணம் வரும். ஏற்றுமதி இறக்குமதி மற்றும் மாநிலங்களுக்கு  இடையே தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் யோகத்தை தரும். நட்புக் கிரகங்கள் சுபத்துவமாக இருப்பதால் தொல்லைகள் இல்லாத வாரம் இது.

கடகம்:

கிரகண தோஷத்தில் இருந்தாலும், பௌர்ணமி நிலையில் உள்ள ராசிநாதன் சந்திரன் உங்களுக்கு இந்த வாரம் முழுவதும். சந்தோஷ அமைப்பை தருவார். பங்குனி உத்திர பௌர்ணமி என்பதால் கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெரிய கஷ்டங்கள் எதுவும் இருக்காது. தொழில்ரீதியாக சிக்கல்களில் இருக்கும் பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இனி சிரமங்கள் இருக்காது. மனதில் இருக்கும் இனம் புரியாத கலக்கத்தையும், பயத்தையும் உதறித் தள்ளுங்கள். உங்களை மீறி யாரும் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது.

இளைஞர்களுக்கு எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். உங்களில் ஆயில்யம் நட்சத்திர காரர்கள் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்ய வேண்டாம். விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகளையும் இப்போது செய்யக் கூடாது. அஷ்டமச் சனி நடப்பதால் சோம்பலாக எதிலும் ஒரு பிடிப்பின்றி இருப்பீர்கள். அருகில் உள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று காலபைரவரை வேண்டுங்கள். அவர் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் எட்டில் மறைந்து, ராகுவுடனும் இணைந்து கிரகண அமைப்பில் இருந்தாலும், வார ஆரம்பத்தில் பௌர்ணமி சந்திரனின் பார்வையில் சூரியன் இருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரச் சிக்கல்கள் அனைத்தும் தீரப் போகின்ற நல்ல அமைப்பு. சிலருக்கு அரசு வேலை, அல்லது அரசு உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் தொல்லைகள் இருக்காது. டார்கெட்டை முடிக்க முடியும். வீண்செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது.

வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும், உங்களில் சிலர் வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான முயற்சிகள் செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் உதவியாக இருப்பார். ஜீவன அமைப்புகள் சுமுகமாக நடைபெறும். பெண்களை விட்டு சற்றுத் தள்ளியே இருங்கள். யாரிடமாவது அகப்பட்டு திண்டாடும் நிலை உண்டு. உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறைகள் இல்லாத வாரம் இது.

கன்னி:

கடந்த சில வாரங்களாக. நீச்சம் மற்றும் கிரகண தோஷ என்ற அமைப்பில் இருந்த ராசிநாதன் புதன் இந்த வாரத்தில் இருந்து, பலவீன நிலை விலகுகிறார். அதே நேரம் அவர் எட்டில் மறைந்தாலும், குருவுடன் இணைந்து சுப வலிமை பெறுவது நல்ல நிலை. கன்னிக்கு இது தொல்லைகள் இல்லாத வாரமாக இருக்கும். கோட்சார ரீதியில் கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன. ஆறில் இருக்கும் சனி உங்களின் ஆற்றலை அதிகப்படுத்துவார். புதன், வியாழன் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல செய்தி வரும். எதிர்ப்புகள் அனைத்தும் அடிபணியும் வாரம் இது. 

 

வார ஆரம்பத்தில் ராசியில் உள்ள கேதுவுடன் பௌர்ணமி சந்திரன் இணைவதும் எதையும் சமாளிக்கும் அமைப்பு. வேலையில் சிறிய பிரச்னைகள் இருந்தாலும் எதுவும் கைமீறி போகாது. மேலதிகாரி நீங்கள் சொல்வதை முணுமுணுப்புடன் ஏற்றுக் கொள்வார். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், தூரப் பிரயாணம் போன்றவைகள் இருக்கும்.  ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்கும். அதற்காக தேவையின்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம். தாயாரின் நன்மைகளுக்காக செலவுகள் செய்வீர்கள். வெளி மாநிலத்தவர்கள், வேற்று மதத்தினர் நண்பர்களாகக் கிடைப்பார்கள்.

 

துலாம்:

 

ராசியை குரு பார்ப்பதும், 1, 5 க்குடைய சுக்கிரனும், சனியும் சேர்ந்திருப்பதும் இந்த வாரம் துலாம் ராசிக்கு யோகம் தரக்கூடிய கிரகநிலை. அதேநேரத்தில் ஆறு, பன்னிரண்டாம் இடங்களில் சூரியனும், சந்திரனும் பலவீனமடைவதால், தாயின் ஆரோக்கியம் மற்றும் தந்தையுடனான உறவில் துலாம் ராசியினர் கவனம் கொள்ள வேண்டியதாக இருக்கும். சிலருக்கு கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். இன்னும் சிலருக்கு ஞானிகள் தரிசனமோ, தெய்வ தரிசனமோ கிடைக்கும். நீண்டநாட்களாக போக முடியாத புனிதத் தலங்களுக்கு போக முடியும்.

 

பெரிய பின்னடைவுகள் இல்லாத வாரம் இது. கெடுதல் செய்யும் கிரகங்கள் வலுவிழந்து இருக்கிறார்கள். செவ்வாய், சனி ஐந்தில் இணைவதால் பிள்ளைகள் விஷயத்தில் கோபம் வரக்கூடிய சம்பவங்கள் சிலருக்கு நடைபெறும். பொறுமை தேவை. சொந்தவீடு இல்லாத சிலருக்கு கடன் வாங்கி வீடு அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். சிலருக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும்.

விருச்சிகம்:

இந்த வாரம் ஐந்தாம் இடத்தில் சூரியன் ராகுவுடன் இணைந்து குரு ஆறில் இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் சிலருக்கு குழந்தைகளால் சங்கடங்கள் இருக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்காது. அதற்காக கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப்பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். குழந்தைகளின் விஷயத்தை பக்குவமாக கையாள்வதன் மூலம் இந்த வாரம் நிம்மதி கிடைக்கும். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். இளைஞர்களுக்கு அங்கே பிரச்னைகள் இருக்கும்.

இளைஞர்களுக்கு வேலை அமைப்புகளில் ஏமாற்றங்கள் இருக்கும் என்பதால் அலுவலகங்களில் கவனம் தேவை. வேலை வாங்கி தருவதாக யாராவது பணம் கேட்டால் கண்டிப்பாக கொடுக்க வேண்டாம். ஏமாற்றப்படுவீர்கள். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகும். இளைஞர்கள் சிலர் இந்த வாரம் பெங்களூர் அல்லது வடக்கே உள்ள நகரங்களில் வேலை கிடைத்துச் செல்வீர்கள். வெளிநாடு யோகம் உண்டு. இளைய பருவத்தினருக்கு  முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். யாரையும் நம்ப வேண்டாம்.

தனுசு:

ராசிநாதன் குருவின் பார்வை ராசிக்கு இருப்பதும், யோகாதிபதி கிரகங்கள் வலுவாக உள்ளதும், மூன்றாமிடத்தில் சனி, செவ்வாய் இணைவு இருப்பதும் தனுசு ராசிக்கு மிகவும் நல்ல அமைப்பு, என்பதால் நன்மைகள் உள்ள வாரம் இது. 11 ஆம் இடம் குருவின் பார்வையில் இருப்பதால் சிலருக்கு அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடக்கும். சந்திரன் வலுவால் இந்தவாரம் எதிர்பாராத அதிர்ஷ்டம் இருக்கும். தனுசு ராசியின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் வாரம் இது.

கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ராசிக்கு  குரு பார்வை எந்த நிலையிலும் கை கொடுக்கும். உங்களுடைய திறமைகள் வெளிப்படும். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். அலுவலகங்களில் பாராட்டுக்களும் உயர்நிலையில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் கவனிக்கப்படுதலும் நடக்கும். உங்களில் பெரும்பாலானருக்கு தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் இருப்பதற்கு அச்சாரம் போடுகின்ற வாரமிது

 

மகரம்:

 

ராஜ யோகாதிபதி சுக்கிரன் பாபர்களுடன் இணைந்து பலவீனமாக இருக்க கூடிய வாரமிது. இந்த நிலை உங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தன்னம்பிக்கை இழப்பைக் கொடுத்தாலும் ஒன்பதாமிடத்தில் பௌர்ணமி யோகம் ஏற்படுவதால் வேண்டப்பட்ட ஒருவர் மூலமாக நீங்கள் நம்பிக்கை பெறும் வாரம் இது. என்ன இருந்தாலும் ராசிநாதன் ஆட்சியாக இருப்பதால் மகரத்தினர் எதிலும் வெற்றியடைவீர்கள். இந்த வாரம் உங்கள் வாரம். எதற்கும் கவலைப் படத் தேவையில்லை. அதே போல புதனின் நீச்ச நிலை விலகுவதாலும். உங்களுக்கு எதிலும் லாபம் இருக்கும்.

 

தூர இடங்களில் இருக்கும் குழந்தைகளிடமிருந்து நல்ல தகவல் வரும். ஒன்பதில் இருக்கும் கேதுவும், எட்டுக்குடையவனின் கிரகண தோஷமும் சில நிலைகளில் பொருளாதார பாதிப்பினைக்  கொடுத்து மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணத் தட்டுப்பாடு இருக்காது. உங்களில் சிலருக்கு கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் இனிமேல் நன்றாக இருக்கும். எதிலும் உற்சாகத்தை மட்டுமே காணும் வாரம் இது

 

கும்பம்:

 

கோபத்தை குறிக்கும் செவ்வாய் ராசியில் இருப்பதோடு, வார ஆரம்பமே இப்போது சந்திராஷ்டமத்தில் ஆரம்பிக்கிறது. சந்திரன் கிரகண அமைப்பில் இருப்பதால் இந்த வார ஆரம்ப நாட்களில் மூட் அவுட் ஆவீர்கள். காரணம் இல்லாமலேயே எரிச்சல் படுவீர்கள். முணுக்கென்றவுடன் கோபமும் எரிச்சலும் எட்டிப் பார்க்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். கும்ப ராசிக்காரர்கள் விவேகமுள்ளவர் என்பதால் எதையுமே சட்டென சமாளித்துக் கொள்வீர்கள்.  உங்களால் எதையும் எந்த சூழ்நிலையிலும் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை இந்த வாரம் நிரூபிப்பீர்கள்.

 

சிலருக்கு புனித யாத்திரையோ, திருக்கோவில்களுக்கோ செல்லும் வாய்ப்போ கிடைக்கும். ராசியில் சுக்கிரன் இருப்பதால் உங்களில் சிலருக்கு பெண்களால் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியான திடீர் சுகங்கள் உண்டு.  சிலருக்கு வெளிநாடு அல்லது வெளி மாநில பயணங்கள் இருக்கும். 30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 24 -ம் தேதி மாலை 2.20 முதல் 27 -ம் தேதி அதிகாலை 2:56 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும்  நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

 

மீனம்:

 

ராசிநாதன் குரு இரண்டாமிடத்தில் இருந்தாலும், ராசியிலும், ஏழாமிடத்திலும், கிரகணம் நடப்பதால் குடும்ப உறுப்பினர்களால் கவலைகள் உள்ள வாரமிது. மீன ராசிக்காரர்களுக்கு செலவுகள் இப்போது இருக்கும். சுக்கிரன் 12 இல் உள்ளதால் வீண் விரயங்களும் இருக்கும். வருமானம் வந்தாலும் சேமிப்பது கடினம். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் உங்களின் செயல் திறனைக் காட்ட ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேற வேண்டும்.

அடுத்த வருடம் முதல் இதே மாதத்தில் ஜென்மச்சனி வர இருப்பதால் இப்போதிருந்தே எதையும் கவனமுடன் திட்டமிட வேண்டியது அவசியம். எதிலும் அகலக்கால் வைத்து விடாதீர்கள்.  புதிய ஒன்றை ஆரம்பிக்காதீர்கள். தொழில் விஷயங்களில் நிதானமாக இருங்கள். யாரையும் நம்பாதீர்கள். வேலையை விட்டுவிடாதீர்கள். 27 -ந்தேதி அதிகாலை 2.56 மணி முதல் 29 -ந்தேதி மதியம் 2.09 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதோ, முக்கிய முடிவுகள் எடுப்பதோ வேண்டாம். குறிப்பாக பெண்களிடம் விலகி இருக்கவும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment