ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
கும்பம்:
ராசியில் சனி அமர்ந்திருந்தாலும், அவர் மாத முற்பகுதியில் சுக்கிரனால் சுபத்துவப் படுத்தப்படுவதால் நீங்கள் தெளிவான மனதுடனும், முடிவெடுக்கும் திறனுடனும் இருக்கும் மாதம் இது. அதேநேரத்தில் மாத பிற்பகுதியில் சனி, சூரியனுடன் இணைந்து, எரிச்சல் நிலையை அடைவதால். பதினைந்தாம் தேதிக்கு பிறகு நீங்கள் அனைத்திலும். கவனமாக, அதே நேரத்தில் எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டிய மாதம் இது. நான்கில் செவ்வாய் இருப்பதால் உங்களில் சிலரின் வருமானங்கள் குறைந்து நிதிநிலைமை பாதிக்கப்பட்டாலும் தனகாரகனான குரு இரண்டாம் வீட்டில் இருப்பதாலும், இரண்டில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதாலும் குறைகள் எதுவும் இருக்காது.
ஏழரைச்சனி நடப்பதால் உங்களில் சிலருக்கு அதிர்ஷ்டத் தடைகளும், வர வேண்டிய தொகை வராமல் இழுப்பதும், பிள்ளைகள் வழியில் மனச் சங்கடங்களும் இருக்கும். சுக்கிரனின்
சுப வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். இளைஞர்களுக்கு இது வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும்
காலம் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்காமலும் அவசரப்படாமலும் இருப்பது நல்லது. பணியில்
இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முதுகுக்குப் பின்னால் குழி
பறிக்கும் வேலைகள் நடக்கும் என்பதால் எதிலும் உஷாராக இருங்கள். முறைகேடான பணம்
வரும் நிலையில் அதிக கவனம் தேவைப்படும். பழகிய ஒருவர் எதிரியாக மாறுவார். வீண்பழி
வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு வரும் காலம் இது.
புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அதிகப் பணம் முதலீடு செய்து தொழில் எதுவும்
ஆரம்பிக்க வேண்டாம். கடன் வாங்கவே வாங்காதீர்கள். ஆனாலும் கடன் வாங்க வேண்டிய
நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தர முடியாமல்
போகவும் வாய்ப்பு இருக்கிறது. 3, 9ல். ராகு-கேதுக்கள் சுபத்துவமாக இருப்பதால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள்
தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து
நன்மைகள் உண்டு. இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு
நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும்.
சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள்
கிடைக்கும். பொதுவாக கெடுதல்கள் எதுவும் இல்லாத மாதம் இது.
2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம்தேதி அதிகாலை 2.49 முதல் 11-ம் தேதி மதியம் 1.02 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த
நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில்
இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில்
எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment