Sunday, January 1, 2023

துலாம்: 2023 புத்தாண்டு பலன்கள்#astrologeradityagurujinewyearpalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

துலாம்:

பிறக்க இருக்கும் புத்தாண்டான 2023-ம் ஆண்டு ஆரம்பத்தில் துலாம் ராசிக்கு நிதானமான பலன்களை கொடுத்தாலும், மே மாதத்திற்குப் நல்ல பலன்கள் கண்டிப்பாக இருக்கும்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே அர்த்தாஷ்டமச் சனி அமைப்பின் காரணமாக வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் முழுநிறைவை அடையாமலும், விரையங்கள், நஷ்டங்களையும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கின்ற துலாம் ராசிக்காரர்கள் அனைவருக்குமே இந்த வருடம் தீர்வினை தரக்கூடிய நிலையில் இருக்கும்.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தற்போது சாதகமற்ற. நிலையில் ஆறில் இருக்கும் குரு, யோகத்தை தரக்கூடிய ஏழாமிடத்திற்கு மாறி உங்களுடைய ராசியை பார்க்க இருப்பது, அனைத்தையும் நிறைவாக கொடுக்கக்கூடிய அமைப்பு. அதைப்போலவே ஜனவரி மாதத்திலேயே. உங்களின் ராஜயோகாதிபதி சனியும் ஐந்தாமிடத்திற்கு மாறி அதிர்ஷ்டத்தை தரப்போகிறார். ஆகவே, எந்த நிலையில் பார்த்தாலும். முதல் நான்கு அல்லது ஐந்து மாதங்களை தவிர்த்து பிற்பகுதி மாதங்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றார்போல யோகங்களை மட்டுமே தரும்.

இந்த வருடத்தின் பிற்பகுதி மாதங்களில். துலாத்தினர், மிகுந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் அடையப் பெறுவீர்கள். இதுவரை இருட்டுக்குள் நிற்பதைப் போல உணர்ந்தவர்களுக்கு ஒளியெனும் பாதை கண் முன்னே தெரியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் சென்ற வருடங்களைப் போல, வேலை, தொழில் விஷயங்களில் பின்னடைவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கியக் குறைவு எதுவும் இந்த வருடம் இருக்காது.

ஏப்ரல் மாதம் குரு மாற்றத்திற்குப் பிறகு, உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும். வருமானம் குறையும் போதுதான் கடன் வாங்க நேருகிறது. இனிமேல் கடன் வாங்கத் தேவையில்லை என்கின்ற நிலை வரும் போது வருமானம் தாராளமாக வரும் என்பதே விதி என்பதால் இந்த வருடம் துலாத்தினர் பொருளாதார உயர்வு பெறுவீர்கள்.

இதுவரை உங்களின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த எதிரிகள் மற்றும், எதிர்ப்புகள், பொறாமை, போட்டி, அனைத்தும் ஒதுங்கி ஓடும் அளவிற்கு உங்களின் எல்லாப் பிரச்சினைகளும் இந்த வருடம் விலகும். குரு ஏழாமிடத்திற்கு வருவது பணப் பிரச்சினைகளை தீர்க்கும் என்பதால் உங்களின் பொருளாதார பிரச்னைகள் இந்த வருடம் தீர ஆரம்பிக்கும்.

ராகு,கேது நிலைகளின் மூலம் உங்களுக்கு வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளும் அவற்றின் மூலம் பொருள்வரவும் இருக்கும். அதேபோல குருவின் நிலையால் வேலை தொழில் இடங்களில் நல்ல பெயரும் கவுரவமும் கிடைக்கும். வருட பிற்பகுதியில் இருந்து, செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.  தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். அரசு, தனியார்துறை பணியாளர்கள், ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மாணவர்களுக்கு படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும். வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும்.

இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு தொகை வரும். சிரமங்கள் அனைத்தும்  தீரும்.

வயதானவர்கள் காசி, கயா யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் இருக்கும் சனி பிள்ளைகள் விஷயத்தில் குறைகளையும், சங்கடங்களையும் தருவார். பிள்ளைகளின் சுப காரியங்கள் இந்த வருடம் தள்ளிப் போகலாம். அல்லது நிறைவேறுவதற்கு தடைகள் உருவாகலாம். சிலருக்கு பிள்ளைகளுடன் விரோதமும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து அவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் போவதும் இருக்கும்.

பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

ஏழில் குருவின் இணைவில் இருக்கும் சுப ராகுவால் சிலருக்கு இந்தவருடம் மேற்கு நாடுகளுக்கு வேலை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும்.

கேது பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும்போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார்.  அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் உங்கள் ராசியிலேயே இருப்பதால் சாதுர்யமான வழிகளில் தனலாபத்தைத் தருவார்.

துலாம் ராசி பெண்களுக்கு இந்த வருடம் நல்லபலன்கள் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்

பெண்களின் உடல்நிலையும், மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் லாபம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள். இதுவரை விடை தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த விஷயங்களுக்கான பதில்களும் தீர்வுகளும் உங்கள் மனத்தில் நல்லவிதமாகத் தோன்றி உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் உங்களுக்கு சாதகமாக முடிய போகிறது.

மொத்தத்தில் துலாம் ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய வருடமாக இந்த வருடம் அமையும். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்றவர்கள் இந்த நல்ல நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும். துலாத்திற்கு கோட்சார ரீதியில் கவலை இல்லாத வருடம் இது. எதையும் துணிந்து செய்யலாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment