ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மிதுனம்:
மாத
முற்பகுதியில் நான்கில் சுக்கிரன் நீச்சபங்க வலுப் பெறுவதால் இந்த மாதம் வீடு,
வாகனம், தாயார், கல்வி
போன்ற விஷயங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும். சூரியன் வலுவாக அவருடைய நண்பரான
புதனுடன் இருப்பதால் எதிர்பாராத பண வரவு இருக்கும். யார் வீட்டுப் பணமானாலும்
பாக்கெட்டில் புரண்டு கொண்டே இருக்கும். பணத் தட்டுப்பாடு இருக்காது. வேலை தொழில்
விஷயங்களில் இருந்து வந்த கலக்கமான, பதட்டமான
சூழ்நிலைகள் இனிமேல் இருக்காது. வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தந்தைவழி தொழில் செய்பவர்கள் போன்றவருக்கு இது
நன்மைகள் தரும் மாதமாக இருக்கும்.
உங்களில்
சிலருக்கு இப்போது வெளிநாடு, வெளிமாநிலம் என
தூரப் பிரயாணங்கள் உண்டாகும். சுக்கிர நீச்சத்தால் கணவன் மனைவிக்குள் கருத்து
வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு சண்டை
சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம்
குடும்பத்தில் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது
இல்லை. அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் வரும் ஒன்பது வாரங்களுக்கு பத்தொன்பது
மிளகை முடிச்சாக கட்டி அந்த முடிச்சை புது மண் அகல் விளக்கில் இட்டு நல்லெண்ணெய்
ஊற்றி காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் ஏற்றுவது நல்லது. சனி இனிமேல் கெடுதல்கள்
செய்ய மாட்டார். ஆறுக்கு அதிபதி செவ்வாயுடன்
புதன் இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் இந்தமாதம் தங்களின் ஜென்மநட்சத்திர
தினத்திலோ, அல்லது ஒரு புதன்கிழமையிலோ
பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது
நன்மைகளைத் தரும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

No comments :
Post a Comment