ஜோதிடக்கலைஅரசு
ஆதித்யாகுருஜி
கைபேசி எண் :8870998888
ராசிநாதன் புதன்
பலவீனம் அடைந்திருந்தாலும் குருபகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் சரளமான
பணப்புழக்கமும்,
நல்ல வருமானமும் ஏற்படும் மாதம் இது. ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள்,
மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள்
இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி
உறவினர்கள் உதவுவார்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். பத்தாமிடம் பலம்
பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம்
போன்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடைபெறும்.
அரசுப்பணியாளர்கள், சிகப்பு
நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட்
மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை
விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். உடல்நல விஷயத்தில் கவனமாக
இருக்கவும். சிறு ஆரோக்கியக்குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது
நல்லது. உங்களில் சிலர் ஏதேனும் ஒரு சாதனைச் செயல் புரிந்து புகழடைவதற்கான
வாய்ப்புகள் உள்ளது. மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான
முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.
பிள்ளைகள் வழியில்
நல்ல சம்பவங்களும்,
நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல
செய்திகள் கிடைக்கும். குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம். எதிலும்
நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள்
திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல்
போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது
அவசியம். கோபத்தை தவிருங்கள். மாத ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள்
கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில்
சமாளித்து வெற்றி எப்போதும் கன்னியின் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள்.
3,8,9,10,16,17,18,19,28,29
ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 3-ம் தேதி மதியம் 2.25 மணி முதல் 5-ம்
தேதி இரவு 8.45 மணி வரையும், மாத இறுதியில் 30ம் தேதி இரவு 8.01 மணி முதல் செப்டம்பர் 2ம் தேதி அதிகாலை
3.01 வரையும் சந்திராஷ்டம நாட்கள்
என்பதால் இந்த நாட்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மனம் தெளிவற்ற
நிலையில் இருக்கும் என்பதால் முக்கியமான முடிவுகள் எதையும் மேற்கண்ட தினங்களில்
எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment