ஏழரைச்சனியின் கடுமையான கெடுபலன்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்
உங்களுக்கு சற்று மூச்சு விட்டுக் கொண்டு இளைப்பாற இடங்கொடுக்கும் மாதம் இது.
ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் வைகாசி மாதம் வருத்தங்களைத் தராமல்
நல்ல நிலையையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும். குறிப்பாக கேட்டை
நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் வராது. இனி எல்லாம்
நல்லபடியாக நடக்கப் போகிறது.
அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள்
இருக்கலாம். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால்
நன்மைகளும் இருக்கும். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ அழைப்பிற்கான
கடிதங்கள் வரும். இதுவரை இழுத்தடித்த வேலை கிடைக்கும். தாயார் வழியில்
நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு தாய்வழி
சீதனம் போன்று ஏதேனும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
No comments :
Post a Comment