மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் குருவின் பார்வையில்
இருப்பதும், பத்தாமிடத்தில் ராகு சுபத்துவமாக இருப்பதும் எதிர்ப்புகளை
வெல்லும் வலிமை தரும் என்பதால் வைகாசி மாதம் துலாம் ராசிக்காரர்கள் கவலைப்
படுவதற்கு ஒன்றும் இல்லை. உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும்.
பெண்களால் செலவுகள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். இதுவரை
இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
அந்தஸ்து கௌரவம் உயரும். மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த கவலைகள் தீரும்.
உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். நடுத்தர வயதினருக்கு நல்ல
செய்திகள் இருக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை
நல்லபடியாக நடத்த முடியும். கடந்த சில வருடங்களாக சிக்கலில் இருந்து வந்த
துலாத்தினருக்கு நல்ல பாதை தெரியும். துலாத்திற்கு இனிமேல் குறைகள் எதுவும்
இல்லை. படிப்படியான முன்னேற்றம் உண்டு.
No comments :
Post a Comment