கன்னி:
யோகாதிபதி சுக்கிரன் ராசியில் அமர்ந்து குருவின் பார்வையில் இருப்பதால் வைகாசி
மாதம் உங்களுக்கு யோக மாதம்தான். அதேநேரத்தில் மாத முற்பகுதியல் ராசிநாதன்
புதன் எட்டில் மறைவதால் சிலருக்கு மனவருத்தங்கள் தரும்படியான சம்பவங்கள்
நடக்கும். எட்டிற்குடைய செவ்வாய் உச்சமாக இருப்பது கன்னிக்கு சாதகமற்றதுதான்
என்றாலும் யோகாதிபதி சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதால் அனைத்தும்
உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எதுவும் எல்லை மீறாது.
அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். அதிகாரம் செய்யக்கூடிய
பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டுங்கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு
அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை
விட்டு விலகுவார்கள். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது
வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும். குறிப்பிட்ட
சிலர் வெளிநாடு செல்வீர்கள். பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டில்
இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.
No comments :
Post a Comment