ராசிநாதன் புதன், யோகாதிபதி சுக்கிரன் இருவரும் குருவின் பார்வையில்
இருப்பதும், பாக்கியாதிபதி சனி குருவின் வீட்டில் இருந்து ராசியைப்
பார்ப்பதும் மிதுனராசிக்கு நல்லபலன்களையும் நிம்மதியையும் தரக்கூடிய அமைப்பு
என்பதால் வைகாசி மாதம் மிதுனத்திற்கு வசந்த மாதமாக இருக்கும். சிலருக்கு
உல்லாசப் பயணங்கள் உண்டு. இன்னும் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம்
கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு நன்மை தரும்
மாதம் இது.
இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க
ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள்
படிப்படியாக குறையும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம்
ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முப்பது வயதுகளில் இருக்கும்
இளைஞர்கள் இனிமேல் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள். எதிர்காலத்தில்
நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் போடும் மாதமாக இது
அமையும்.
No comments :
Post a Comment