மாத பிற்பகுதியில் யோகாதிபதிகள் சுக்கிரனும், புதனும் பரிவர்த்தனை அடைவதால்
சூரியனும், வைகாசி மாதம் உங்களுக்கு நல்ல மாதமே. ஆனாலும் யோகாதிபதி சனிபகவான்
எட்டில் மறைவதால் எல்லா விஷயங்களிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத மாதமாக
இது இருக்கும். இளைய பருவத்தினர் எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது.
தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல் போன்ற பலன்கள் நடக்கும்.
சிலர் செல்போனை தொலைப்பீர்கள்.
வீண் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன்
ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட்,கேஸ், நிலம்
சம்பந்தமான வழக்குகள். கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு
அவசரப்பட வேண்டாம். ராசிநாதன் சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதோடு
குருபார்வை பெறுவது உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அதிகப்படுத்தும்
என்பதால் எதிரிகளோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு விரோதமாக எதையும் செய்யத்
தயங்குவார்கள்.
No comments :
Post a Comment