ராஜ யோகாதிபதி செவ்வாய் உச்சநிலையில் இருப்பதால் இது கடக ராசிக் காரர்களின்
மனம் மகிழும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும்
உண்டு. குடும்பத்தினர் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுத்து செலவு செய்வீர்கள்.
பெண்களினால் உதவிகளும், நல்ல பலன்களும் இருக்கும். பணத்திற்கு பஞ்சம்
இருக்காது. வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்குப் பலிக்கும். சினிமா
தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக்
கொள்ளுங்கள்.
குருபகவான் நான்கில் இருப்பது செலவுகளை தந்தாலும் அதற்கேற்ப பண வரவுகளையும்,
குடும்ப சந்தோஷங்களையும் தரும். ராசியிலிருக்கும் ராகுவால் கணவன் மனைவியிடையே
கருத்து வேறுபாடு வருவதற்கு இடமிருக்கிறது. அது வராமல் இருக்கக்கூடிய
முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது.. மனைவியின் பேச்சை கேட்பதனால்
ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும்
கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது.
No comments :
Post a Comment