மிதுனம் :
ராசிநாதன் புதன் இதுவரை இருந்து வந்த நீசம் எனும் வலுக் குறைவான நிலையில்
இருந்து விலகி, லாபஸ்தானத்தில் இருக்கும் மாதம் இது. மிதுனத்திற்கு மாத
துவக்கத்தில் வேலை, தொழில் அமைப்புகளில் ஏமாற்றங்களும், பின்னடைவுகளும்
இருந்தாலும், பிற்பகுதியில் அனைத்தும் நீங்கி, சமநிலைக்கு வருகின்ற மாதமாக மே
மாதம் இருக்கும். ஆறுக்குடைய செவ்வாய் எட்டில் உச்சம் பெற்று எட்டாமிடம்
பாபவலுப் பெறுவதால் உங்களுக்கு ஆகாதவர் என்று தெரிந்தும் அவருடன் சிரித்துப்
பேச வேண்டிய ஒரு சூழ்நிலை இப்போது இருக்கும். எதிரியை சகித்து கொண்டு இணக்கமாக
போக வேண்டிய மாதம் இது.
செவ்வாயின் உச்ச வலுவால் சிலருக்கு எதிர்மறை பலன்கள் நடக்கும் என்பதால் இந்த
மாதம் ரிஸ்க் எடுக்கும் விஷயங்களை மிதுனத்தினர் செய்யக் கூடாது. அடுத்தவரை
நம்பிச் செய்யக் கூடிய விஷயங்களையும் செய்ய வேண்டாம். காலை வாரும் சம்பவங்கள்
இருக்கும். சிறு விஷயங்களில் கூட கவனம் அதிகமாக தேவைப்படும். உங்களால்
முடியும் என்று நம்புகின்ற விஷயங்களை மட்டும் செயல்படுத்துவது நல்லது.
அதேநேரத்தில் பணவரவும், தன லாபங்களும் நிறைவாகவே இருக்கும். ஒன்பதாமிடம் குரு
பார்வையுடன் வலுப்பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள்.
புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம்
கிடைக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும் தேவையற்ற
விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு
இருக்கிறது.
ராசிநாதன் வலுக்குறைவாக இருந்தாலும் ராசியையும், புதனையும் குரு பார்ப்பதால்
அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில்
உங்களுக்கு சாதகமாகவே முடியும். ராசிநாதன் செவ்வாயின் வீட்டில் இருப்பதால்
தேவையில்லாமல் கோபம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கட்டுப்பாட்டுடன் இருப்பது
நல்லது. பேச்சால் சிலரை மனது சங்கடப்படும் படி வைப்பீர்கள் என்பதால்
வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
2,5,7,9,10,15,17,18,19,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 6 ம் தேதி காலை 8.19
மணி முதல் 8 ம் தேதி இரவு 8.59 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய
முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ
செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment