Friday, March 2, 2018

மிதுனம்: 2018 மார்ச் மாத பலன்கள்

மிதுனம்:

ராசிநாதன் புதன் நீசபங்க ராஜயோக அமைப்பில் இருப்பது மாதத்தின் முதல் பகுதியில் பின்னடைவுகளையும், 15-ம் தேதிக்குப் பிறகு எதிலும் வெற்றியை தரும் அமைப்பு என்பதால் மார்ச் மாதம் மாற்றங்களை தருகின்ற மாதமாக இருக்கும். எட்டில் இருக்கும் கேது உங்களில் சிலருக்கு வட மாநில பிரயாணங்களையோ, சிலருக்கு வெளிமாநில வெளிநாடு வேலை மாறுதல்களையோ தருவார் என்பதால் மிதுன ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தூர பயணம் செல்கின்ற மாதம் இது.

ஏழில் செவ்வாய் சனி இணைந்து ராசியை பார்ப்பது சுற்றியிருப்பவர்கள் உங்களை வெறுப்பேற்றி கோபம் வரவழைக்கும் ஒரு அமைப்பு. எனவே பேச்சிலும் செயலிலும் இந்த மாதம் அதிக நிதானம் வேண்டும். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை அடைவது தொழில் அமைப்புகளில் நல்ல பலன்களைத் தரும் என்பதால் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் லாபத்தை தரும். பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு தேக்க நிலை மாறி வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும்.

மாதம் முழுவதும் சுக்கிரன் உச்சமாக இருப்பது சிறந்த அமைப்பு. பாபக் கிரகங்களான செவ்வாய் சனி இருவரும் சேர்ந்து ராசியைப் பார்ப்பதால் மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கலாம். நேர்மையானவற்றை சிந்தித்து நல்லவைகளையே செய்து வந்தால் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லை. மாத பிற்பகுதியில் மூன்றாமதிபதி அந்த வீட்டிற்கு எட்டில் மறைவதால் நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவிகள் கூட உங்கள் மேல் பொறாமை கொண்டவர்களால் தடுக்கப்பட்டு கிடைக்காமல் போகும். அதேநேரத்தில் சுக்கிரன் உச்சபலம் அடைவதால் எந்த ஒரு விஷயமும் சுலபமாக முடிந்து பணவரவு இருக்கும்.

4,8,9,12,14,18,21,22,26,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம்தேதி மாலை 4.19 மணி முதல் 15-ம்தேதி அதிகாலை 4.13 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.

No comments :

Post a Comment