ரிஷபம்:
மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்சமாக இருக்கின்ற யோக
மாதம் இது. ரிஷபராசிக்காரர்கள் பலருக்கு வருங்கால ஏற்றத்திற்கான மாற்றங்கள்
இந்த மாதம் நடைபெறும். குறிப்பாக இளைஞர்களுக்கு இருக்கின்ற நிலையில் இருந்து
மாறுகின்ற அமைப்பு இப்போது உண்டு. அதேநேரத்தில் வருகின்ற மாற்றத்தை
மட்டும்தான் நீங்கள் வரவேற்க வேண்டுமே தவிர நீங்களாக மாறுதலை தேடிப் போகக்
கூடாது.மாத பிற்பகுதியில் எட்டாமிடத்தில் செவ்வாய், சனி இணைவது மனக் குழப்பங்களை
தரும் அமைப்பு என்பதால் இந்தமாதம் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.
செவ்வாய், சனி இணைந்து எட்டில் மறைவது பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தி
விரயங்களைத் தரும் என்பதால் பாக்கெட்டில் இருந்து காசு எடுக்குமுன் ஒன்றுக்கு
இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள் சிலருக்கு வீடுகட்டுதல், இடம்
வாங்குதல் புதுவாகனம் அமைதல், போன்ற சுபகாரிய செலவுகளும் உண்டு. கண்டிப்பாக
செலவு செய்தே ஆகவேண்டிய விஷயங்களில் மட்டும் கவனத்தை செலுத்தி விரயங்களைத்
தவிர்க்க வேண்டிய மாதம் இது. வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு விருப்பமில்லாத
அமைப்பில் வேலை கிடைக்கும். ஆன்மிகம் சம்மந்தப்பட்ட துறைகளில்
இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும்.
ஏடிஏம்மில் பணம் நிரப்புவது போன்று பெரியஅளவில் பணம் புழங்கும் இடங்களில்
பணிபுரிபவர்கள் பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. பருவ வயது மக்களின்
மேல் ஒரு கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும்
பகைத்து கொள்ள வேண்டாம். சுக்கிரனின் உச்சபலம் நல்ல பலன்களைத் தரும்.
அதிகமுயற்சி இல்லாமலே சில காரியங்கள் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். சிலருக்கு
வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இருக்கும். அரசு,
தனியார்துறை ஊழியர்கள் மேலதிகாரிகளிடம் பணிந்து போவது நல்லது. பெண்களால் லாபம்
இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
5,6,7,10,11,16,18,19,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம்தேதி அதிகாலை
3.27 மணி முதல் 12-ம் தேதி மாலை 4.19 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
நீண்டதூர பிரயணங்கள், புதிய முயற்சிகளை இந்த நாட்களில் தள்ளி வைப்பது நல்லது.
No comments :
Post a Comment