மேஷம்:
மார்ச் மாத பிற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாமிடத்தில் சனியுடன் இணைவது
மேஷராசிக்கு சில திருப்தியற்ற மாற்றங்களை தரும் என்பதால் ஏற்றுக் கொள்ள
முடியாத சில முடிவுகளை நீங்கள் செயல்படுத்த வேண்டிய மாதமாக இது இருக்கும்.
உங்களில் சிலருக்கு பிடிக்காத ஒன்றை சகித்துத்தான் ஆகவேண்டும் என்கின்ற
நிலைமையும் ஏற்படும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் சமரசங்களிலும்,
நிறைவுகளை நீங்கள் பெறுகின்ற மாதம் இது.
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருப்பதும் யோகாதிபதி சூரியன்
குருவின் பார்வையில் உள்ளதும் நன்மை தரும் அமைப்புகள். கடன் தொல்லைகள் எதுவும்
இந்த மாதம் இருக்காது. பணவரவிற்கு காரணமான சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதன்
மூலம் நல்ல பணவரவு இருக்கும். பிரச்னைகளை சமாளிப்பீர்கள். இருவேறு எதிர் கிரக
நிலைகளை கொண்ட மாதம் இது என்பதால் அனைத்திலும் நன்மைகளும் தீமைகளும் கலந்து
நடக்கும். என்ன இருந்தாலும் ராசிநாதன் வலிமையாக இருப்பதால் எதையும்
சமாளித்தும், ஜெயித்தும் காட்டுவீர்கள்.
தொழில்துறையில் இருந்து வந்த தேக்கநிலை மாறும். சிலருக்கு இடமாற்றம்,
வேலைமாற்றம், ஊர் மாற்றம், வீடுமாற்றம் ஆகிய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
எதிர்ப்புகள் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். பொதுவாக மேஷத்தினர்
நேர்மையானவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக, அடுத்தவர்களை வாழ வைப்பவர்களாக
இருப்பீர்கள். இதுவே உங்களுக்கு மிகப் பெரிய கண் திருஷ்டியாக அமையும்.
கணவன்-மனைவி உறவில் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு ஏற்படும். இதுவரை மற்றவரை
புரிந்து கொள்ளாதவர்கள். அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். என்ன
பிரச்னை ஏற்பட்டாலும் அடிப்படை தேவைகள் நிறைவேறி விடும். அரசியல்வாதிகளுக்கு
இது நல்லநேரம். மேலிடத்தின் பார்வையில் உங்களின் உழைப்பு தென்பட்டு பதவிகள்
கிடைக்கும்.
1,3,7,8,10,11,17,18,20,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி மாலை 4.07
முதல் 10-ம்தேதி அதிகாலை 3.27 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர
பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். இந்த நாட்களில்
எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டாக யோசிப்பது நல்லது.
No comments :
Post a Comment