தனுசு:
மாத ஆரம்பத்தில் எட்டு, பனிரெண்டுக்குடைய சந்திரனும், செவ்வாயும் ஆட்சி
பெறுவதால் வரவுக்கு மீறிய செலவுகளால் தனுசு
ராசிக்காரர்கள் திணறி போகும்
மாதமாக இது இருக்கும். வீண் விரையங்களை குறிக்கும் செவ்வாய் பகவான் மாதம்
முழுவதும் வலுப்பெறுவதால் தேவையற்ற விஷயங்களுக்காகவும், உங்களுடைய
சுகங்களுக்காகவும் தனுசு ராசி இளைஞர்கள் செலவுகளை செய்வீர்கள். உங்களில் பூராட
நட்சத்திர காரர்களுக்கு இந்த மாதம் அடிக்கடி பயணங்களோ, அல்லது நீண்ட தூர
பயணங்களோ அமையும்.
இரண்டு, எட்டாமிடத்தில் ராகுகேதுக்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் எவரிடமும்
வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கூடுமான வரையில் சண்டையை தவிர்ப்பது நல்லது.
யாரையாவது நீங்கள் திட்டினால் அது பலித்து பெரிய மனஸ்தாபத்தில் கொண்டு போய்
விட்டுவிடும். உயிர் நண்பர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்களிடம்
சற்றுத் தள்ளியே நில்லுங்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்கு
விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. தேவையற்ற சென்டிமென்டுகளுக்கு இடம்
கொடுக்க வேண்டாம். மாமன், மச்சான் அண்ணன், தம்பி என்றாலும் வாயும், வயிறும்
வேறு என்று புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
பூர்வீக சொத்தை பிரிப்பது போன்ற பாகப்பிரிவினைகள் இப்போது வேண்டாம். சொத்துப்
பிரச்னைகளைத் தள்ளி வைப்பது நல்லது. அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு நல்ல
பலன்கள் இருக்கும். கணவன் மனைவி உறவில் அனுசரித்துப் போனால் குடும்பத்தில்
அமைதி இருக்கும். ராசியில் சனி அமர்ந்து இரண்டில் கேது, சுக்கிரன் இருப்பது
சும்மா இருக்கும் உங்களை யாராவது தூண்டி விட்டு கோபத்தில் வார்த்தைகளை
கொப்பளிக்க வைக்கும் நிலை என்பதால் எவரிடமும் பேசும் முன்பு நிதானத்தையும்,
கவனத்தையும் கடைப்பிடியுங்கள்.
4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம் தேதி இரவு 10.43 முதல்
27-ம் தேதி அதிகாலை 12.31 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள்
எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று
எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் அமைதியைக் கடைப்பிடிப்பது
நல்லது.
No comments :
Post a Comment