மகரம்:
ஆறு, எட்டுக்குடைய சூரியனும், புதனும் ராசியில் இருப்பதால் பிப்ரவரி மாத
முன்பகுதியில் மகர ராசிக்காரர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
எட்டுக்குடையவன் ராசியில் இருப்பதால் எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும்.
செயல்திறன் குறைவுபடும். அதேநேரத்தில் அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை
இருக்கும். இருக்கும் ராகுவுடன் சுக்கிரன் தொடர்பு கொள்வதால் பெண்களால்
மனக்கஷ்டங்களும் குறிப்பாக சிலருக்கு அந்நிய மத வேற்று மத, இன, மொழி இளம்
பெண்களால் மனக்கசப்புகளும், பிரச்சினைகளும் இருக்கும். அடங்கியிருந்த கடன்
பிரச்னைகள் லேசாக எட்டிப் பார்க்கும். அதேநேரத்தில் கடன் உங்களின்
கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும்.
உங்கள் தோளில் கை போட்டபடி டீ சாப்பிடும் நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு
ஆகாதவரின் கையை குலுக்குவார். கவனமாக இருங்கள். தேவையற்ற செலவு இருக்கும்.
மறைமுக எதிர்ப்புக்கள் மேலோங்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம். கணவன்,
மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரும். மூன்றாம் மனிதரின்
கோள்மூட்டலை நம்பி ஒருவருக்கொருவர் மனச்சங்கடத்திலும் இருப்பீர்கள். ராசி
வலுவாக இருப்பதால் அந்தஸ்து கௌரவம் கூடும்படியான செயல்கள் இருக்கும்.
பொதுஇடத்தில் மதிப்பும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். என்னதான் பிரச்னை
என்றாலும் ராசியில் சுக்கிரனும் புதனும் இருப்பதால் அனைத்தும் சூரியனைக் கண்ட
பனிபோல மறைந்து எல்லாவற்றையும் தனி ஆளாக நீங்கள் ஒருவரே சமாளிப்பீர்கள் என்பது
உறுதி.
1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி அதிகாலை 12.31
முதல் மார்ச் 1-ம் தேதி அதிகாலை 1.44 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த
நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய
முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment