சிம்மம்:
ராசிநாதன் சூரியன் வலுவான அமைப்பில் மாதம் முழுவதும் நட்பு வீடுகளில்
இருப்பதாலும் இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் ராகுகேதுப் பெயர்ச்சி
மூலம் ராசியில் இருக்கும் இருள் கிரகம் விலகுவதாலும், சிம்ம ராசிக்கு கடந்த
காலங்களில் இருந்து வரும் நிச்சயமற்ற வேலை அமைப்புகளும், லாபங்களைத் தராத
தொழில் அமைப்புகளும் மாறி நல்லவிதமான பணவரவும் லாபங்களும் இனிமேல் கிடைக்கத்
துவங்கும் என்பது உறுதி.
பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் இந்த மாதம் உங்களுடைய தொழில், வேலை,
வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் மிகச்சிறப்பாக நடைபெறும். குறிப்பாக
அரசுப்பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல்
எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் மிகுந்த நன்மைகளைப்
பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச்
செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். கணவன், மனைவி
உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள்
நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் பயணம்
அமையும்.
உங்களில் சிலருக்கு தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். வெளிமாநிலங்களுக்குச்
செல்வீர்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் எதுவும் வராது. வீட்டிலும்
சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதி இருக்கும். குருவின் வலுவால் வீட்டில் பொன்
பொருள் சேர்க்கை உண்டாகும்..செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வரும்
வருமானத்தை நல்ல விதமாக செலவு செய்வது புத்திசாலித்தனம். எனவே வருமானத்தை
முதலீடாக்குவது நல்லது. குருபகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் ஆசிரியர்கள்,
வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர்
போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள்
நடைபெற ஆரம்பங்கள் இந்த மாதம் உண்டு.. பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல
செய்திகள் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள்.
1,2,7,8,9,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம்தேதி மாலை 6.34 மணி
முதல் 17-ம்தேதி அதிகாலை 12.24 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண்
வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய
முயற்சிகளும் வேண்டாம்.
No comments :
Post a Comment