கடகம் :
மாதத்தின் துவக்க நாளிலேயே ராசிநாதன் சந்திரன் குருவுடன் இணைந்து சுபத்துவமாக
இருப்பதால் ஜூலைமாதம் கடகராசிக்கு சிறப்புகளைச் சேர்க்கும் மாதம்தான். அதேபோல
குருவின் பார்வை படும் பாக்கியஸ்தானத்தின் பலத்தினால் வருமானத்திற்கும்
இந்தமாதம் எந்தக்குறையும் இருக்காது. பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால்
இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தேவையற்ற விவகாரங்களில்
மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்று கிரக
நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு
இரண்டு முறை யோசியுங்கள்.
கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன்
இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய
தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு
இருக்காது. இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் மாதம்
இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல்
விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த
மாதம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில்
இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு
கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி
போவீர்கள்.
ஏழாமிடத்தை இரண்டு பாபகிரகங்கள் பார்ப்பதால் கணவன், மனைவி உறவுகள் பெரிதாக
சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள்
பெரிதாகாமல் தடுக்கலாம். பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம்.
எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய்
முன்னே நிற்பதோ கூடவே கூடாது. கடக ராசிக்காரர்கள் ஒருமுறை ராகுபகவான் பரிகார
ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற
புனிதத்தலங்களுக்கு சென்று ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
5,6,8,10,14,15,16,20,21,28 ஆகிய நாட்களில் பணம் வரும் 12-ந்தேதி காலை 10.03
மணி முதல் 14-ந்தேதி மாலை 6.34 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட
தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment