ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் இருப்பதும், ராசியின் நண்பர்களான சனியும்,
புதனும் ஒருவருக்கொருவர் கேந்திர, கோணங்களில் இருப்பதும் ரிஷபராசிக்கு நல்ல
அமைப்புகள் என்பதால் மே மாதம் ரிஷபத்திற்கு மாற்றங்களை தருகின்ற ஒரு மாதமாக
இருக்கும். இளைஞர்களுக்கும் நடுத்தர வயதுகளில் இருப்பவர்களுக்கும் இதுவரை
இருந்து வந்த வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் மாற்றங்கள் உருவாகும் மாதம்
இது.
திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற மனக்குறையுடன் இருப்பவர்கள்,
விருப்பமில்லாமல் ஒரு தொழிலை செய்து கொண்டிருப்பவர்கள் போன்ற ரிஷப
ராசிக்காரர்களுக்கு அவர்களின் இஷ்டம் போலவே மாற்றங்கள் கிடைக்கின்ற மாதம் இது.
சிலர் வேலை விஷயமாக பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வெகு தூரம் போக வேண்டி
இருக்கும். இந்த மாதம் சிலருக்கு வடக்கு திசை நோக்கிய பயணங்களும் அது
சம்பந்தமான லாபங்களும் இருக்கும். புத்திர ஸ்தானாதிபதி புதன் பலவீனமாவதால்
பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனக்குறை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
பருவவயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் ஒரு கண் வையுங்கள்.
குடும்ப ஸ்தானம் வலுப் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவையான
பொருள் ஏதாவது வாங்குவீர்கள். இளையபருவத்தினருக்கு புதிய நட்புகள் கிடைக்கும்.
ஒரு சிலர் எதிர்கால வாழ்க்கைத்துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். பெண்கள்
விஷயத்தில் சற்றுக் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மேலதிகாரியாக
பெண்கள் இருந்தால் அவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது. இல்லையெனில் கருத்து
வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகும்.
உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். குடும்பத்தில் பாகப்பிரிவினை
அல்லது பூர்வீக சொத்து பிரச்சனை சம்பந்தமாக ஏதேனும் பேச்சுவார்த்தை இருந்தால்
அதைக் கொஞ்சநாள் தள்ளி வையுங்கள்.
2,5,11,13,15,17,18,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 13 ம் தேதி இரவு
11.11 மணி முதல் 16 ம் தேதி காலை 11.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ
சண்டையோ செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment