மிதுனம்:
ராசிநாதன் புதன் இதுவரை இருந்து வந்த நீசம் எனும் வலுக் குறைவான நிலையில்
இருந்து விலகி, லாபஸ்தானத்தில் லாபாதியுடன் இருக்கும் மாதம் இது. புதனுடன்
இருப்பவர் ராசியின் எதிரி வீடான ஆறாமிடத்திற்கும் அதிபதி என்பதால் இந்த மாதம்
உங்களுக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து பண வரவு இருக்கும். சிலருக்கு
குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு பலனாக பணத்தின் காரணமாக பிரிந்த ஒரு உறவோ
அல்லது நட்போ மனம் மாறி மீண்டும் உங்களிடம் இணையும் நிகழ்வுகள் மிதுனராசிக்கு
இருக்கும். கொடுத்து வாங்குவதில் சிக்கல்கள் தோன்றி பணத்தையும், நட்பையும்
இழந்து ஏண்டா பணம் கொடுத்தோம் என்று யோசிக்கும் அளவிற்கு சம்பவங்கள்
நடந்தவர்களுக்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் மாதம் இது.
ராசியின் மூன்று கேந்திரங்களிலும் நான்கு, ஏழு, பத்தில் கிரகங்கள் இருப்பது
ஒரு வகையான யோகம் என்பதால் இந்த மாதம் எது நடந்தாலும் மன தைரியத்துடன்
அனைத்தையும் சமாளிப்பீர்கள். சுக்கிரன் உச்சமாக இருப்பதால் பிள்ளைகள்
விஷயத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நீண்டநாள்
நினைத்திருந்த ஒரு காரியம் உங்களுக்கு சாதகமாக நடைபெறும். கலைஞர்கள்,
அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், விவசாயிகள், தனியார் துறையினர், தொழில்
அதிபர்கள் போன்ற அனைவருக்கும் இந்த மாதம் நல்ல மாதமாகவே அமையும். புதன்
வலுவுடன் இருப்பதால் நல்ல பலன்கள் நடக்கும். மாத பிற்பகுதியில் அதிர்ஷ்டம் கை
கொடுக்கும்.
பணம் வரும் நேரங்களில் சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா?
கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது
நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து
சேமிக்கும் அளவிற்கு இருக்காது. புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மனம்
சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும்
நிதானமாக செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள்
இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.
1,2,3,4,6,15,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 16 ம் தேதி காலை
11.35 மணி முதல் 18 ம் தேதி இரவு 10.12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ
சண்டையோ செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment