கன்னி:
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் மறைவு பெற்ற நிலையில் சனி
பார்வையுடன் அமர்வதால் இந்த மாத தொடக்கத்தில் கன்னி ராசிக்காரர்கள் எதையும்
சற்று சங்கடமாக எதிர்கொள்ளும் மாதமாக இது இருக்கும். அதேநேரத்தில் பிற்பகுதி
மாதத்தில் ராசிநாதன் புதன் நீச நிலை பெற்றாலும் குருவின் பார்வையில்
இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடுத்தவரின் உதவி இன்றி உங்களின்
காரியங்களை நீங்களே வெற்றி கொள்ளும் மாதமாகவும் இது இருக்கும்.
ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு
திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். விளையாட்டு துறையினர்,
கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு
முனையாக அமையும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் கை
கூடும் நேரம். அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற
விரோதங்கள் வரலாம்.
இன்னொரு பலனாக மாதம் முழுவதும் பனிரெண்டாம் இடம் வலுப்பெற்று சுபத்துவமும்
அடைவதால் செலவுகள் இருக்கும் மாதமாக மார்ச் மாதம் அமையும். அதேநேரத்தில் செலவு
செய்வதற்கு தேவையான பணவரவும் வருமானங்களும் நிச்சயமாக கிடைக்கும். எவ்வளவு
பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன
அமைப்புகள் பாதிக்கப்படாது. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும்.
குலதெய்வ தரிசனம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும்.
நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு.
1,2,8,9,10,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம்
தேதி அதிகாலை 3 மணி முதல் 4-ம் தேதி காலை 6 மணி வரையும் மாத இறுதியில் 29-ம்
தேதி மதியம் 12 மணி முதல் 31-ம் தேதி மதியம் 1 மணி வரையும் சந்திராஷ்டம
நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.
புதிய முயற்சிகளும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment