மகரம்:
இந்த மாதம் மகர ராசிக்கு எதிர்ப்புக்களை உருவாக்கி உங்களை குழப்பத்தில்
ஆழ்த்துகின்ற மாதமாக இருக்கும். சிலருக்கு பொருளாதார நெருக்கடியை தந்து கடன்
வாங்க வேண்டிய சூழலையும் உருவாக்கலாம். யாரிடமும் கடுமையான வாக்குவாதமோ,
கருத்து மோதல்களிலோ ஈடுபட வேண்டாம். அதேநேரத்தில் ராசி வலுவாக இருப்பதால்
அந்தஸ்து கௌரவம் கூடும்படியான செயல்கள் இருக்கும். பொதுஇடத்தில் மதிப்பும்,
பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.
சாதகமற்ற நிலைகள் இந்த மாதம் இருப்பது போல தோன்றினாலும் எதிர்ப்புகளை
குறிக்கும் கிரக அமைப்புகள் வலுவிழப்பதால் உங்களுடைய உடல், மனம் இரண்டும்
புத்துணர்ச்சியுடன் உற்சாகத்துடன் இருக்கும். எட்டுக்குடையவன் ராசியில்
இருப்பது நல்லதல்ல என்றாலும் குருவின் பார்வை அவருக்கு இருப்பதால் துளியும்
உங்களுக்கு கெடுபலன்கள் எதுவும் இல்லை. பணிபுரியும் இடங்களில் பிரச்சனைகள்
எதுவும் வராது. காவல்துறை போன்ற யூனிபாரம் அணிந்து வேலை செய்பவர்களுக்கு
அலைச்சல்கள் உண்டாகும்.
இரண்டாமிடத்தில் ராகுகேதுக்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் எவரிடமும் வாக்கு
வாதத்தில் ஈடுபட வேண்டாம். கூடுமான வரையில் சண்டையை தவிர்ப்பது நல்லது.
யாரையாவது நீங்கள் திட்டினால் அது பலித்து பெரிய மனஸ்தாபத்தில் கொண்டு போய்
விட்டுவிடும். உயிர் நண்பர்கள் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர்களிடம்
சற்றுத் தள்ளியே நில்லுங்கள். அரசியல்வாதிகள் பேசும் போது கவனம் தேவை. அரசு,
தனியார்துறை ஊழியர்களுக்கு நல்லபலன்கள் இருக்கும். கணவன் மனைவி உறவு
சிறப்பாகவே இருக்கும். அனுசரித்துப் போனால் குடும்பத்தில் அமைதி இருக்கும்.
5,6,7,8,10,16,17,18,22,23,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம் தேதி காலை 9
மணி முதல் 13-ம் தேதி மதியம் 3 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த
நாட்களில் எதிலும் கவனத்துடனும் நிதானத்துடனும் இருக்க வேண்டியது அவசியம்.
வாழ்க்கையை பாதிக்கும் எவ்வித முடிவுகளையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment