துலாம்:
மாத ஆரம்பத்தில் பலமான கிரக நிலைகள் துலாம் ராசிக்கு ஏற்படுவதால் உங்களுடைய
அனைத்து முயற்சிகளும் இந்த மாதம் வெற்றி பெறுதலும், அலுவலகங்களில் சுமுகமாக
சூழ்நிலை இருத்தலுமான நல்ல நிகழ்வுகள் நடக்கும். ராசியும் ராசினாதனும்
வலுவுடன் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் நல்ல வருமானத்துடன்
எந்தவித பாதிப்பும் இன்றி சுமுகமாகவே நடக்கும். ஆறுக்குடைய குரு பனிரெண்டில்
இருப்பதால் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். கடன் வாங்க வேண்டிய
சூழல்கள் உருவாகலாம்.
துலாமிற்கு ஏழரைச்சனி முடியப் போவதால் சிக்கல்கள் எதுவும் இனிமேல் வரப்
போவதில்லை. வாழ்க்கைத்துணை மூலம் நன்மைகள் இருக்கும். மேலதிகாரிகள்
தொந்தரவுகள் இனிமேல் இருக்காது. வேலைப்பளு கம்மியாக இருக்கும். விவசாயிகள்
விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். பணவரவிற்கு குறையில்லை.
தேவைப்படும் உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள்
கணக்கு வழக்கு விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. தேவையற்ற
சென்டிமென்டுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். மாமன், மச்சான் அண்ணன், தம்பி
என்றாலும் வாயும், வயிறும் வேறு என்று புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
தந்தை வழி உறவினர்களால் சிறு பிரச்சினைகள் வரும். பங்காளித் தகராறு உண்டு.
பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்களில் கவனமாக இருங்கள். தந்தையின் சொத்தை
பிரிப்பது போன்ற பாகப்பிரிவினைகள் இப்போது வேண்டாம். கூடுமானவரை சொத்துப்
பிரச்னைகளைத் தள்ளி வைப்பது நல்லது. எந்த வழக்கும், வம்பும் இனிமேல் உங்களை
ஒன்றும் செய்ய முடியாது. அலுவலகத்தில் பெண்கள் உதவுவார்கள்.
3,4,10,11,12,13,19,20,21,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி அதிகாலை
1 மணி முதல் 7-ம் தேதி அதிகாலை 3 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த
நாட்களில் நீண்ட தூர பிரயாணங்கள் எதையும் செய்ய வேண்டாம். யாருக்கும் எதுவும்
செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்ற முடியாது.
No comments :
Post a Comment