Wednesday, February 1, 2017

கன்னி: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்

கன்னி:

ராசியில் குரு அமர்ந்து ஏழில் இருக்கும் செவ்வாயின் பார்வையைப் பெறுவது சும்மா இருக்கும் உங்களை யாராவது தூண்டி விட்டு கோபத்தில் வார்த்தைகளை கொப்பளிக்க வைக்கும் நிலை என்பதால் இந்தமாதம் எவரிடமும் பேசும் முன்பு நிதானத்தையும், கவனத்தையும் கடைப்பிடியுங்கள். புத்திர விஷயத்தில் நல்ல செய்திகள் இருக்கும். தெய்வதரிசனம் கிடைக்கும். ராசியோடு செவ்வாய் தொடர்பு கொள்வதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள்.

கன்னி ராசிக்கு கெடுதல்கள் எதுவும் இன்றி அனைத்து விஷயங்களும் உங்கள் கையை மீறிப் போகாமல் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மாதமாக இது இருக்கும். ஐந்தாமிடம் வலுப் பெறுவதால் பிள்ளைகள் உங்களுக்கு பெருமை தேடித் தருவார்கள். பிள்ளைகளுக்குரிய கடமைகளை நீங்கள் சரியாக செய்ய முடியும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம்.

அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு இது வசந்த காலம். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. பழைய கடனை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். மறைமுகமான எதிரிகள் உருவாகும் காலம் இது. வியாபாரிகள் மேன்மை அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு நல்ல முன்னேற்றமான திருப்பங்கள் நடக்கும். குறிப்பாக பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்களுக்கு அவர்கள் மூலம் நன்மை உண்டு.

1,2,3,5,8,11,14,15,16,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி இரவு 9 மணி முதல் 5-ம் தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்வது பலன் தராது.

No comments :

Post a Comment