ரிஷபம்:
வருடம் ஒருமுறை அமையக்கூடிய ராசிநாதன் சுக்கிரனின் உச்சவலு இந்த மாதம்
முழுவதும் அமைவதால் ரிஷபத்தினரின் மேன்மை மிகுந்த மாதமாக இது இருக்கும்.
இன்னும் ஒரு போனசாக ராசிக்கும் ராசினாதனுக்கும் இப்போது குருவின் பார்வை
கிடைப்பதால் நீங்கள் தொட்டது துலங்கும் மாதம் இது. அறிவால் எதையும்
சாதிப்பீர்கள். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
எந்த ஒரு காரியத்தையும் சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். அந்தஸ்து
கௌரவம் உயர்வான நிலையில் இருக்கும். சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின்
அறிமுகமும் நட்பும் கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் மதகுருக்களின் நேரடி ஆசிகள்
கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு உண்டு. வெளிநாட்டில்
இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை அமைவதற்கான
ஆரம்பங்கள் இந்த மாதம் இருக்கும். இதுவரை தாமதமாகி வந்த அனைத்து விஷயங்களும்
தடைகள் நீங்கி உங்களின் மனம் போல் நடக்கும். இளையபருவத்தினருக்கு திருமணம்
நிச்சயம் ஆகும். தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் உண்டு. தொழில்
சிறப்படையும். வியாபாரம் விருத்தியாகும். வேலை செய்யும் இடத்தில் புகழ்
பெறுவீர்கள்.
குருவும், செவ்வாயும் பார்த்துக் கொள்வது தொழில் ஸ்தானத்தை வலுப்படுத்தும்
நல்ல அமைப்பு என்பதால் ஜீவன விஷயங்களில் ரிஷப ராசிக்கு மாற்றங்கள் உள்ள மாதமாக
இது அமையும். அதிலும் மஞ்சள்நிற தொழில், வட்டிக்கு விடுதல் பணம் அதிகம்
புரளும் இடங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். பூர்வீக
சொத்து சம்பந்தமாக இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும். குறிப்பிட்ட சிலருக்கு
வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
குடும்பத்தில் சுபகாரியம் உண்டு.
1,3,7,8,10,11,13,14,15,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம் தேதி அதிகாலை 1
மணி முதல் 23-ம் தேதி பகல் 12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த
நாட்களில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில்
இல்லாது இருக்கும் என்பதால் எதிலும் தயக்கத்துடன் இருப்பீர்கள்.
No comments :
Post a Comment