கும்பம்:
கும்பநாதன் சனிபகவான் இன்னொரு பாவரான செவ்வாயுடன் மிகவும் நெருங்கி இருந்த நிலை இந்த மாதத்துடன் முடிவடைந்து உங்கள் ராசிநாதன் சுயத்தன்மை அடைகிறார். ஒருவகையில்
இது கும்பத்திற்கு நன்மை தரும் நிலைதான். அதே நேரத்தில் குருபகவான் எட்டாமிடத்தில் மறைந்தது உங்களுக்கு இப்போது எல்லாவிதத்திலும் மாற்றங்கள் இருக்கும் என்பதை
காட்டுகிறது.
யோகாதிபதிகள் புதனும் சுக்கிரனும் எட்டில் மறைவதும் சுக்கிரன் நீசமாவதும் இந்தமாதம் சின்ன விஷயத்திற்கு கூட நீங்கள் எரிச்சல் அடைவதற்கோ, தேவையற்ற விஷயங்களில்
தலையிட்டு உங்கள் பெயரை கெடுத்து கொள்வதற்கோ வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். கும்பத்திற்கு இப்போது வீடு, குடும்பம், வேலை,
தொழில் போன்ற விஷயங்களில் தவிர்க்க முடியாத மாறுதல்கள் இருக்கும். அந்த மாறுதல்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லவையாக அமையும் என்பதால் வருகின்ற மாறுதல்களை ஏற்று
கொண்டு அதன்படி நடப்பது நல்லது.
எட்டில் ஒரு நீசக்கிரகம் இருந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு சற்று அப்படி இப்படித்தான் இருக்கும். எதிலும் ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல விஷயங்கள்தான் நடக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போவதற்கோ, சம்பளம் தாமதம்
ஆவதற்கோ வாய்ப்புக்கள் இருப்பதால் அனாவசிய செலவுகள் செய்யாமல் சிக்கனமாக இருப்பது நல்லது. ராசியில் இருக்கும் கேது மனதில் சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும்
அனைத்துப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவீர்கள்.
5,6,7,11,12,13,19,20,22,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ந்தேதி மாலை 7 மணி முதல் 5-ந்தேதி காலை 6 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவுடன்
இணைந்திருப்பதால் பெரிய சங்கடங்கள் எதுவும் இருக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் ஆரம்பங்களை இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.
No comments :
Post a Comment