விருச்சிகம்:
ராசிநாதன் செவ்வாய் இந்தமாதத்தில் இருந்து ராசியில் இருக்கும் சனியிடமிருந்து விலகுவது அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும் கவசம் என்பதால்
செப்டெம்பர் மாதத்தில் இருந்து விருச்சிகத்தினர் சற்று நிம்மதியாக உணருவீர்கள். ராசிக்கு எந்தவித சுபர் சம்பந்தமும் இல்லாமல் ஏழரைச்சனி உங்களை வாட்டி எடுத்துக்
கொண்டு இருக்கிறது இந்தமாதம் குருபகவானும் நீசச்சுக்கிரனுடன் இணைந்து உங்களுக்கு நன்மை செய்யும் தகுதி இழக்கிறார்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சோதனைகள் முடிந்து விட்ட காலம் இது. ஒரு போதும் மனதைத் தளர விடவேண்டாம். அடுத்தவருடம் முதல் ஏழரைச்சனி தொந்தரவுகள் உங்களுக்கு
கடுமையாக இருக்காது. இந்தவருடத்தோடு உங்கள் பிரச்னைகள் அத்தனையும் ஒழியும் என்பது உறுதி. பத்தில் இருக்கும் ராகு அங்கே ஆட்சி பெறும் ஜீவனாதிபதி சூரியனால்
சுபத்தன்மை அடைவதால் தொழில் மூலம் இந்தமாதம் நல்ல வருமானங்களை அளிப்பார். எனவே எவ்வளவு பிரச்னை இருந்தாலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. செலவுக்கேற்ற பணவரவு
இருக்கும்.
பொருளாதார நிலைமை கெடாது. பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் துணிவு வரும். இளையபருவத்தினர் இந்த
ஏழரைச்சனி காலத்தில்தான் அனைத்துக் கஷ்டங்களையும் அனுபவிப்பீர்கள் என்பதால் காதல், கீதல் என்று உங்கள் சக்தியை விரயம் செய்யாமல் படிப்பிலும், வேலையிலும் கவனத்தை
செலுத்தினால் வானம் உங்கள் வசப்படும். சனிக்குப் பரிகாரமாக பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும்,
வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபடுவதும் நன்மைகளை தரும்.
3,5,7,8,9,12,13,14,15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ந்தேதி அதிகாலை 4 மணி முதல் 25-ந்தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில்
கவனமாக இருப்பது நல்லது. எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சண்டை வந்தாலும் ஒதுங்கி போவது நல்லது.
No comments :
Post a Comment