ஜூலை மாத முற்பகுதியில் கன்னி நாதன் புதன் ஆட்சிபெற்ற நிலையில் தனது நண்பர்களான சூரியன் மற்றும் சுக்கிரனுடன் வலுவான நிலையில் இருப்பதால் கன்னி
ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் நன்மைகளை தரும் மாதமாகத்தான் இருக்கும். பனிரெண்டாமிடத்து அதிபதியுடன் ராசிநாதன் பத்தாமிடத்தில் இருப்பதால் குறிப்பிட்ட சில கன்னி
ராசிக்காரர்களுக்கு தூர தேசங்களில் இருந்தும் தொலைவான இடங்களில் இருந்தும் நல்ல தகவல்களும், தொடர்புகளும் ஏற்படும்.
வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக
இருக்கும். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும் உங்களை இதுவரை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதமாகவும் இது
இருக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி
கொள்வது நல்லது.
குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக
வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். எட்டாமிடம் வலுப்பெறுவதால் இப்போது புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது
நல்லது. மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள். இரண்டுக்குடையவன் வலுத்து தனயோகம்
ஏற்படுவதால் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது.
1,4,12,13,14,20,22,23,26,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம்தேதி மதியம் 12 மணி முதல் 28-ம்தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர
பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment