துலாநாதன் சுக்கிரன் மாத ஆரம்பத்தில் ஒன்பதாமிடத்திலும் மாத பிற்பகுதியில் பத்தாமிடத்திலும் நல்ல நிலைமைகளில் இருப்பதால் இந்த மாதம் துலாம் ராசிக்கு துன்பங்கள்
எதையும் சொல்வதற்கு இல்லை. மாத ஆரம்பத்தில் பாக்கியாதிபதி புத பகவான் ஒன்பதாமிடத்தில் ஆட்சி பெறுவதால் இதுவரை தடைபட்டிருக்கும் பாக்கியங்கள் அனைத்தும்
உங்களுக்குக் கிடைக்கும் என்பதால் நீண்ட நாட்களாக திருமணம், வேலை கிடைத்தல், புத்திர பாக்கியம் போன்றவைகள் தாமதப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு இப்போது அனைத்தும்
கிடைப்பதற்கான நல்ல சூழ்நிலைகள் உண்டு.
நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்தமாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு
தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல்துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும்.
மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு நல்லபலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின்
எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள்.
துலாம்ராசிக்கு அந்தஸ்து, மதிப்பு கிடைக்கும் நிலையும் தாராளமான பணவரவு உள்ள மாதமாகவும் இது அமையும். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள்
இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற
துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும்
பகைத்துக் கொள்ள வேண்டாம்.
1,5,6,8,17,18,24,25,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 1-ம்தேதி காலை 8 மணி முதல் 3-ம்தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய விஷயங்கள்
எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு பேசுவதும் இந்த நாட்களில் கூடாது.
No comments :
Post a Comment