துலாம்:
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்ப்பது நன்மைகளைத் தரக்கூடிய நிலை என்பதோடு பிற்பகுதியில் சுக்கிரன் ஆட்சிபலம் பெறுவது இந்த மாதம் முழுவதும்
துலாம் ராசிக்கு நிம்மதி தரும் அமைப்பு என்பதால் மே மாதம் எல்லாவித மேன்மைகளையும் உங்களுக்கு தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதே நேரத்தில் இன்னொரு
நல்லபலனாக ராகுவும் லாபஸ்தானத்தில் இருப்பதால் சிக்கல்கள் எதுவும் இல்லாத மாதமும் கூட இது.
பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நீண்டநாள் நினைத்திருந்த ஒரு காரியம் உங்களுக்கு சாதகமாக நடைபெறும். கலைஞர்கள்,
அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவசாயிகள், தனியார் துறையினர், தொழில் அதிபர்கள் போன்ற அனைவருக்கும் இந்த மாதம் நல்ல மாதமாகவே அமையும். புதன் வலுவுடன்
இருப்பதால் நல்ல பலன்கள் நடக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் எட்டில் மறைந்தாலும் அவர் ஆட்சியாவதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.
பணம் வரும் நேரங்களில் சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும்,
அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. இந்த மாதம் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. ராசிநாதனை
இரண்டில் இருக்கும் பாபக்கிரகங்கள் பார்ப்பதால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.
1,2,3,4,6,15,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 7ம் தேதி மதியம் 1 மணி முதல் 9ம் தேதி மதியம் 1மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ
நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
No comments :
Post a Comment