Wednesday, August 13, 2014

உங்கள் குழந்தை டாக்டரா? இன்ஜினீயரா?

இன்றைய நவீன உலகில் தங்களது குழந்தை என்னவிதமான படிப்பு படித்து பிற்காலத்தில் எந்தத் துறையில் இருக்கப்  போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படாத பெற்றோர்களே இல்லை என்று சொல்லலாம்.

அதிலும் சில வருடங்களுக்கு முன் எட்டிப் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்த இன்ஜினீயரிங் மற்றும் மருத்துவப் படிப்புக்கள் இப்போது கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதால் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் டாக்டருக்கோ  இன்ஜினீயருக்கோ படிக்க வேண்டும் என்று நினைப்பதும் இயல்பான விஷயம்தான்.


ஒரு குழந்தை டாக்டராகவோ? இன்ஜினீயராகவோ பணிபுரிய வேண்டும் எனில் ஜாதகப்படி அதற்கு என்ன அமைப்பு இருக்க வேண்டும்? பூமியில் பிறந்த அனைவருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்கின்றதா?இது பற்றி வேதஜோதிடம் என்ன சொல்லுகிறது?

முதலில் ஒருவர் கல்வியில் சிறப்பான நிலை பெற வேண்டுமென்றால் அவருக்கு நிபுணன் என்றும் வித்தைக்கு அதிபதி என்றும் நமது ஜோதிட நூல்கள் புகழ்ந்து கூறும் புதபகவானின் அருள் வேண்டும். ஜாதகத்தில் புதன் வலுவான நிலையைப் பெற்றிருக்க வேண்டும். புதன் பலம்பெற்று இருந்தால்தான் ஒருவருக்கு தடையற்ற பள்ளிக்கல்வியும் அதன் பிறகு உயர்கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

அதேபோல அவருடைய ஜாதகத்தில் கல்விஸ்தானம் என்று சொல்லப்படும் நான்காம் வீடும், அதன் அதிபதி கிரகமும் பலம் பெற்றும், இந்தக் கல்வியால் கிடைக்கும் பாக்கியங்களை அனுபவிக்க பாக்யஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீடும்,அதன் அதிபதியும் வலுப்பெற்று இருக்க வேண்டும்.

ஜாதகத்தில் புதபகவான் மிதுனம், கன்னி ராசிகளில் ஆட்சி உச்சம் பெற்றும்,  மீனத்தில் முறையான நீசபங்கம் பெற்றும் அமையப் பெற்றவர்கள் மிகப்பெரிய புத்திசாலிகளாக இருப்பார்கள். இது போன்ற அமைப்புள்ள குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.

வகுப்பில் முதல் மார்க் எடுப்பதும், மாநில அளவில் சாதனைகள் புரிவதும் புதன் வலுப்பெற்ற குழந்தைகள்தான். அதேபோல ஜாதகத்தில் புதன் வர்க்கோத்தமம், அம்சத்தில் ஆட்சி உச்சம் என பலம் பெற்ற குழந்தைகள் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிறவி மேதைகளாகவும் இருப்பார்கள்.

இது போன்ற குழந்தைகள் வளரும் காலங்களில் பெற்றோர்கள் அவர்கள் எந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை சரியாகக் கணித்து அந்தக் குழந்தைகளின் போக்கிலேயே அவர்களை வளர்த்தால் அந்தத் துறையில் சாதனை புரிந்து பிரபலமாவார்கள் என்பது உறுதி.

அடுத்து ஒருவர் மருத்துவராக வேண்டும் எனில் அவருடைய ஜாதகத்தில் சிகப்புநிறப் பொருட்களான இரத்தம் போன்றவைகளுக்கு காரகனான செவ்வாய் சுபவலு அல்லது எனது தியரிப்படி சூட்சுமவலு அடைந்திருக்க வேண்டும்.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சூட்சும வலுப்பெற்று இருந்தால்தான் அவர் இரத்தத்தைக் கண்டு பயப்படாத நிலையையும், ஆயுதங்களைஉயிர் காக்கும் விஷயங்களுக்காக கையாளும் அமைப்பையும் பெறுவார். அதாவது அறுவை சிகிச்சை நிபுணர் எனும் தகுதி பெறுவார்.

(செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் நேர்வலு மட்டும் பெற்றிருந்தால் ஆயுதங்களைக் கொண்டு உயிரை அழிக்கும் கொடிய செயல்களைச் செய்வார்.)

ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் என்று சொல்லப்படும்பத்தாம் வீடே ஒருவர் என்ன துறையில் வேலை அல்லது தொழில் செய்வார் என்பதைக் குறிப்பிடுகிறது. அடுத்து ஆறாம் வீட்டையும் அதன் அதிபதியின் நிலையையும் கவனிக்க வேண்டும்.

இந்தத் தொழில்பாவமான பத்தாம் வீட்டோடு செவ்வாயும், குருபகவானும் முதல்தரத் தொடர்பும், சூரியன் இரண்டாம்தரத் தொடர்பும் கொண்டிருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் மருத்துவத்துறையில் இருப்பார் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம்.

இதில் தொடர்பு என்பது குரு செவ்வாய் சூரியன் ஆகிய மூவரில் ஒருவர் லக்னத்திற்கோ ராசிக்கோ பத்தாம் வீட்டு அதிபதியாக இருப்பது, இவர்கள் மூவரும் பத்தாம் வீட்டில் இருப்பது, பத்தாம் வீட்டைப் பார்ப்பது அல்லது ஜீவனாதிபதியோடு சம்பந்தம் பெறுவது போன்ற இன்னும் சில ஜோதிட நுணுக்கங்களைக் குறிக்கிறது.

குருபகவான் எந்த ஒரு வேலையையும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் மதியூகத்துடனும் செய்ய வைப்பவர். மேலும் எடுத்துக் கொண்ட துறையில் ஒருவரை புகழ் பெற வைப்பவரும் குருதான். எனவே ஒருவர் புகழ் பெற்ற டாக்டராக வேண்டுமெனில் குருபகவான் அவரது ஜாதகத்தில் நிச்சயம் பலம் பெற்று இருக்க வேண்டும்.

அடுத்து செவ்வாய் குருவுடன் தொடர்பு கொள்ளாமல் சனியுடன் பத்தாம் வீட்டோடு தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவர் பொறியியல் படிப்பான இஞ்சினியரிங் படிப்பார்.

இந்த அமைப்பில் செவ்வாயின் பலம் அதிகமானால் சிவில் இஞ்சினியரிங் எனப்படும் கட்டிடம் கட்டும் துறையிலும், சனிபலம் அதிகம் பெற்று செவ்வாயின் வலு குறையுமானால் வேறுவகையான இஞ்சினியரிங் துறையிலும் படிப்பு அமையும்.

ஒருவர் சிவில் இன்ஜினியர் என்று சொல்லப்படும் கட்டிடப் பொறியாளர் ஆவதற்கும் செவ்வாயின் தயவுதான் வேண்டும். ஏனெனில், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் சொன்னபடி சிகப்புநிறப் பொருட்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளவை என்பதால் கட்டுமானத்துறையின் மூலப்பொருளான செங்கலைக் குறிப்பவரும் செவ்வாய்தான்.

அதோடு உயரமான இடங்களில் பணியாற்றுதல், மலையேறுதல் போன்றவைகளுக்கும் செவ்வாய்தான் காரணமானவர். செவ்வாய் வலுப்பெற்ற ஒருவருக்கு உயரமான இடங்களில் வேலை செய்வதற்கு தயக்கம் இருக்காது. உயரமான இடத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கும் பயம் இருக்காது. எனவே இப்போதைய பலமாடிக் கட்டங்களைக் கட்டுவதற்கான சிவில் இன்ஜினியர்களை உருவாக்குபவர் முற்றிலும்  செவ்வாய்தான்.

அதேநேரத்தில் காலிமனைகளுக்கும், இரும்புப் பொருட்களுக்கும் சனிபகவான் காரணமானவர் என்பதால் பத்தாமிடத்தோடு சனியும் தொடர்பு கொண்டால்தான் ஒருவர் கட்டிடப் பொறியாளர்  ஆக முடியும்.

பொதுவாக சனிபகவான் நுணுக்கமான மெக்கானிச வேலைகளுக்கு காரணமானவர். சனி சூட்சும வலுப் பெற்றால் ஒருவர் பொறுமையான நிதானமான வேலைகளைச் செய்வார். சனிபலம் பெற்றவர்களால் ஒரு பொருளை அக்கு அக்காக பிரித்து மீண்டும் அதேபோல இணைக்க முடியும்.

சில குழந்தைகள் சிறுவயதிலேயே செல்போன், டேப்ரிக்கார்டர், விசிடிபிளேயர் போன்றவைகளை கழற்றி மாற்றுவதில் ஆர்வத்துடனும் திறமையுடனும் செயல்படுவதைப் பார்த்திருக்கலாம். இத்தகையோர் சனிபலம் பெற்றவர்களே.

சனிபலம் மேலோங்கி செவ்வாயின் பலம் சிறிது குறையும் அமைப்பில் ஒருவர் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் போன்ற படிப்பில் ஆர்வம் காட்டுவார். ஜாதகத்தில் இதுபோன்ற அமைப்புடையவர்கள் கார் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களிலும், மிகப்பெரிய இயந்திரங்கள் உள்ள தொழிற்சாலைகளிலும் வேலை செய்வார்கள்.

அடுத்து இன்னொரு முக்கிய அமைப்பாக மருத்துவம் போன்ற உயர் கல்வி கற்பதற்கு தற்போது இளைஞர்கள் வெளிநாடு செல்வதும் அதிகமாகி வருகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் சர ராசிகள் என்று சொல்லப்படும் மேஷம் கடகம் துலாம் மகரம் ஆகிய வீடுகளில் கிரகங்கள் இருந்து அந்த கிரகங்களின் தசை நடக்கும்போதோ அல்லது  ராகு கேதுக்களின் தசை புக்திநடக்கும் போதோ, எட்டு மற்றும் பனிரெண்டாம் அதிபதிகளின் தசை, புக்தி  நடப்பில் இருக்கும் போதோ ஒருவர் வெளிநாடு செல்வார்.

அதேநேரத்தில் இந்த சர ராசிகளில் இருக்கும் கிரகங்களின் தசை தொடர்ச்சியாக வருமானால் அவர் வெளிநாட்டிலேயே தங்கி அந்த நாட்டின் குடிமகனாக ஆவார்.

அதாவது கடகத்தில்  ராகு, மேஷ குரு, மகர சனி, துலா புதன் என அடுத்தடுத்து வர இருக்கும் தசாநாதர்கள் சரராசிகளிலேயே இருப்பார்களேயானால் அந்த ஜாதகர் நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கி விடுவார்.

மீண்டும் அடுத்த வியாழன் சந்திப்போம்.

8 comments :

  1. நல்ல பதிவு,தங்களது ஒவ்வொறு பதிவும்
    எனக்கு நல்ல படிப்பினையை தருகிறது.எந்த
    ஒரு வித்யாசமான கோணத்தில் எல்லோறும்
    புரிந்து கொள்ளும் வகையில் விளக்குவதில்
    தங்களுக்கு நிகர் தாங்களே,எனக்கு தாங்களே
    ஒரு Rolemodal.

    ReplyDelete
  2. எங்களை போன்ற நண்பர்களின் கேள்விகளுக்கு?
    உங்களை போன்ற ஒரு சில நண்பர்கள் அவ்வப்போது அளிக்கும் பதில்களால்தான்! உங்களை போன்ற ஒரு சில நண்பர்ககே எப்போதும் எல்லோருக்கும் நண்பர்களாக இருந்து வருகிறீர்கள்.

    ReplyDelete
  3. budha is papa graha for kataka langa.if budha got strength what happened.this is not correct view.

    we can interchange planet like mangal or sani, budha or guru, chandra or sukara. surya or raghu.

    ReplyDelete
    Replies
    1. கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் புதனும் சேர்கை பெற்று 6ஆம் இடத்தில் இருந்தால் யோகம் தருமா?

      Delete
  4. it mean that budha and guru give same kind of results.
    sukra and chandra give same kind of results.
    mangal and sani give same kind of results.
    surya and raghu give same kind of results.

    ReplyDelete
  5. அப்ப மருத்துவத்தில் கேது

    ReplyDelete
    Replies
    1. Kethu refer to medicine, Doctor of medicine, related to chemicals.

      Delete