Sunday, August 4, 2013

ஆதித்ய குருஜி பதில்கள் - 7

வாசகர்களின் கேள்விகளுக்கு 

 "ஜோதிட மகாகுரு"
"ஜோதிடக் கலை அரசு"

ஆதித்ய குருஜி
    பதில்கள்

ஜி.தேவேந்திரன்
பழைய காய்கறி கடை வீதி
காரைக்கால் – 609 602

கேள்வி:

என் பேரன் பிறந்தது முதல் சளித்தொல்லை, சைனஸ், தொண்டையில் வீக்கம். இதுவரை ஆங்கிலம், ஹோமியோபதி பார்த்தும் சரியாகவில்லை. எப்போது சரியாகும்?


பதில்:

பேரன் ஹரிஷீற்கு துலாம் லக்னமாகி லக்னாதிபதி சுக்கிரன் ஒன்பதாமிடத்தில், ஒன்பது பத்துக்குடைய சந்திரன், புதனுடன் இணைந்து அமர்ந்த நல்ல யோக ஜாதகம். ஆனால் துலாம் லக்னத்திற்கு ஆகாத பாவியான ஆறுக்குடைய குரு பகவான் பனிரெண்டாமிடத்தில் கேதுவுடன் இணைந்து தன் ஆறாமிடத்தை பார்த்து வலுப்படுத்துகிறார்.

செவ்
ராகு
சூ
சந்,புத
சு,சனி
ராசி
லக்
குரு
கேது
தற்போது பனிரெண்டு வயது வரை குருதசையும் நடக்கிறது.

பெரியவர்களுக்கு ஆறாமிடம் வலுத்தால் கடன் தொல்லையும், எதிரிகள் தொந்தரவும் இருக்கும். குழந்தைகளானால் ஆரோக்கிய குறைவு இருக்கும்.

பனிரெண்டு வயதிற்கு மேல் நடைபெறப் போகும் சனிதசையில் நோய் முற்றிலும் குணமாகும். கவலைப்பட வேண்டாம். 2014 ஏப்ரல் முதல் செவ்வாய் புக்தியிலும் பிறகு நடைபெறும் ராகு புக்தியிலும் நோயின் தீவிரம் அதிகமாகலாம். அந்த நேரத்தில் உரிய பரிகாரங்களைச் செய்யவும்.



v.s.முருகையன்
கடை எண்.15
தினசரி மார்கெட்
கோபி-638452

கேள்வி:

எனது தொழில் நிலைமை மற்றும் அரசியல் ஆர்வம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்....

பதில்:

முருகையனுக்கு மேஷ லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம். 

சூரியனும் சந்திரனும் நேர் எதிர் நிற்கும் பவுர்ணமி யோகத்தில் 
பிறந்திருக்கிறீர்கள். லக்னாதிபதி செவ்வாய் நட்பு வீட்டில் இருந்தாலும் பனிரெண்டில் மறைந்து குருவுடன் இணைந்திருக்கிறார்.

செவ்வாய் குருவுடன் இணைந்ததால் உங்களிடம் அதிகாரத்தன்மை குறைந்து
அன்பு நேர்மை போன்ற குணங்கள் இருக்கும். இது இந்தக்கால அரசியலுக்கு ஒத்து வராதே...!

அதோடு இப்போது ஏழரைச்சனி வேறு ஆரம்பம். இந்த நேரத்தில் புதிய முயற்சிகள் முதலீடுகள் தொழில் விரிவாக்கம் எதுவுமே கூடாது. கை கொடுக்காது. இருப்பதை அப்படியே நடத்திக் கொண்டிருப்பது நல்லது. 

லக்னாதிபதி செவ்வாய் பலமிழந்து இருப்பதால் அவருக்கு வலுவூட்டும் பரிகாரங்களை செய்வது நல்லது.



v.ராமசுவாமி
19, திருமலா என்கிளேவ்
செகந்திராபாத்-500 015

கேள்வி:

பிறந்தது முதல் கஷ்டம். 76 வயதாகிறது. மனைவி இறந்து 20 வருடம் ஆகிறது. தனியாக இருக்கிறேன். இரண்டு ஆண் மக்கள். ஆனால் ஆதரவு இல்லை. வேலை இல்லை. பணக்கஷ்டம் உள்ளது. ராகுதசை நடக்கிறது. ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருக்கிறதா? என் ஜாதகம் எப்படிப் பட்டது? எப்போது நிம்மதியாக இருப்பேன்?

பதில்:

தனுசு லக்னம் விருச்சிகராசி கேட்டை நட்சத்திரம் ராகு தசை/ சுக்கிரபுக்தி நடப்பு (6-2-1937-4.30 am தெல்லிசேரி கேரளா)

தனுசு லக்னமாகி லக்னத்தில் திக்பலம் பெற்ற குருவும் புதனும் அமர்ந்து சனி மூன்றில் ஆட்சி. நான்கில் சுக்கிரன் திக்பலத்துடன் உச்சம். செவ்வாய் பதினொன்றில். பனிரெண்டில் நீச சந்திரனுடன் ராகு அமர்வு.

சுக்
கேது
சனி
ராசி
சூ
லக்,குரு,
பு,ராகு
சந்
செவ்
லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றாலும் ஐந்து ஒன்பதாமிடங்களை சனி பார்த்தார். லக்னத்திற்கு ஆகாத சுக்கிரனும் புதனும் திக்பலம் பெற்றனர்.

சனி செவ்வாய் திரிகோணாதிபதிகளாகி அங்கே அமரக்கூடாது அல்லது அவர்கள் வீட்டை அவர்களே பார்த்து வலுப்படுத்தக் கூடாது என்ற என் சூட்சும வலு தியரிக்கு உங்கள் ஜாதகமும் நல்ல உதாரணம். 

ஐந்துக்கதிபதி செவ்வாய் ஆகி அவர் வீட்டை அவரே பார்த்து வலுப்படுத்தியதால் ஆண் மக்கள் இருப்பார்கள். அவர்கள் நன்றாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களால் பத்து பைசா பிரயோஜனம் உங்களுக்கு இருக்காது.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியையும் லக்னசுபர்களையும் விட லக்னபாவிகள் அதிக வலுப் பெறக்கூடாது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு திக்பலத்தோடு ஆட்சி பெற்றாலும் சுக்கிரன் உச்சமும், சனி மூலத்திரிகோணமும், புதன் திக்பல வர்க்கோத்தமமும் பெற்றார்கள்.

அதோடு குரு லக்னாதிபதியாகி லக்னத்தோடு சம்பந்தப்பட்டாலே (ஹம்ச யோகம்) அந்த ஜாதகர் அளவுக்கு மீறிய கருணை, பெருந்தன்மை, மன்னிக்கும் குணம், நேர்மை போன்ற குணங்களோடு இருந்து ஏமாந்து போவார்கள்.

இதுவரை நடந்த எல்லா தசைகளும் உங்களுக்கு யோகம் செய்யாத தசைகள். தற்போது நடக்கும் ராகுதசையும் செவ்வாயின் விருச்சிக வீட்டில் சனியின் பார்வை பெற்று அஷ்டமாதிபதியுடன் இணைந்ததால் யோகம் செய்யாது. 

அடுத்த குருதசை யோகதசைதான். ஆனால் குரு ஆரம்பிக்கும் போது உங்களுக்கு 80 வயது முடிந்திருக்கும்.

 என்ன சொல்லச் சொல்கிறீர்கள் உங்களுக்கு?

பரம்பொருளின் சில கணக்கீடுகள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு புலப்படுவதே இல்லை.

பாதகாதிபதியோடு இணைந்த குருதசையில் உங்களுடைய நல்முடிவு இருக்கும் என்பதால் இப்பிறவியின் தொடர்ச்சியான அடுத்த பிறவி உங்களுக்கு அளவில்லா ஆனந்தம் தரும்.

அனைத்தும் அவன் செயலே.........!



R.மணி
திருமங்கலம்
மதுரை.

கேள்வி:

எனது மகள் வெண்ணிலாவிற்கு ராகுதசை எப்போது முதல் யோகம் செய்யும்? உயர்படிப்பு, அரசுவேலை, வெளிநாட்டு யோகம் உண்டா?

பதில்:

வெண்ணிலாவிற்கு மகரம் லக்னமாகி ஒன்பதாமிடத்தில் நீச சுக்ரனுடன் இணைவு பெற்று, மூன்றிலமர்ந்த சனியின் பார்வை பெற்ற ராகு தசை நடக்கிறது.

ராகுவிற்கு சாரம் தந்த சந்திரன் அவருக்கு திரிகோணத்தில் உச்சத்தில் இருக்கிறார். வீடு கொடுத்த புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகி பத்தாம் வீட்டில் இருக்கிறார்.

சனி
கேது
சந்
ராசி
லக்
செவ்
குரு
சூ,பு
சுக்
ராகு
சாரம் தந்தவர் ஐந்திலும், வீடு கொடுத்தவர் பத்திலும் இருக்க, யோகாதிபதி இணைவில் ராகு இருப்பதால் குருபுக்தி முதல் ராகுதசை யோகம் செய்யும்.

சூரியன் நீசபங்கமின்றி இருப்பதால் அரசுவேலை வாய்ப்பு குறைவு. ஆனால் ராகு தசையிலேயே உங்கள் பெண்ணிற்கு வெளிநாட்டு வேலை அமையும். 

அடுத்து நடைபெறப்போகும் குருதசையும் பனிரெண்டுக்கு அதிபதியாகி, பனிரெண்டிலேயே ஆட்சி பெற்று இருப்பது அவர் வெளிநாட்டில் இருக்கப்போவதை உறுதி செய்கிறது.





துரை.வேலுசாமி
3/826 இந்திராநகர்
அரூசல்-621 729

கேள்வி:

எனது மகள் முத்தமிழ்செல்விக்கு எப்போது மறுமணம் நடக்கும்? அல்லது நடக்காதா? நிரந்தர அரசுவேலை உண்டா? மகன் பன்னீர்செல்வம் பி.லிட் படித்தும் ஓட்டுனர் பணிபுரிகிறார். எப்போது நிரந்தர அரசுப்பணி கிடைக்கும்? திருமணம் எப்போது?

பதில்:

(விருச்சிக லக்னம். கும்பராசி. 5.12.1981-6.25am அரியலூர்)

ஜாதகத்தை சரியாக நகலெடுத்து தேவையான அனைத்து விபரங்களையும் தெளிவாக எழுதியுள்ளதிலிருந்து உங்களுக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும் என்று நினைக்கிறேன்.

ராகு
சந்
ராசி
சுக்
செவ்
கேது
லக் சூ
புத
குரு
சனி
ராசிக்கு ஏழில் செவ்வாய். எட்டில் சனி. லக்னத்திற்கு இரண்டில் கேது. எட்டில் ராகு. களத்திரகாரகன் சுக்கிரன் மூன்றில் மறைவு பெற்ற நிலையில் குடும்பாதிபதி குருவும் பனிரெண்டில் மறைந்தார். இத்தனையும் போதாதென அஷ்டமாதிபதி புதன் ஏழாமிடத்தை பார்க்கும் நிலையில் உங்கள் பெண்ணிற்கு 20 வயதில் திருமணம் செய்து 21ல் விவாகரத்திற்கு காரணமாகியுள்ளீர்களே? 

ஏன் இவ்வளவு சீக்கிரம் செய்தீர்கள்?

2013ல் வர இருக்கும் புதன்தசை சுக்கிரபுக்தியில் உரிய பரிகாரங்களைச் செய்தால் நிச்சயம் மறுமணம் நடைபெறும். விருச்சிக லக்னத்தை செவ்வாய் சனி பார்ப்பதால் உங்கள் பெண் கோபம் கொண்ட மகாபிடிவாதக்காரியாக இருப்பார். அறிவுரை சொல்லுங்கள். சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்று ஜீவனஸ்தானத்தை சந்திரன் வலுப்பெற்று பார்ப்பதால் நிரந்தர அரசு வேலை உண்டு.

மகனுக்கு மேஷ லக்னம் கன்னிராசியாகி ஐந்தாமிடமான சிம்மத்தில் சனியுடன் இணைந்து செவ்வாய் பார்வையில் இருக்கும் ராகுதசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. பத்தாமிடத்தை உச்சகுரு சூரியன் சுக்கிரனுடன் இணைந்து பார்க்கிறார். கடும் முயற்சிக்கு பின் சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். குரு தசை முதல் அனைத்து நல்லவைகளும் உண்டு.



R.பாஸ்கரன்
கே.எஸ்.டவுன்
பெங்களூர்.

கேள்வி:

பூர்வீக வீட்டை விற்று விடலாமா? வாடகைக்கு விடலாமா?

பதில்:

கண்டிப்பாக வாடகைக்கு விட வேண்டாம்.



K.கிரிஜா
நெற்குன்றம் பாதை
வடபழனி
சென்னை.

கேள்வி:

அப்பா இல்லாத என் மகன் மிகவும் கஷ்டப்படுகிறான். இனிமேலாவது நன்றாக இருப்பானா?

பதில்:

மகரலக்னம் மீனராசி (23-5-1976. 11.56 pm தேனி)

லக்னாதிபதி சனி ஏழில் அமர்ந்து லக்னத்தை பார்த்தும், ஒன்பது பத்துக்குடையவர்கள் ஐந்தில் இணைந்து தர்மகர்மாதிபதி யோகமும் உள்ள நல்ல யோகஜாதகம் உங்கள் மகனுடையது.

சந்
குரு
கேது
சூ பு
சுக்
ராசி
செவ்
சனி
லக்
ராகு

தற்போது சுக்கிரதசை நடந்தாலும் மீனராசிக்கு அஷ்டமச் சனி நடப்பதால் இன்னும் இரண்டு வருடம் யோக காலம் இல்லை. சனி முடிந்ததும் உங்கள் மகன் பிரமாதமாக முன்னுக்கு வருவார். நல்ல எதிர்காலம் அவருக்கு இருக்கிறது. கவலை வேண்டாம். ஆனால் ஒன்று.... எதிலும் குதர்க்கவாதம் பேசாமல் ஊரோடு ஒத்துப்போகச் சொல்லுங்கள். நான்கு பேர் வேண்டும் என்று நினைக்கச் சொல்லி அறிவுரை சொல்லுங்கள்.






R.மனோகர்.
திருமங்கலம்- 625706

கேள்வி:

எனது மகனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் ஆகவில்லை. குடும்பம் மற்றும் களத்திர பாவம் நன்றாக உள்ளதா? ஆயுள் பாவம் எப்படி?

பதில்:

கன்னி லக்னம் சிம்மராசி மகம் நட்சத்திரம். 23.10.81 5.30am திருமங்கலம்.

உங்கள் மகன் ஜாதகத்தில் ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய் பார்க்க, லக்னத்திற்கு ஏழாமிடத்தை சனி பார்கிறார். களத்திரகாரகனும் குடும்பாதிபதியுமான சுக்கிரன் மூன்றில் மறைவு. அனைத்துக் கிரகங்களையும் ராகு வழிநடத்த கேது பின் தள்ளும் பரிபூரண காலசர்ப்ப தோஷம்.

ராசி
ராகு
கேது
சந்
செவ்
சுக்
சூ
கு சனி
புத லக்
சந்திர தசையில் ராகு புக்தி 19.2.2013 வரை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சரியாகக் கணக்கு பாருங்கள். ஒரு வருடத்தை விட்டிருக்கிறீர்கள். 19.2.2012 லேயே ராகுபுக்தி முடிந்து இப்போது பாதகாதிபதி குரு புக்தி நடந்து கொண்டிருக்கிறது.

ஆயுளைப் பற்றி ஏதாவது தெரிந்தாலும் சொல்லாதே என்று வேத ஜோதிடம் சொல்கிறது. ஏனெனில் படைத்த பரம்பொருளுக்கு கடைசி நிமிடம் வரை எதையும் மாற்றும் அதிகாரம் இருக்கிறது.

உங்கள் மகனுக்கு லக்னாதிபதி புதன் கன்னியில் உச்ச வக்கிரம். கூடவே குருவும் ஆயுள்காரகன் சனியும் இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே அஸ்தங்கம் அடைந்திருக்கிறார்கள். 

ஆயுள் ஸ்தானத்தை விரயாதிபதி சூரியன் நீசம் பெற்று பார்க்க ஆயுள் ஸ்தானாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்து செவ்வாய்தசை நடக்க இருக்கிறது.

புதன் வலு குறைந்திருப்பதால் வாரந்தோறும் அன்னை மீனாட்சி வழிபாடு செய்வதும், முடிந்தால் சொக்கநாதர் சமேத மதுரை அன்னையின் திருவடிகளை புதன்கிழமை தோறும் தரிசிப்பதும் நல்லது.

ஜென்மநட்சத்திரம் அன்று திருவெண்காடு சென்று மூன்று தீர்த்தங்களில் நீராடி அர்ச்சனை அபிஷேகமும், வைத்தீஸ்வரன் கோவிலில் வேண்டுதல் செய்வதும், தீர்க்காயுள் ஹோமம் செய்வதும் நல்ல பரிகாரம்.

அனைவரையும் காத்தருளும் மதுரை அன்னை மீனாட்சி உங்கள் மகனுக்கு ஒரு குறையும் வராமல் நிச்சயம் காப்பாள்.

(டிசம்-ஜன 2013 மாத இதழில் வெளிவந்தது.)

7 comments :

  1. குருஜி அவர்களுக்கு வணக்கம். ராசி கட்டம் , நவாம்சம் கட்டம், இரண்டையும் போக "பாவ கட்டம்" என்று ஒன்று பார்க்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட ராசி கட்டத்தை போன்றே உள்ளது. ஆனாலும் சில கிரகங்கள் மாறி வரும். இது எதற்காக பார்க்கப்படுகிறது? அப்படி மாறி வரும் கிரகங்கள் என்ன பலன் தருவதாக எடுத்துகொள்ள வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. பாவகம் என்பது ஒரு ராசியின் துல்லியமான நிலை.ராசிக்கட்டத்தில் ஒரு கிரகத்தின் வலிமையைக் கணக்கிட்டுக் கொண்டு பாவகத்தில் இருக்கும் பாவத்தின் அடிப்படையில் அதன் பலனைக் கணிக்க வேண்டும்.

      உதாரணமாக, ஒரு மிதுன லக்ன ஜாதகத்தில் ராசியில் குரு ஏழாம் பாவத்திலும் பாவகச் சக்கரத்தில் எட்டாம் பாவத்திலும் இருந்தால் அந்த குரு ஆட்சி வலுவுடன் அதன் தசையில், எட்டாம் பாவத்தில் குரு இருந்தால் என்ன பலன் நடக்குமோ அந்த பலனைச் செய்யும். ஆனால் குரு நீசம் என்று கணிக்கக் கூடாது.

      Delete
  2. Sir vanakkam ennoda jathagam parthu eppo mge nadakkum sollungal parents illai thulam radi swathi naksathram dob 04041988 time 6.15pm place peravoorani laknam kanni

    ReplyDelete
  3. பார்வை பலன் பாவக கட்டத்தை வைத்து தான் பார்க்க வேண்டுமா குருஜி

    ReplyDelete
  4. ஜோதிட மாணவன்..

    ReplyDelete
  5. Sir ennote life sign paththi konsam sollunge sir. 19.10.1990 is my date if birth ...naan epo ennote husband koote onna irupen and avarugoote iruppennu

    ReplyDelete
  6. வாழ்க்கை பயணம் சிறப்பிக்க என்ன செய்ய வேண்டும்

    ReplyDelete