Sunday, August 4, 2013

ஆதித்ய குருஜி பதில்கள் - 6


ஆதித்யகுருஜிக்கு பாராட்டு....!

அன்புடையீர், நமஸ்காரம்.

தங்களது மேன்மையான “திருவருள் சக்தி” செப்டம்பர் 2012 இதழில் 28ம் பக்கத்தில் என் கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

அதில் குருதசை ராகு புக்தியில் இளமையிலேயே நீங்கள் மனைவியைப் பிரிந்திருக்க வேண்டும் அல்லது இழந்திருக்க வேண்டும் என்று கணிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

என் மனைவி இருபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்னர் 10-8-1991 அன்று சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் அரசு மருத்துவமனை கோவில்பட்டியில் வைத்து நோய்வாய்ப்பட்டு (டி.பி) காலமானார்கள். 

அப்போது என் வயது 36. எனக்கு குருதசையில் ராகுபுக்தி நடந்து கொண்டிருந்தது.

தங்களின் அபாரமான கணிப்புத் திறனை வியந்து போற்றுகிறேன்.

வை.லோகநாத அய்யர்.
187/B1 நடராசபுரம் 5வது தெரு.
கோவில்பட்டி.
N.பிச்சைமணி
மருதமலை.

கேள்வி:

25 வருடமாக ஊர் ஊராக வேலை பார்த்து வருகிறேன். சொந்தமாக சைக்கிள் கூட கிடையாது. சொந்த தொழில் வாகனம், வீடு அமையுமா? கேது தசை எப்படி இருக்கும்? பிறந்ததில் இருந்து கஷ்டம்தான். இனியாவது வசதி வருமா?

பதில்:

மீனலக்னம், மிதுனராசி, புனர்பூசம் நட்சத்திரம். புதன்தசை சனிபுக்தி நடப்பு. (10-08-1969. 8.45 PM உடன்குடி)

லக்னாதிபதி குரு ஏழில் அமர்ந்து லக்னத்தை பார்த்தும் பாக்யாதிபதி செவ்வாய் ஒன்பதில் ஆட்சி பெற்றும், ஐந்துக்குடைய சந்திரன் சுக்கிரனுடன் நான்கில் அமர்ந்து திக்பலம் அடைந்த யோகஜாதகம்தான்.

லக்
சனி
சந்,
சுக்
ராகு
ராசி
சூ
புத, கேது
செவ்
குரு

ஆனால் ஜாதகம் யோகமாக இருந்தாலும் யோகதசைகள் நடைபெற்றால்தான் மனிதன் முன்னேற்ற வாழ்வைப் பெறமுடியும். உங்களுக்கு செவ்வாய், ராகு, குருதசைகள் சரியான வயதில் நடந்திருந்தால் யோகம் செயல்பட்டிருக்கும்.

ஆனால் ஒன்பது வயது முதல் இரண்டில் நீசம் பெற்று சூட்சும வலு அடையாத சனிதசை, இருபத்தி எட்டு வயதிலிருந்து இன்றுவரை ஆறில் கேதுவுடன் மறைந்த புதன்தசை நடப்பதால் நல்லது எதுவும் நடக்கவில்லை.

அடுத்து நடக்கப் போகும் கேது தசையும் ஆறுக்குடையவனாகி ஐந்தில் அமர்ந்த சூரியனின் சாரம் பெற்றதால் சுமாராகத்தான் இருக்கும்.

அதோடு, அஷ்டமாதிபதி சுக்கிரன் நான்கமிடத்தில் திக்பலம் பெற்று அமர்ந்து நீச சனியும், செவ்வாயும் நான்காமிடத்தை பார்வையிட்ட காரணத்தினால் சொந்த வீடு வாகனம் அமையும் வாய்ப்பு குறைவுதான். சுக்கிரதசையில் மனைவி பெயரில் அமைய வாய்ப்பு உண்டு.



P.கந்தசாமி என்கிற இளங்கோ
குமாரபாளையம்.

கேள்வி:

ஆயில் கடை நடத்தி வருகிறேன். கடனுக்கு விற்பதால் லாபம் இல்லை. வேறு தொழில் செய்யலாமா? என்ன தொழில் அமையும்?

பதில்:

கும்பலக்னம்/ ரிஷபராசி/ கிருத்திகை நட்சத்திரம் ராகுதசை/ சுக்கிரபுக்தி நடப்பு (28-4-1979. 2.45AM குமாரபாளையம்)

லக்னாதிபதி சனி ஏழில் சிம்மத்தில் எட்டு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து லக்னத்தைப் பார்த்தும் இரண்டாமிடத்தில் சுக்கிரன் செவ்வாய் புதன் இணைந்தும், சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய நான்கு கிரகங்கள் உச்சம் பெற்று அட்சய திரிதியைக்கு அருகில் பிறந்த ஜாதகம்.

சுக்,புத,
செவ்
சூ
சந்
லக்,
கேது
ராசி
குரு
சனி(வ) ராகு

கும்ப லக்னத்திற்கு ஆகாதவர்களான சூரியன், சந்திரன், குரு ஆகியோரும், பாதகாதிபதி சுக்கிரனும் உச்சம் பெற்றது அவயோகம்.

ராகு சனியுடன் நெருக்கமாக இணைவுற்றதால் எண்ணெய்க் கடை ராகுதசை வரை நீடிக்கும். குருதசையில் வேறு தொழில் மாறும். அதுவரை இதையே நடத்தி வரலாம். குரு தசையில் வட்டித் தொழில், ரவதானியம், மஞ்சள்நிற பொருட்கள் போன்ற குருவின் காரகத்துவ தொழில் அமையும்.





பா.சிவராமலிங்கம் பிள்ளை
ஞானசம்பந்தபுரம் முதல் தெரு,
களக்காடு– 627561.

கேள்வி:

1978 முதல் என் ஜாதகத்தை பற்றி பெரிய ஜோதிடர்கள் சொன்னது எதுவுமே நடக்கவில்லை. வாழ்வு கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ள நான் உங்களின் கணிப்புகளை மட்டுமே நம்பியுள்ளேன். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி செய்வேன். தங்களின் தெளிவான பதில்களையும் கணிப்புக்களையும் படித்து பிரமிக்கிறேன்.

கடன் எப்போது தீரும்? கட்டுரையாளனாக முடியுமா? இன்னும் ஒரு பத்து வருடம் என்ன செய்யலாம்? புதன்தசை எப்படி இருக்கும்? வடக்கு நோக்கி குடும்பத்தோடு போகலாமா? மகள் ஆறு மாதமே வாழ்ந்தாள். எப்போது விவாகரத்து கிடைக்கும்? மறுமணம் உண்டா? பேரன் உடல் நிலை, உத்தியோகம், படிப்பு, திருமணம் எப்படி? மகன் திருமணம் எப்போது? எப்படிப்பட்ட மனைவி? இல்லறம் இனிமையாக இருக்குமா?

பதில்:

நான்கு ஜாதகம் அனுப்பி ஐம்பத்தி மூன்று கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அனைத்து ஜாதகங்களும் வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டவை. எனது அனுபவத்தின்படி வாக்கியம் சரிவருவதில்லை.

1946 ல் பிறந்த உங்களுக்கு மட்டும் சரியாக பிறந்த நேரம் எழுதிய நீங்கள் 2007 ல் பிறந்த பேரனுக்கும், மகன், மகளுக்கும் பிறந்த நேரம் தரவில்லை. திரும்ப திரும்ப ஒவ்வொரு மாதமும் இதற்காகவே பதில் தர முடியவில்லை என்று யாருக்காவது சொல்ல வேண்டியிருக்கிறது.

சூ,
ராகு
சுக்,
புத
ராசி
சனி
செவ்
லக்
கேது
குரு,
சந்

இது ஒரு எல்லோருக்குமான பொதுசேவை என்பதை உணர்ந்து வாசகர்கள் ஒரே ஒரு ஜாதகம் மட்டும் அனுப்பி முக்கியமான ஒன்றிரண்டு கேள்விகள் மட்டும் கேட்டால் எல்லோருக்கும் பதில் கிடைக்க வாய்ப்பு இருக்கும். 

இப்போதே இன்னும் ஆறு மாதத்திற்கு பதில் தர வேண்டிய கேள்விகள் உள்ளன. உங்களுடைய வயதையும், வேதனைகளையும் கருதி முக்கியமான கேள்விகளுக்கு பதில் தருகிறேன்.

உங்களுக்கு தனுசு லக்னம், கன்னிராசி, அஸ்தம் நட்சத்திரம் (திருக்கணிதப்படி) ஐந்துக்குடைய செவ்வாய் ஒன்பதில் நட்பு. சூரியன் ஆறில் ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் இணைவு. ஏழில் சுக்கிரன் புதன். எட்டில் சனி. லக்னாதிபதி குரு கன்னியில் சந்திரனுடன் இணைவு.

லக்னம் தனுசு ஆகி லக்னத்தை பாவர் பார்க்காமல் இரண்டு சுபர்கள் வலுப்பெற்று பார்த்து, லக்னாதிபதி குரு இன்னொரு சுபரான வளர்பிறை சந்திரனுடன் இணைந்து கேந்திரத்தில் அமர்ந்து வலுவிழந்த சனி பார்வையை பெற்று வக்ரம் பெற்றதால் நீங்கள் அனைத்தையுமே நல்லது, எல்லோருமே நல்லவர் என்று எண்ணி ஒவ்வொரு தடவையும் ஏமாற்றப்பட்டிருப்பீர்கள்.

இது போன்ற ஜாதகர்கள் நல்லவர்கள் மட்டுமே..... வல்லவர்கள் இல்லை.

இந்த உலகம் சூது, வாது நிரம்பியது. இங்கே வல்லவன்தான் வாழ்வான். 
நல்லவன் இளிச்சவாயன்தான். இதுவே உங்கள் பலவீனம்.

ஆறுக்குடையவன் சுபராகி லக்னத்தைப் பார்த்ததால் இறுதிவரை கடன் தொல்லை இருக்கத்தான் செய்யும். தற்போது புதன்தசை தொடங்கி உள்ளது. கட்டுரையாளன் ஆக முடியும். எழுத்துத்துறை கை கொடுக்கும். வடக்கு நோக்கியும் தாராளமாக போகலாம்.

புதன் ஜீவனாதிபதியாகி ஏழில் ஆட்சி பெற்றதாலும் லக்னாதிபதிக்கு அவரே வீடு கொடுத்தவர் என்பதோடு ராசிநாதன் என்பதாலும் கணக்கு, எழுத்து, புத்தகம் போன்ற வழிகளில் நல்ல வருமானத்தை உங்களுக்கு தருவார். 

ஜென்மச்சனியும் முடிந்து விட்டதால் இனிமேல் நல்லவை மட்டுமே நடக்கும். கவலை வேண்டாம்.



இரா.வேணுகோபால்
பேரங்கியூர்.

கேள்வி:

என் மகன் திருமணம் எப்போது நடைபெறும்? தோஷங்கள் உள்ளதா? பல லட்சம் கடன் வாங்கி நெல் அறுவடை இயந்திரத் தொழில் லாபம் தருமா? அவனுடைய மணவாழ்வு எப்படி? பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும்? தெளிவான பதில் கூறி நல்வழிப்படுத்த வேண்டுகிறேன்.

பதில்:

மகன் ஜெயகாந்தனுக்கு கும்பலக்கினம் மகரராசி, உத்திராட நட்சத்திரம். ராகுதசையில் சுக்கிரபுக்தி நடப்பு. (18-1-1980. 9.10 AM விழுப்புரம்)


லக்னத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் கேதுவுடன் இணைவு. அவருக்கு செவ்வாய் குரு பார்வை. ஏழாமிடத்தில் ராகு, குரு, செவ்வாய் இணைவு. 

எட்டில் சனி. களத்திர ஸ்தானாதிபதி சூரியனோ ஆறுக்குடைய சந்திரனுடனும், எட்டுக்குடைய புதனுடனும் இணைந்து பனிரெண்டாம் வீட்டில் மறைந்திருக்கிறார்.

8-12க்குடையவர்களின் பரிவர்த்தனை வேறு.

லக்,சுக்,
கேது
ராசி
சூ,புத,
சந்
செவ்,குரு
ராகு
சனி

ராசிக்கு எட்டிலும் செவ்வாய் இருந்து லக்னத்திற்கு இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார். களத்திரதோஷம், நாகதோஷம், புத்திரதோஷம் உள்ளிட்ட கடுமையான் தோஷ அமைப்புக்கள் இருக்கின்றன. முறைப்படியான பரிகாரங்கள் செய்திருந்தால் ராகுதசை சுக்கிரபுக்தியில் திருமணம் நடந்திருக்கும். தற்போது வாய்ப்பு இல்லை.

பத்தாமிடத்தை லக்னாதிபதி சனியும், ஜீவனாதிபதி செவ்வாயும் பார்ப்பதால் கதிர் அறுக்கும் இயந்திரத்தொழில் கை கொடுக்கும். பரிகாரங்கள் எழுத இங்கே இடம் போதாது. நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.





ஸ்ரீனிவாசன் 
திண்டல்.
ஈரோடு.

கேள்வி:

நீங்கள் வேண்டாம் என்று சொல்லியும் என் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டிய சூழ்நிலை. இப்போது பிரச்சினையாக உள்ளது. எங்கள் குழந்தையின் எதிர்கால வாழ்விற்கு ஜோதிட தெய்வம் வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

தங்களின் ஜோதிடக் கட்டுரைகள், கேள்வி-பதில் படித்து நுணுக்கமான சில விஷயங்கள் புரிந்தன. எனது மகளின் அஷ்டமாதிபதி சூரியதசைக்கு பரிகாரமும், சுக்கிர தசையில் புதன்புக்தி எப்படி இருக்கும் என்று கூறுமாறு தங்களின் பொற்பாதங்களை வணங்கி கேட்கிறேன்..........

பதில்:

இவருக்கு இவர் என்று பரம்பொருள் நிர்ணயித்திருக்கும் போது இடையில் புகுந்து தடுத்து நிறுத்துவதற்கு நான் யார்? இது போன்ற சூழ்நிலைக்கு “கர்மவினையும் சாந்தி பரிகாரங்களும்” என்று மகாபுருஷர் காளிதாசர் சில பரிகாரங்களைச் சொல்லுகிறார். நேரில் தொடர்பு கொண்டு கேளுங்கள்.



V.E.காண்டீபன்,
மந்தகரை வீதி,
திருக்கோவிலூர்.

கேள்வி:

பட்டப்படிப்பு படித்திருந்தும் டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக எட்டு ஆண்டுகளாக பணிபுரிகிறேன். பணத்திற்காக மதுவை விற்று பல குடும்பங்களை நாசம் செய்வது மகாபாவம் என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த வேலையில் இருந்தாலும் மனதிற்கு பிடிக்காத இந்த வேலையை உதறிவிட்டு வேறு வேலைக்கு போக வேண்டும் என்கிற தவிப்பு நாளுக்கு நாள் பெருகுகின்றது. வேலையை ராஜினமா செய்து விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்யலாமா? கடவுள் எனக்கு நல்ல மனைவியை கொடுத்தும் இன்னும் குழந்தையை தரவில்லை. குழந்தை பாக்கியம் எப்போது?

பதில்:

ரிஷப லக்னம், மிதுனராசி, மிருகசீரிடம் நட்சத்திரம் சனிதசை/சுயபுக்தி நடப்பு: (31-10-1977. 7.30PM கும்பகோணம்)

“கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே” என்று பகவான் கிருஷ்ணர் சொன்னது உங்களுக்குப் பொருந்தும். மது விற்கும் பாவம் உங்களைச் சேராது. நீங்கள் வெறும் அம்புதான்.......

கேது
லக்
சந்
குரு(வ)
ராசி
செவ்
சனி
புத
சூ
சுக்
ராகு

உங்கள் ஜாதகத்தில் இரண்டில் குருவும், மூன்றில் செவ்வாயும், நான்கில் சனியும் அமர்ந்து இவர்கள் மூவரும் ஆறில் நீசமாகி புதனுடன் அமர்ந்த சூரியனையும், பத்தாமிடத்தையும் பார்க்கிறார்கள். ஜீவனாதிபதி சனிக்கு வீடு கொடுத்த சூரியனும், அவரைப் பார்க்கும் குருவும் ராகு சாரத்தில் இருக்கிறார்கள்.

ராகு நீசம் பெற்று பரிவர்த்தனை அடைந்துள்ள லக்னாதிபதி சுக்கிரனுடன் ஐந்தாமிடத்தில் நான்கு டிகிரி இடைவெளியில் இணைந்திருக்கிறார். பத்தாமிடத்தை பாவக்கிரகங்களோ நீசர்களோ தொடர்பு கொண்டால் நீசத்தொழில்தான் அமையும்.

இருக்கும் வேலையை ராஜினாமா செய்யவேண்டாம் வேலையில் இருந்து கொண்டே வேறு துறைகளுக்கு முயற்சி செய்யுங்கள். நீச சூரியனை, நீச செவ்வாய் பார்ப்பதாலும் தற்போது சனிதசை ஆரம்பித்துள்ளதாலும் வேலையை நீங்களாக விடக்கூடாது.

ஐந்துக்குடைய புதன் ஆறில் மறைந்தாலும் பரிவர்த்தனை பெறுகிறார். ஐந்தில் ராகு அமர்ந்தது பலவீனம். கூடவே நீச சுக்கிரன் வேறு. ராசிக்கு ஐந்தில் சனி.

ஜன்ம நட்சத்திரம் அன்று ஸ்ரீ காளஹஸ்தி சென்று ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். சந்தான கோபால ஹோமமும் வேலூர் தன்வந்திரி பீடத்தில் செய்வதோடு புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களும் செய்யப்பட வேண்டும்.



R.பாஸ்கரன்
திருநெல்வேலி.

கேள்வி:

ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இந்த நிறுவனத்தில் பணி நிரந்தரம் எப்போது? ஊதிய உயர்வும் எப்போது? தாமதமாவது ஏன்?

பதில்:

கடக லக்னம், மகரராசி, உத்திராடம் நட்சத்திரம். குருதசை, ராகுபுக்தி நடப்பு : (10-10-1959. 1.30AM நெல்லை)

லக்னாதிபதி சந்திரனும், யோகாதிபதி குருவும் லக்னத்தைப் பார்த்து, ஒன்பது பத்துக்குடையவர்கள் தங்களின் வீடுகளை தாங்களே பார்த்து தர்மகர்மாதிபதி யோகம் அமைந்த நல்ல யோக ஜாதகம் உங்களுடையது.

கேது
ராசி
லக்
சந்
சுக்
சனி
குரு
புத
சூ,செவ்,
ராகு

ஆனாலும் ஜீவனாதிபதி செவ்வாய் மூன்றாமிடமான கன்னியில் பகை பெற்று சூரியனுடன் அஸ்தமனமாகி ராகுவுடனும் இணைந்து, ஆறில் அமர்ந்த சனி பார்வையையும் பெற்று முற்றிலும் பலவீனம் அடைந்ததால் வேலை தொழில் அமைப்புகளில் உங்களுக்கு நல்லவை நடக்க தாமதமாகும்.

கடக லக்னத்திற்கு குரு பாவி என்பதால் இப்போது குரு தசையில் ஆறுக்குடைய (அடிமை) பலன்கள்தான் நடக்கும். ராகு புக்தி முடிவதற்குள் உங்கள் எண்ணம் நிறைவேறும். ஜீவன, தனாதிபதிகளின் பலத்தை தனதாக்கி ராகு உங்களுக்கு நன்மை செய்வார்.





S.தேவி
சேலம்.

கேள்வி:

என் மகன், மகள் இருவருக்கும் ஏதேனும் தோஷம் இருக்கிறதா? திருமணத் தடைக்கு காரணம் என்ன? எப்போது திருமணம் ஆகும்? மகனுக்கு தொழில் சரியில்லை. செய்வினை, கண்திருஷ்டி ஏதேனும் உள்ளதா? ராசிக் கற்கள் போடலாமா? ஆயுள் எப்படி? இருவருக்கும் நல்ல இடத்தில் திருமணம் நடக்க நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும். என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் சொல்லும்படி பணிவுடன் கேட்கிறேன்.

பதில்:

அமிர்தலட்சுமிக்கு தனுசு லக்னம், கன்னிராசி, அஸ்தம் நட்சத்திரம்.
(30-10-1978. 11.25AM சேலம்)

கன்னி ராசிக்கார்கள் அனைவரும் அனுபவிக்கும் மனவேதனைகளையும், மன உளைச்சல்களையும் கடந்த இரண்டு வருடமாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். கன்னிக்கு நல்லகாலம் பிறந்து விட்டது. கவலை வேண்டாம்.

கேது
ராசி
குரு
சனி
லக்
செவ்,
புத
சூ,
சுக்
சந்,
ராகு

உங்கள் பெண்ணிற்கு களத்திர ஸ்தானாதிபதி புதன் பனிரெண்டில் மறைந்ததும், ராசியில் ராகு ராசிக்கு ஏழில் கேது அமர்ந்ததும், லக்னத்துக்கு ஏழாமிடத்தை செவ்வாய் பார்த்ததும், சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் நீச சூரியனுடன் இணைந்து வக்கிரம் பெற்றதும் கடுமையான தோஷங்கள். 

செவ்வாய் ஆட்சி பெற்றதால் தோஷமில்லை. ஆனால் அவர் பனிரெண்டில் மறைந்தது புத்திரதோஷம்.

லக்னாதிபதி குரு உச்சம் பெற்றதால் நல்ல குணங்கள் அமைந்த பெண்ணாக இருப்பார். திருமணமாகி செல்லும் இடம் மேன்மை பெறும். கடந்த ஐந்து வருடங்களாக ஏழரைச்சனி நடப்பதால் குருதசை நடந்தும் திருமணம் கைகூடவில்லை. முறையான பரிகாரங்களுக்கு பின் உடனடியாக திருமணம் நடைபெறும்.

மகன் குமாருக்கு துலாம் லக்னம், துலாம் ராசியாகி (2-2-1975. 11.25 PM சேலம்) இரண்டு, எட்டில் ராகு கேதுக்கள் அமர்ந்ததும், செவ்வாய், சனி சம சப்தமமாக பார்த்துக் கொண்டதும் திருமணத்தடைகள்.

தற்போது அவருக்கும் ஏழரைச்சனி நடப்பதும், சனி தசையில் சூர்ய சந்திர புக்திகள் கடந்த இரண்டரை வருட காலமாக நடப்பதாலும் தொழில் நஷ்டம், விரயம் போன்ற கெடுபலன்கள் நடந்திருக்கும். வரும் 10-10-2013க்குள் திருமணம் நடக்கும். 

ராசிக்கற்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.



D.V.லட்சுமி
ஸ்ரீரங்கம்
திருச்சி-6

கேள்வி:

எனது மகளின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அல்லது காதல் திருமணமா? தங்கள் மூலம் உண்மை அறிய விரும்புகிறேன்.

பதில்:

மகள் கோமதிக்கு மிதுனம் லக்னமாகி மேஷராசி. தற்போது சந்திர தசை நடக்கிறது. சந்திரன் சுக்கிரனின் சாரம் பெற்றுள்ளார். சுக்கிரனின் வீட்டையும் பார்க்கிறார். சுக்கிரன் சந்திரனின் வீட்டில் இருக்கிறார். ஏழாம் பாவாதிபதி குருவுடன் இணைந்து செவ்வாய் ஏழாம் பாவத்தை பார்க்கிறார்.

சந்
கேது
லக்
சனி
ராசி
சுக்
சூ
புத
ராகு
செவ்
குரு

ராசியை சனி ஒன்பதில் ஆட்சி பெற்று பார்க்கிறார். (திருக்கணிதப்படி).
லக்னாதிபதி புதனுக்கும் சனியின் பார்வை இருக்கிறது.

உங்கள் மகள் இப்போது காதலித்துக் கொண்டிருக்கிறார். சந்திர தசை சுக்கிர புக்தியில் அவருக்கு காதல் திருமணம் நடக்கும்.




P.மோகன்
கரூர்.

கேள்வி:

எனது மகளுக்கு எப்போது குழந்தை பிறக்கும்? வீடுகட்டும் யோகம் உண்டா? மாப்பிள்ளை தொழில் வருமானம் கூடுமா? தங்களின் மானசீக சிஷ்யனான எனக்கு விபரம் அளிக்கவும்.......

பதில்:

மகளுக்கு திருமணம் ஆகி ஆறுமாதம்கூட ஆகவில்லை...அதற்குள் குருவிடம் இப்படி ஒரு கேள்வி......!

மாப்பிள்ளை தியாகராஜனுக்கு தற்போது ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் எதிலுமே தடைகளும் தாமதங்களுமாகத்தான் இருக்கும். தொழில் விரிவாக்கம், புதிய முயற்சி, முதலீடுகள் எதுவும் இப்போது கூடாது. இருப்பதை அப்படியே நடத்திக் கொண்டிருக்க வேண்டும்.

லக்
ராகு
செவ்
சுக்
ராசி
சூ
குரு
புத
சனி
கேது
சந்

ரிஷப லக்னமாகி ஐந்துக்குடைய புதன் எட்டில் மறைந்ததும், புத்திரகாரகன் குரு நீசம் பெற்று ஒரே டிகிரியில் சூரியனுடன் இணைந்து அஸ்தமனமானதும், ராசிக்கு ஐந்தில் செவ்வாய் அமர்ந்து லக்னத்திற்கு ஐந்தாமிடத்தை பார்த்ததும் புத்திர தோஷம்.

மகள் மாலதிக்கு பெரிய தோஷங்கள் எதுவும் இல்லாததால் குழந்தை பிறப்பிற்கு தடை எதுவும் இல்லை. மாப்பிள்ளைக்கு ஏழரைச்சனி முடிந்ததும் வீடுகட்டும் யோகம் உண்டு.




ஆ.நடராஜன்
வில்லிவாக்கம்
சென்னை-49.

கேள்வி:

எனது மகனுக்கு 31 வயதாகியும் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. திருமணம் எப்போது நடைபெறும்?

பதில்:

தனசேகருக்கு துலாம் லக்னம் துலாம் ராசியாகி ஏழுக்குடைய செவ்வாய் எட்டில் மறைந்து சுக்கிரனை சனி பார்த்ததால் சனி தசை, சுக்கிர புக்தியில் 33 வயதில் திருமணம் நடக்கும்.

சூ
செவ்
பு(வ)
சுக்
ராசி
ராகு
கேது
லக்
சந்
குரு
சனி












(நவம்பர் 2012 மாத இதழில் வெளிவந்தது.)

1 comment :