Sunday, August 4, 2013

ஆதித்ய குருஜி பதில்கள் - 5


வாசகர்களின் கேள்விகளுக்கு

"ஜோதிட மகாகுரு"
"ஜோதிடக்கலை அரசு"

ஆதித்ய குருஜி
           பதில்கள்

S.சௌந்தராஜன்,
புட்டராத்தி அம்மன் கோயில் தெரு,
திருநெல்வேலி.

கேள்வி:

என் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி குறைபாடு ஏற்படக் காரணம் என்ன? நிலையான தொழில் திருமணம் எப்போது ?


பதில்:

துலாம் லக்னம், மகரராசி, உத்திராடம் நட்சத்திரம். குருதசை புதன் புக்தி நடப்பு (14. 2. 1969 – 11.18pm நெல்லை)

துலாம் லக்னமாகி லக்னாதிபதி சுக்கிரன் ஆறில் உச்சம் பெற்று அங்கே ராகுவுடனும் சனியுடனும் நெருங்கி பலவீனம் அடைந்ததும், இவர்கள் மூவரையும் பனிரெண்டில் அமர்ந்த குரு பார்வையிட்டு, தன் ஆறாம் வீட்டை பலப்படுத்தியதும் உங்களின் ஆரோக்கியக் குறைவுக்கு காரணங்கள். மேலும் தற்போது ஆறுவருடமாக குருதசையும் நடப்பது உங்களின் உடல் நல சீர்கேட்டை காட்டுகிறது.

ச,சுக்,
ராகு
சூ
ராசி
சந்,
புத
லக்,
செவ்
கேது,
குரு
சந்திரனும் புதனும் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டாலும் லக்னாதிபதி பலவீனம் பெற்று லக்னபாவி குருவின் தசை நடப்பதால் குருதசை முடியும் வரை நிலையான தொழில் ஏற்படாது.

ஐந்துக்குடைய சனி ஆறில் மறைந்து, ஐந்தில் பாதகாதிபதியும் சனியின் கடும் பகைவருமான சூரியன் அமர்ந்து, புத்திரகாரகன் குரு பனிரெண்டில் ராகு கேதுக்கள் சம்பந்தப்பட்டு கடுமையான புத்திரதோஷம் ஏற்பட்டுள்ளது.

திருமண பந்தமே சந்ததி விருத்திக்காகத்தான் என்பதால் புத்திர தோஷம் இருப்பதால் உங்களுக்கு நேரிடையான திருமண வாய்ப்பு குறைவுதான். 

ஆனால் ஏழுக்குடைய செவ்வாய் பாவியானாலும் லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பதால் அப்படி, இப்படி என்று ஏதாவது ஒரு நிலையில் திருமண சுகம் இருக்கும்.



P.ஹேமலதா,
போரூர்,
சென்னை.

கேள்வி:

இதுவரை என் கணவர் முப்பதுக்கும் மேற்பட்ட கம்பெனி மாறியுள்ளார். இடையில் கொஞ்ச காலம் வேலையும் இல்லை. வெளிநாடு சென்று கூட மூன்று மாதத்தில் வந்து விட்டார். செவ்வாய் தசை அவருக்கு முன்னேற்றம் தருமா? நாங்கள் இனிமேலாவது சந்தோஷமாக இருப்போமா? அவரது பெற்றோர் சகோதர சகோதரிகளுடன் எங்களுக்கு பேச்சு வார்த்தை கூட இல்லை....

பதில்:

கடக லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். செவ்வாய் தசை/குருபுக்தி (5-5-1969– 10.50am சென்னை)

சனி, செவ்வாய் திரிகோணாதிபத்தியம் பெறக்கூடாது என்று நான் அடிக்கடி எழுதுவதற்கு உங்கள் கணவர் ஜாதகம் நல்ல உதாரணம்.

சுக், ராகு
சூ,சனி
புத
ராசி
லக்
சந்
செவ்
குரு, கேது
கடகம் லக்னமாகி, ஜீவனதிபதி செவ்வாய் தன் பத்தாம் வீட்டிற்கு எட்டில் மறைந்து ஐந்தில் ஆட்சிபெற, பத்தில் உச்ச சூரியனும், நீச சனியும் இருக்கிறார்கள். சனி நீசம் மட்டும் அடைந்திருந்தால் நல்ல தொழில் அமைப்பு இருந்திருக்கும். ஆனால் உச்ச சூரியனால் நீச பங்கம் பெற்றதனால் தொழில் ஸ்தானத்தில் வலிமை பெற்ற சனி தொழிலை அடியோடு கெடுப்பார்.

பத்தாமிடத்திற்கு செவ்வாய், சூரியன், சனி தொடர்பு என்பதால் உங்கள் கணவர் கட்டுமானத் துறையில் இருக்கக் கூடும் என்று கணிக்கிறேன். செவ்வாய் ஐந்தில் ஆட்சி பெற்றதால் யோகம் செய்வது கடினம். செவ்வாய் தசை சுமாராக இருக்கும்.

ஆனால் ஒன்பதாமிடமான மீனத்தில் சுக்கிரனுடன் குரு பார்வையில் அமர்ந்த ராகு தசையில் அனைத்தும் ஸ்திரப்படும். ராகு தசை நல்ல யோகம் செய்யும். அதற்கு முன் சனிக்குரிய ப்ரீத்தி, பரிகாரங்களைச் செய்யுங்கள். ராகுதசையில் மிகவும் நன்றாக இருப்பீர்கள் கவலை வேண்டாம்.



R.சுப்புலட்சுமி,
24,அசோக்குமார் நகர்,
B.K.புதூர்,
கோவை – 641 008.

கேள்வி:

வாய் பேச இயலாத, காது கேளாத எங்கள் வயதான சகோதரி அவரது விருப்பப்படி எங்களின் பூர்வீக வீட்டில் தனியாக வசிக்கிறார். உடன் பிறப்புக்கள் நாங்கள் வெளி ஊர்களில் இருக்கிறோம். அவருக்கு தற்போது கண்பார்வை மங்கி வருகிறது. அவரது தேக ஆரோக்கியம் பற்றியும், அவர் மனம் மாறி எங்கள் யாருடனாவது வசிக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றியும், பரிகாரம் ஏதேனும் இருந்தாலும் கூறும்படி பணிவுடன் கேட்கிறேன்.

பதில்:

கடக லக்னம், தனுசுராசி, மூலம் நட்சத்திரம். ராகு தசை/ புதன் புக்தி நடப்பு.

8.5.2014 க்கு மேல் சகோதரர்களில் யாருடனாவது அவர் வசிக்கும்படி இருக்கும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.



இரா. கார்த்திகேயன்,
திருப்பத்தூர் ரோடு,
தேவகோட்டை – 630 802.

கேள்வி:

நானும் எனது தம்பியும் சேர்ந்து கடை வைத்திருக்கிறோம். வியாபாரம் மந்தம். இருவரும் சேர்ந்து இருப்போமா? வீடு மனை யோகம் உண்டா? பிள்ளைகள் வரும் காலம்? வயதான தாய், தந்தையர்களை பாதுகாக்க வேண்டும்.

பதில்:

உங்களுடைய பிறந்த நேரம் (காலை/ மாலை/ இரவு) பிறந்த இடம் பற்றிய சரியான விபரங்களுடன் தெளிவாக கேள்வி கேளுங்கள். பிறந்த தேதி விபரங்களை தவிர மற்றவை தெளிவாக இல்லை.



G.S. ராதாகிருஷ்ணன்
தொட்ட பாளையம்,
வேலூர்-632 009.

கேள்வி:

1974 ல் ஒரு அரசு சார்ந்த வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்களில் விலகி, அடுத்த வருடம் அதே வேலையில் சேர்ந்து சில நாட்களில் விலகி, பிறகு ஐந்து வருடம் இரும்பு கம்பெனியில் வேலை. 

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக மறுபடியும் அதே அரசு நிறுவனத்தில் 1979 முதல் பணியில் சேர்ந்து 2004 ல் VRS வாங்கி விட்டேன். 

2012 வரை தாக்குப் பிடித்திருந்தால் 32,000 சம்பளம் வாங்கியிருப்பேன். நான் ஏன் அங்கிருந்து வந்தேன்? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? இப்போது சரியான வேலை இல்லை. என் எதிர்காலம் எப்படிஇருக்கும்?

பதில்:

ரிஷப லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். புதன் தசை/ கேதுபுக்தி நடப்பு (9.7.1954- 2.45 AM வேலூர்)

ரிஷப லக்னக்காரர்களுக்கு அவர்களேதான் எதிரிகள். லக்னாதிபதி சுக்கிரனே ஆறுக்குடையவனாகி, துலாம் அவருக்கு மூலத்திரிகோண பலம் உள்ள இடம் என்பதால் இந்த பலன்.

லக்
சூ,புத,
குரு,கேது
ராசி
சுக்
செவ்
ராகு
சந்
சனி
உங்களுக்கு லக்ன ராசிநாதன் இருவரும் சுக்கிரன் தான். மேலும் மனோகாரகன் சந்திரன் உச்ச சனியுடன் நெருக்கமாக இணைந்தால் சனிதசை முழுவதும் தவறான முடிவுகள் எடுத்திருப்பீர்கள். இங்கே சனி சூட்சும வலு அடையாமல் பரிபூரண உச்சம் அடைந்தது பலவீனம்.

ஆனால் அஷ்டமாதிபதி குரு இரண்டாமிடத்தில் சூரியன், கேது, புதனுடன் இணைந்து அஸ்தமனமும், கிரகணமும் அடைந்து முற்றிலும் வலுவிழந்ததால் கெடுதல் செய்யும் தகுதி இழந்து குரு தசை இறுதி வரை அரசு வேலையில் இருந்தீர்கள்.

சனிதசையில் வந்தது வினை. எட்டில் அமர்ந்து சனியின் பார்வையை பெற்ற ராகு சனியின் பலத்தை எடுத்ததுக் கொண்டு அவரது புக்தியில் வேலையை விட வைத்தார். புதன் தசை சுக்கிர புக்தி ஜுன் 2013 ல் ஆரம்பித்ததும் வாழ்க்கையில் மாற்றம் இருக்கும்.

சுக்கிரன் நான்கில் திக்பலமாக இருப்பது நல்லது. இதுவரை நடைபெற்ற, நடைபெறும் குரு, சனி, புதன் தசைகள் அனைத்துமே எட்டில் இருக்கும் ராகு சாரம் பெற்றதும் நன்மை தரும் அமைப்பல்ல.

துலாம் ராசிக்கு ஏழரைச் சனி நடப்பதும் கஷ்டங்களைக் கொடுக்கும். ராகு, புதனுக்குரிய முறையான பரிகாரங்களை செய்யுங்கள். ஏழரைச் சனி முடிந்ததும் நல்லவை நடக்கும். எதிர்காலம் கவலைப்படும்படி இருக்காது.



J.பானுமதி,
1775/1 சோலை காலனி,
சிவகாசி.

கேள்வி:

என் மகன் திருமணம் எப்போது நடக்கும்? பரிகாரம் செய்ய வேண்டுமா? மகளின் திருமணமும் தாமதம்தான். குடும்ப தோஷம் உள்ளதா?

பதில்:

மேஷ லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். சனிதசை/ சந்திர புக்தி நடப்பு (28.9.75 – 8.20 PM சிவகாசி)

திருக்கணிதப்படி லக்னத்துக்கு இரண்டில் கேது எட்டில் ராகு. ஏழாமிடத்தில் ஆறுக்குடையவன் அமர்வு. ராசிக்கு இரண்டில் சனி

குரு
லக்
கேது
சந்,செவ்
ராசி
சனி
சுக்
ராகு
புத
சூ
ராசிக்கு ஏழாமிடத்திற்கு செவ்வாய் பார்வை. இவை ஒருபுறம் இருக்க நமது இந்து தர்மப்படி திருமணம் என்பதே வம்ச விருத்திக்குத்தான் என்பதால் கடுமையான புத்திர தோஷம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

உங்கள் மகன் ஜாதகத்தில் ஐந்துக்குடைய சூரியன் ஆறில் மறைந்ததும் புத்திர காரகன் குரு பனிரெண்டில் மறைவு பெற்றதும் கூட திருமணத்திற்கான தடைகள் தான்.

ஜாதகப்படி திருமணம் இன்னும் தாமதமாகக் கூடிய அறிகுறிகள்தான் இருக்கின்றன. தெய்வ அனுகூலம்தான் வேண்டும். பரிகாரங்களாக ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்யவேண்டும்.

 ராகுவிற்கான தோஷம் விலக ஒரு ஜென்ம நட்சத்திரத்தன்று பழமையான சிவன் கோவிலில் அல்லது ஸ்ரீகாளஹஸ்தியில் ருத்ராபிஷேகம் செய்வதோடு கந்தர்வராஜ ஹோமமும் செய்தால் தடைகள் விலகி நல்ல வாழ்க்கை அமையும்.



ஆர். அறிவொளி லோகாம்பாள்.
நரசிங்கபுரம்.
கிருஷ்ணாபுரம்-642111.



கேள்வி:

மூன்று முறை அரசுவேலை கிடைத்தும் நிலைக்கவில்லை. நிரந்தர அரசுவேலை கிடைக்குமா? தையல் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். பணம் கொடுத்து அரசு வேலை வாங்க ஏற்பாடு செய்து வருகிறேன். வெற்றி கிடைக்குமா?

பதில்:

விருச்சிக லக்னம் மேஷ ராசி அசுவினி நட்சத்திரம். செவ்வாய் தசை / ராகு புக்தி. (16-4-1969 9.00pm கரூர் )

லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் ஆட்சி பெற்றாலும் அவர் தசையின் போது
உங்களுக்கு முதலில் அவர் ஆறுக்குடையவனாகத்தான் செயல்படுவார். மேஷம் அவருக்கு மூலத்திரிகோண வீடு என்பதால் இந்த பலன். 

தர்ம கர்மாதிபதிகள் இருவரும் சேர்ந்திருந்தாலும் இருவரும் ஆறில் மறைவு. கூடவே புதனும் நீச சனியும்.

சுக்,
ராகு
சந்,சூ,
பு,சனி
ராசி
செவ்,
லக்
குரு,
கேது
சூரியன் உச்சம் என்பதால் அரசு வேலை வந்தது. ஆனால் அவர் மறைவு பெற்று நீச சனியுடன் ஒரே டிகிரியில் இணைவதால் தடை உண்டு. மேலும் அஷ்டமாதிபதி இணைவும் அங்கே நல்லது செய்யாது.

மேலும் தசாநாதன் செவ்வாய் எட்டுக்குடைய புதன் சாரத்தில் இருக்கிறார். சாரநாதனும் தசா நாதனுக்கு ஆறில் மறைவு. நடைபெறும் புக்தி நாதன் ராகுவும் ஜீவன ஸ்தானத்திற்கு எட்டாமிடமான மீனத்தில் வக்கிர சுக்கிரனுடன் இணைவு பெற்றுள்ளதால் கணவர் மூலமாக வேலைக்கு ஏற்பாடு செய்து பணம் கொடுத்து ஏமாறுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. உஷார்.

(அக் 2012  மாத இதழில் வெளிவந்தது.)

3 comments :

  1. NAME : T.KARTHICK KUMAR
    DOB : 31.10.1988
    TIME : 06.44 AM
    PLACE OF BIRTH: PATTUKKOTTAI, TAMILNADU

    நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் ?என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?

    ReplyDelete
  2. NAME : M.S.DINESH
    DOB : 21.09.1982
    TIME : 01.55 PM
    PLACE OF BIRTH: CHENNAI, TAMILNADU


    அன்புள்ள அய்யா அவா்களூக்கு

    நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? திருமணம் எப்போது நடக்கும்? என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?

    ReplyDelete
  3. வணக்கம் அய்யா.
    நான் லண்டனில் இருக்கிறேன். நான் இங்கேயே குடியுரிமை வாங்க ஆசைபடுகிறேன். எனக்கு உதவிக்கு ஆள் இல்லாமல் இருக்கிறேன். என் அம்மா எனக்கு இங்கு குடியுரிமை கிடைக்கும் என்று அடிக்கடி சொல்லிகொண்டே இருக்கிறார். எனக்கு கிடைக்குமா? எப்படி இருக்கும் என் எதிர்காலம்.. கவலையாக இருக்கிறது.. எனக்கு தங்களின் அறிவுரை வேண்டும்..
    பிறந்த தேதி: 09-08-1989
    பிறந்த நேரம்: 4.30 am
    பிறந்த இடம் : புதுக்கோட்டை

    ReplyDelete