“ஜோதிட மகாகுரு”
“ஜோதிடக்கலை அரசு”
ஆதித்ய குருஜி
பதில்கள்
S. நாகப்பன்
ஊர் பெயர் இல்லை.
கேள்வி:
எனது மகள் வந்தனா ஜாதகக் குறிப்பு அனுப்பியுள்ளேன். அவளின் திருமணம் எப்போது? வசதியான படித்த மாப்பிள்ளை அமையுமா? உயர் கல்வி எம்.பி.ஏ. படிக்கிறாள். படித்து
அரசு உத்தியோகம் கிடைக்குமா? நடப்பு சூரிய மகா தசையில் யோக பலன்கள் உண்டா?
நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகக் குறிப்பில் உங்கள் மகள் பிறந்த இடம் குறிப்பிடப்பட்டவில்லை. நீங்கள் அனுப்பியுள்ள நேரப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் உங்கள் மகள்
பிறந்திருந்தால் மேஷ லக்னம் வருகிறது.
ஆனால் ஜாதக குறிப்பில் அவர் மீன லக்னம் என்று உள்ளது. தசா புக்தி கணக்கும் உதைக்கிறது. ஆகவே பிறந்த நேரம், நாள், பிறந்த
இடம் ஆகிய சரியான குறிப்புகளை அனுப்பினால் மட்டுமே என்னால் பதில் சொல்ல முடியும்.
க. சுப்பிரமணியன்,
சாந்தி நகர், பாளையங்கோட்டை,
திருநெல்வேலி
கேள்வி:

பதில்:
மேஷ லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம்.
புதன் தசையில் சூரிய புக்தி நடக்கிறது. லக்னத்திற்கு ஏழில் சனி உச்சம் பெற்றதோடு எந்த வித பங்கமும் அடையாமல் முழு நேர்வலிமை பெற்றது தவறு. இங்கு சனி சூட்சுமவலு
அடையாததோடு சுக்கிரனோடு பரிவர்த்தனையும் பெற்று இன்னும் அதிக வலு அடைந்து விட்டார்
சந்
|
ல
|
ராகு
|
|
செவ்
|
|||
சூ,சுக்
|
|||
கேது,புத
|
குரு
|
சனி
|
லக்னத்திற்கு ஏழிலும் ராசிக்கு எட்டிலும் சனி இருக்கிறார். லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை செவ்வாய் பார்க்க, ராசிக்கு இரண்டாம் வீட்டை சனி பார்க்கிறார். அதைவிட
பெரியதாக ஆறுக்குடைய பாவியாகிய புதன் தசை நடக்கிறது. ராசிக்கு புதன் ஏழுக்குடையவர் என்பதால் புதன் தசை சுக்கிர புக்தியில் உங்களுக்கு மாமா வழியில் உறவில்
திருமணம் நடந்திருக்கும்.
புதன் ஆறுக்குடையவர் என்பதாலும் மீனராசிக்கு அஷ்டமச் சனி நடப்பதாலும் தற்போதைய சூரிய புக்தியில் சூரியன் சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் திருமணம் தொடர்பான வழக்குகள் உங்களுக்கு வரும். லக்னபாவியின் தசை நடப்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் இருக்கத்தான் செய்யும்.
குருபகவான் ராசியை பார்ப்பதாலும் லக்னத்தை உச்சசனி பார்ப்பதாலும் உங்களுக்கு ஆன்மீகத் தேடல்கள் இருக்கும். தியானம், சித்து வேலைகள், குண்டலினி சக்தி என்று
திரிவீர்கள். அவ்வளவுதான். அதோடு ஏழாமிடத்து சனி சில முரண்பட்ட நாட்டங்களையும் உங்களுக்கு அளித்திருக்கும்.
ஆனால் பத்தாமிடத்தில் சூரியன் திக்பலம் பெற்றதும், பத்துக்குடையவன் பரிவர்த்தனை ஆனதும் நீங்கள் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிவீர்கள் என்பதைக்
காட்டுகிறது. ஆறாமிடமும் அடிமை வேலையை குறிக்கும் என்பதால் நீங்கள் அரசு வேலைக்கு முயற்சிப்பது வெற்றியை தரும்.
புதனும், சந்திரனும் குருவின் வீடுகளில் ஒருவருக்கொருவர் கேந்திரமாக இருப்பதாலும், இரண்டாமிடத்தை குரு பார்ப்பதாலும் உங்களுக்கு ஜோதிடம் ஓரளவிற்கு வரும்.
லக்ன பாவிகளான சனி சுக்ரன் புதன் வலுப் பெற்று, லக்ன சுபர்கள் குரு சந்திரன் செவ்வாய் வலுவிழந்தார்கள். லக்னம் சனிபார்வை பெற்று பலவீனம் அடைந்தது. எனவே
லக்னாதிபதி செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்வது நல்லது.
ஹரீஷ்
கொச்சி -27
கேரளா
கேள்வி:
இதுவரை திருமணம் ஆகவில்லை. ஏன் தாமதம் ஆகிறது? நிலையான வேலை எப்போது?
பதில்:
துலாம் லக்னம். சிம்ம ராசி. பூரம் நட்சத்திரம்.
பதினோராமிடமான சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் சனி சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் ராகுவின் பிடியில் இருக்கிறார்கள். இதில் லக்னாதிபதியும் களத்திரகாரகனுமாகிய
சுக்கிரன் சூரியனுடன் ஒரே டிகிரியில் இணைந்து பரிபூரண அஸ்தமனம் ஆகியிருக்கிறார்
செவ்
|
|||
கேது
|
குரு
புத
|
||
சூ,சந்,
சு,ரா,ச |
|||
லக்
|
சுக, புத்திர ஸ்தானாதிபதியான சனியும் ராகுவுடன் கூடி ஆறு டிகிரிக்குள் கிரகணமாகி விட்டார். களத்திரஸ்தானாதிபதி செவ்வாயும் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில்
இருக்கிறார். தற்போது ராகு தசையில் சனி புக்தி நடக்கிறது.
உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி ராசிநாதன் இருவருமே கெட்டார்கள். லக்னாதிபதி சுக்கிரனை வலுப்படுத்த முறையான ப்ரீத்தி பரிகாரங்களை செய்தால் மட்டுமே அவர் தாம்பத்திய சுகம் கிடைக்கச் செய்வார். அதோடு ராகு தோஷத்தை நிவர்த்தி செய்ய அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு உங்கள் பெயர் ராசிப்படி உச்சாடனம் செய்யப்பட கோமேதகம் இடது கை மோதிர விரலில் அணிவது நல்லது.
B.கிஷோர்
த/பெ பாலசுந்தரம்
கோவை 641034
கேள்வி:
சொந்தவீடு, தொழில் எல்லாம் இழந்து வாடகை வீட்டில் இருந்து வருகிறேன். எப்போது எங்களுக்கு நல்ல காலம் வரும்? என் மகன் படிப்பு எப்படி இருக்கும்? தடை வராமல்
படித்து முடிப்பானா? அவனுக்கு தொழில் எப்படி அமையும்? வீடு எப்போது அமையும்? உடல்நலம் எப்படி இருக்கும்?
பதில்:
உங்கள் மகன் கிஷோருக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம்.
கிஷோரின் ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் நீசம் பெற்று அஷ்டமாதிபதி சனியுடன் மிகவும் நெருங்கி இணைந்து இருக்கிறார். இவர்கள் இருவரையும், லக்னத்தையும்
ஒன்பதாமிடத்திலிருந்து குரு பார்வையிடுகிறார்.
பு, குரு,
ராகு
|
சூ
|
செவ்
|
|
சு
|
லக்
|
||
சந், ச
|
கேது
|
ஆனால் குருபகவான் அங்கே நீச புதனுடன் இணைந்ததோடு ராகுவுடனும் ஒரே டிகிரியில் இணைந்து கிரகணமானதால் அவரது பார்வைக்கு வலு இல்லாமல் போய் விட்டது.
மேலும் கடக லக்னத்திற்கு குருபகவான் ஆறுக்குடைய பாவியாகத்தான் செயல்படுவார். ஏனெனில் குருவின் மூலத்திரிகோண ஸ்தானமான தனுசு ராசி கடகத்திற்கு ஆறாம் பாவமாக
அமைவதால்தான்.
தற்போது ஆறு வருடங்களாக மூன்றாமிடமான கன்னியில் இருக்கும் கேது தசை நடைபெறுகிறது. ராகு கேதுக்கள் ஆறு பனிரெண்டுக்குடைய குரு புதனுடன் இணைந்து இருப்பதால் முழுக்க முழுக்க அவர்களது பலனைத்தான் செய்வார்கள்.
பத்தாம் பாவத்தில் தனாதிபதி சூரியன் திக்பலத்துடன் உச்சமாகி இருப்பதால் அரசுத்துறை அல்லது அது சார்பான தொழில் அமையும். சொந்த வீடு சுக்கிர தசையின் பிற்பகுதியில்
அமையும்.
இதுவரை நீங்கள் செய்த பரிகாரங்களெல்லாம் சரிதான். ஆனால் லக்னாதிபதி சந்திரனை வலுப்படுத்தும் எதையும் நீங்கள் இதுவரை செய்யவே இல்லையே... வீட்டில் சோமப்ப
சித்தரின் திருவுருவ படத்தினை வைத்து திங்கட்கிழமை தோறும் வழிபாடு செய்யுங்கள். வருடம் ஒருமுறை ஜென்ம நட்சத்திரமன்று திங்களூர் அல்லது அருகிலுள்ள
சந்திரனுக்குரிய திருத்தலம் சென்று பரிகாரங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். யானைத் தந்த கலரிலான உடைகள் எப்போதும் உடலில் இருக்கும்படி அணிவது நல்லது.
(ஜூலை 2012 மாத இதழில் வெளிவந்தது.)
(ஜூலை 2012 மாத இதழில் வெளிவந்தது.)
sir iam kumar from chennai age 44
ReplyDeleteennaku nalla velai ellai business seithu nasatam erpattu enotaiya
vedai ezanten eppothu rombha kastapatukiren pls help me sir
10.5.1969 date of birth kumbha rasi satyam natchatiram kumbha lakanam
sir iam RPNarayanan my date 5/7/1975 birth 4.55 PM chennai how is my life money problem when it go sir give me comment
ReplyDeletesir
ReplyDeleteRight now iam on the verge of death due to mounting debts, have thrown out of my family, dont know what to do??/ can you please tell me the remedy sir, whether i will be in a position to live in this world
My DOB 21/09/1962 TOB, 5.50AM, POB. Chennai
நல்ல ஆலோசனை ஐயா
ReplyDelete