Tuesday, July 16, 2013

பாபக் கிரகங்களின் சூட்சும வலு...! (A-003)



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

இயற்கைப் பாபர்களான சனியும், செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை மட்டும் அடைவது அவர்களது தசையில் அதிர்ஷ்டத்தைத் தருவது இல்லை. உண்மையில் இயற்கைப் பாபர்களான சனியும், செவ்வாயும் ஸ்தான பலத்தை அடையும் பொழுது “நன்மை” களைத் தருவதற்குப் பதிலாக அவர்களது “தன்மை” களை மட்டுமே தருவார்கள்.

அதிலும் “ஷட்பலம்” எனப்படும் ஆறுவித கிரக பலங்களில், முதன்மை பலமான ஸ்தான பலத்தை பாபர்கள் கேந்திர, கோணங்களில் அடைவது நல்லது அல்ல. லக்னாதிபதியாகவே இந்த கிரகங்கள் அமைந்தாலும், சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெறாமல் அவை ஆட்சி, உச்சம் எனப்படும் ஸ்தான பலம் மட்டும் பெற்று வலுப் பெறுவது நன்மைகளைத் தராது.

சனியும், செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் ஸ்தான பலம் இழந்து (ஆட்சி, உச்சம் பெறாமல்) திக்பலமோ, சுபர்களின் பார்வை மற்றும் சேர்க்கை எனப்படும் சுபத்துவத்தையோ அடைந்திருப்பது நன்மைகளைத் தரும். ஆட்சி, உச்சம் பெற்றால் மறைவிடங்களில் இருப்பதும், ராகுவுடன் சேராமல் கேதுவுடன் இணைவதும் (சூட்சுமவலு) சிறந்த யோகத்தையும், ஜாதகருக்கு நல்ல குணங்களையும் தரும்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலான  (2011ல் எழுதப்பட்டது) எனது ஜோதிட ஆய்வில் நான் கண்டுணர்ந்த இதையே பாபக் கிரகங்களின் சூட்சும வலுக் கோட்பாடு” எனக் குறிப்பிடுகிறேன்.

பொதுவாக சனியும், செவ்வாயும் குணக்கேடுகளுக்கு காரணமானவர்கள். தனித்து வலிமை பெற்ற செவ்வாயால் ஒரு முரட்டுத்தனமான முன்கோபக்காரனையும், ஆட்சி, உச்சம் மட்டும் பெற்ற சனியால் ஒரு முட்டாள்தனமான பிடிவாதக்காரனையும் மட்டுமே உருவாக்க முடியும்.

கிரகங்கள் சுபர்கள், பாபர்கள் என்று ஏன் பிரிக்கப்பட்டன?

மனித வாழ்விற்குத் தேவையான நல்ல செயல்பாடுகளைத் (காரகத்துவங்கள்) தரும் கிரகங்கள் சுபர்கள் எனவும், தேவையற்ற குணங்களையும், பிறருக்கு துன்பம் தரும் செயல்களையும் தரும் கிரகங்கள் பாபர்கள் என்றும் வகுக்கப் பட்டன. இதில் சுபரானாலும், பாபரானாலும் முக்கிய பலமான ஸ்தான பலத்தை (ஆட்சி, உச்சம்) அடைந்தால் தங்களின் செயல்பாடுகளை ஜாதகருக்கு முழுமையாகச் செய்வார்கள்.

இதற்கு நேரிடையான அர்த்தம் என்னவெனில், குரு லக்னாதிபதியாகி ஸ்தான பலம் பெற்றால், அல்லது லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் ஜாதகர் கருணை, பெருந்தன்மை, ஒழுக்கம் போன்ற குணங்களோடும், புதன் வலுப்பெறின் அறிவாளியாகவும், செவ்வாய் வலுப் பெற்றால், கோபக்காரனாகவும், அசட்டுத் துணிச்சல் கொண்டவனாகவும், சனி வலுத்தால் பிடிவாதக்காரனாகவும் தன்னைத்தானே புத்திசாலி என நினைத்துக் கொள்ளும் முட்டாளாகவும் இருப்பார்.

ஒரு நல்ல ஜாதகத்தில் சுபர்கள் நேரிடையாக வலுப் பெற வேண்டும். பாபர்கள் நேர்வலு அடையக் கூடாது.

பாபக் கிரகங்கள் நேர்வலு “மட்டும்” அடைந்த ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதகங்களை அலசிய என்னுடைய நீண்ட ஜோதிட ஆய்வில் சனி, செவ்வாய் உச்சம் மட்டும் அடைந்த எந்த ஒரு ஜாதகருமே அவர்களுடைய தசையில் மேன்மையான பலன்களை அடைந்தது இல்லை.

சனி உச்ச பங்கம் அடைந்திருந்தாலோ, அல்லது குருவின் பார்வை, இணைவையோ, அல்லது வேறு சுபர்களின் தொடர்பையோ பெற்று சுபத்துவம் பெற்றிருந்தாலோ அல்லது கேதுவுடன் இணைந்தோ,  வேறு வழிகளிலோ, சூட்சும வலு அடைந்திருந்தால் மட்டுமே சுக வாழ்வை அளிப்பார். செவ்வாயும் அப்படித்தான். இயற்கைச் சுபர்களைப் போல தனித்து அதிர்ஷ்டம் தரும் வல்லமை பாபர்களான சனிக்கும், செவ்வாய்க்கும் கிடையாது.

துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் தனித்து உச்சம் பெற்று, சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெறாத சனி, தனது தசையில் சாதாரண வாழ்வையே அளிப்பார். லக்னத்தோடு சம்பந்தப்பட்டு வலிமை பெறும் சனி, உயரம் குறைந்த தன்மையையும், பிடிவாத குணத்தையும், தன்னைச் சுற்றி உள்ளவர்களோடு ஒத்துப் போகாமல் குதர்க்கவாதம் பேசுபவர்களையும், ஒன்றுமில்லாத தன்னைப் பற்றி பெரிதாக நினைப்பவர்களையும் உருவாக்குவார்.

அதேபோல செவ்வாயும் உச்ச பலமோ, ஆட்சி பலமோ மட்டும் பெற்று, லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் அந்த நபர் வீரம் என்ற பெயரில் குற்றச் செயல்களை செய்பவராக இருப்பார். ஆயுதங்களை கையாள்வதில் விருப்பம் உள்ளவராகவும், முன்யோசனையில்லாமல் அசட்டுத் துணிச்சலுடன் கூடிய செயல்களைச் செய்பவராகவும், கடுமையான கோபக்காரனாகவும், முரடனாகவும் இருப்பார். உச்சபங்கம், மறைவு பெறுதல், அல்லது சுபத்துவம், சூட்சும வலு ஆகியவை மட்டுமே இந்த குணங்களை மாற்றும். பாபத்துவம் இக் குணங்களைக் கூடுதலாக்கும்.

உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களுமே நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுபர், அசுபர்கள் என கிரகங்களைப் பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...!

ஒரு கிரகம் ஸ்தான பலம் எனும் ஆட்சி, உச்சம் பெறுகிறது என்றால் அதன் செயல்பாடுகள் அதாவது  அந்தக் கிரகத்தின் காரகத்துவங்கள் வலிமை பெறுகின்றன என்று அர்த்தம். அந்த நிலையில் மனிதனுக்கு தேவையான எந்த வித நல்ல   காரகத்துவங்களும் இல்லாமல், வெறுமனே வறுமை, பிணி, தரித்திரம், கடன், அடிமை வேலை, உடல் ஊனம் ஆகியவற்றை மட்டுமே தன் செயல்பாடுகளாகக் கொண்ட சனி, ஸ்தான வலுப்பெற்றால் உங்களுக்கு எதைத் தருவார்? அதைப்போலத்தானே செவ்வாயும்?

(சனியிடம் ஆயுள் பலம் இருக்கிறதே என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். அதுவும் தவறுதான். அதைப் பற்றிய விளக்கத்தை ஏற்கனவே “சனி எப்படி ஆயுளுக்கு காரகன் ஆனார்” என்ற தலைப்பில் தனியாக விளக்கியிருக்கிறேன்.)

ஜாதகத்தில் செவ்வாய் தனித்து வலிமை பெற்று, லக்னம் அல்லது ராசியோடு தொடர்பு கொள்ளும் நிலையில், ஒருவருக்கு, செவ்வாயின் செயல்பாடுகளான முரட்டுத்தனம், ஆயுதங்களை கையாளுவதில் விருப்பம், வன்முறையில் நாட்டம், அசட்டுத் துணிச்சல், இரக்கமற்ற அதிகாரம், கடின மனம், முன்யோசனையின்றி எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளுதல் போன்ற குணங்களே இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு பத்தாமிடத்தில் உச்சமும், திக்பலமும் அடைந்து எவ்வித சுபர் பார்வையும் சேர்க்கையும், இல்லாமல் தனித்திருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில், ஜாதகர் கொடூர மனம் உள்ளவராக இருப்பார். கண்டிப்பு எனும் பெயரில் மூர்க்கத்தனம் இருக்கும். கருணையும், மனிதநேயக் குணங்களும் இன்றி மகா கோபக்காரராக ஜாதகர் இருப்பார். செவ்வாய் வக்ரமடைந்து, வேறு வகையில் பலவீனம் அடைந்திருந்தால் மட்டுமே இந்த பலன்கள் மாறும்.

நமது மூலநூல்கள் செவ்வாய் வலுப் பெற்றவனை, சேனாதிபதி, மகாவீரன், யுத்தத்தில் எதிரிகளின் தலைகளை பந்தாடுபவன், கரடு முரடானவன், அதிகாரம் செய்பவன் என்றுதான் சொல்கின்றனவே தவிர, இவன் நல்லவன், இளகிய மனம் உடையவன், வசதி படைத்தவன், சொகுசு வாழ்க்கை வாழ்பவன், அன்பே வடிவானவன் என்று சொல்லவே இல்லையே...!

சனி ஸ்தான பலம் மட்டுமே பெற்று தனித்து உச்சம், ஆட்சியாக இருக்கும் நிலையில் கடுமையான பலன்களைச் செய்வார். அவரின் காரகத்துவங்களான வறுமை, தரித்திரம், நோய், அடிமை நிலை, கடன், உடல் ஊனம், அழுக்கான இடங்களில் வேலை போன்றவைகளை வலுவாகத் தருவார்.

உச்ச நிலையில் வக்ரம் பெறுவது, சுபத்துவம், சூட்சும வலு போன்றவை மட்டுமே மேற்கண்ட பலன்களை மாற்றும். உச்சத்தில் வக்ரம் என்பது ஒருவிதமான பலமிழந்த நிலையைக் குறிக்கும் என்பதால், சனியின் கொடிய பலன்கள் இல்லாமல் அதற்கு நேர்மாறான பலன்கள் இருக்கும்.

மேஷத்தில் நீச்சம் பெறும் சனி, சுபத்துவம் அடைந்தால், சிறந்த சொகுசு வாழ்க்கையை அளிப்பார். எவ்வித சுப சம்பந்தமின்றி தனித்து நீச்சம் பெற்றால் கூட தனது கொடிய காரகத்துவங்களை தரும் சக்தியின்றி அதற்கு நேர்மாறான கடனற்ற, வறுமையற்ற, நோயில்லாத வாழ்க்கையை சனி அளிப்பார்.

சரி..

சனியும் செவ்வாயும் ஆட்சி, உச்சம் பெறுவது எதற்காக? அவர்கள் ஸ்தான பலம் மட்டும் பெற்றால் நல்ல பலன்களே இல்லையா என்று கேட்பீர்களேயானால், ஜாதகத்தில் அவர்களுடைய ஆதிபத்தியங்கள் நிச்சயம் வலிமை பெறும். அவர்களுடைய தசையில் அவர்களின் கொடிய காரகத்துவங்கள் நடைபெறும் என்றாலும், ஜாதகரின் எந்த ஆதிபத்தியங்களுக்கு அவர்கள் உரியவர்களோ அந்த இடங்கள் மேம்படும்.

உதாரணமாக மேஷ லக்னத்திற்கு பத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் தசையில் நல்ல பலன்கள் கிடைக்காவிட்டாலும், அவர் லக்ன, அஷ்டமாதிபதி என்பதால் உறுதியான உடலும்,  நீடித்த ஆயுளும் இருக்கும். தனித்த செவ்வாய் தசையில் அதிர்ஷ்டங்கள் கிடைக்காது. ஜாதகர் உடற்பயிற்சியில் விருப்பமாகி உடலைப் பேணுவதும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுபவராகவும் இருப்பார்.

துலாத்திற்கு, லக்னத்தில் உச்சம் மட்டும் பெற்ற சனியின் தசையில், ஜாதகர் அதிர்ஷ்டங்களை அடைய மாட்டார். சனி 4, 5 ஆம் இடங்களுக்கு உரியவர் என்பதால் சனி தசையில் ஜாதகரின் புத்திரர்கள், கல்வி, தாயார் வழியில் ஜாதகருக்கு நல்ல பலன்கள் இருக்கும். அவ்வளவே...!

இன்னுமொரு முக்கிய சூட்சுமமாக, ஒரு ஜாதகத்தில் பாபக் கிரகங்கள் பலம் பெறுவது எவ்வாறு நன்மை செய்யும் என்றால், நமது ஜோதிட விதிகளின்படி ஒரு தசை நன்மையான பலன்களைத் தர வேண்டும் எனில் அந்த தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் வலிமை அடைய வேண்டும் என்பது முக்கியமானது. 

அதன்படி சனி, செவ்வாயின் ராசிகளான மேஷம், விருச்சிகம், மகர, கும்பங்களில் அமர்ந்து தசை நடத்தும் ஒரு கிரகம் நற்பலன் தர வேண்டும் என்றால் அந்தக் கிரகத்திற்கு வீடு கொடுத்த சனியும், செவ்வாயும் வலுப் பெற வேண்டும்.

உதாரணமாக  ராகு, சர ராசிகளில் (மேஷம், மகரம்) மூன்று, பதினொன்றாமிடங்களில் இருக்கும்போது, ராகுதசை மிகப் பெரிய பணவரவை அளிப்பதற்காக, ராகு இருக்கும் வீட்டின் அதிபதிகள் வலுப்பெற வேண்டும் என்ற நிலையில் சனியும், செவ்வாயும், உச்ச வலுப் பெற்றே ஆக வேண்டும்.

அந்த நிலையில் கூட எனது சூட்சும வலுக் கோட்பாட்டின்படி அவர்கள் எட்டு, பனிரெண்டாமிடங்களில் மறைந்துதான் உச்சம் பெறுவார்கள். அப்போதுதான் ராகு தசை முழுக்க நன்மை செய்யும். இந்த அமைப்பை நான் அரசியல்வாதிகள் அல்லது அவர்களை அண்டிப் பிழைப்போரின் ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன்.

அதாவது விருச்சிக லக்னத்திற்கு மூன்றான மகரத்தில் (சர ராசி) ராகு அமர்ந்து, ராகுவுக்கு வீடு கொடுத்த சனி, துலாத்தில் லக்னத்திற்கு பனிரெண்டில் மறைந்து உச்சம் பெற்றும், மிதுனத்திற்கு பதினொன்றான மேஷத்தில் ராகு இருந்து, அவருக்கு இடமளித்த செவ்வாய், மகரத்தில் எட்டில் மறைந்து உச்சம் பெறும் நிலையில் ராகுதசை மறைமுகமான தனயோகத்தை அளிக்கும்.

இந்நிலையில் ராகு, விருச்சிகத்திற்கு பாக்கியாதிபதியான சந்திரனின் சாரமும், மிதுனத்திற்கு ஐந்துக்குடைய சுக்கிரனின் சாரமும் பெற்றிருப்பார். ராகு யோகம் தரும் இடங்களாக மூலநூல்களில்  சொல்லப்படும் ஆமேடம், எருது, சுறா, நண்டு, கன்னியும், 3, 11 ம் ஸ்தானங்களும் இதில் அடங்கும்.  

சனி, செவ்வாயின் உச்ச நிலைகள் இது போன்ற நிலைகளுக்கு மட்டும்தான் பயன்படுமே தவிர அவர்கள் நேரிடையாக அதிர்ஷ்டம் தருவதற்கு அல்ல.


தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888,044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

(ஆக 17-23, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)

60 comments :

  1. மிக்க நன்றி.
    ராசிக்கு யார் பாதகாதிபதி என்று எப்படி கண்டு பிடிப்பது ?

    ReplyDelete
    Replies
    1. கேள்வியை தெளிவாக கேளுங்கள். கோட்சாரத்தை பற்றி கேட்கிறீர்கள் என்றால் கோட்சார அமைப்பில் பாதகாதிபதி கிடையாது

      Delete
    2. ஜெனன (ஜாதகரின் பிறந்த நேரம்) ராசிப்படி, சந்திரனுக்கு யார் பாதகாதிபதி என்று எப்படி கண்டுபிடிப்பது ?

      Delete
    3. லக்ன விதிகள் தான் ராசிக்கும். மகர லக்னத்திற்கு செவ்வாய் என்றால் மகர ராசிக்கும் செவ்வாய்தான் இது கட்டுரையிலேயே வருகிறதே.புரிந்து படியுங்கள்

      Delete
    4. அய்யா.. ரிஷப லக்னம் .. கன்னியில் குருவும் சனியும் சேர்ந்து இருந்தால் என்ன பலன்? இது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுமா ?

      Delete
    5. தெய்வ அருள் எப்போது கிடைக்கும் கட்டுரையை படிக்கவும்

      Delete
    6. நன்றி குருஜி

      Delete
    7. பாதகராசி
      என்பதன் அடிப்படையாது
      11-9-7என
      எவ்வாறு
      தீர்மானிக்கட்டது?

      Delete
  2. எந்தலக்னமாக இருந்தாலும் பாதகாதிபதி செல்லும் பாதசாரமே அதன் திசையை நடத்துகிறது,இல்லையாஜீ? அதே நேரம் யோகாதிபதிகள் இருவரும் பாதகாதிபதி பாதம் பெற்று நின்றாலும் அது யோகம் தருவதில்லையே ஜீ? தகுந்தவிளக்கம் சொன்னால் அனைவருக்கும் பலன் அடைவர்

    ReplyDelete
    Replies
    1. ஐயா, சிறு சந்தேகம். பாதகாதிபதியின் சாரத்தை ஏற்ற தாசாநாதனின் பலன் கள் முற்றிலும் பாதகமாக மாறூமா? அல்லது ஒரு பகுதி அளவா என கூறுங்கள். மேலும் தங்கள் கருத்துபடி ராகு மற்றும் கேதுக்களுக்கு சாரம் ஒரு முக்கியமல்ல என கூறி இருக்கிறீர்கள். அப்படியென்றால் பாதாகாதிபதியின் சாரம் ஏற்ற ராகுவின் தசை எப்படி இருக்கும்?

      Delete
    2. ஐயா, மேலும் ஒரு சந்தேகம். பாதக ஸ்தான அதிபதி மட்டும் கெடுதல் பண்ணுமா அல்ல்து பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள், ஸ்தானத்தை பார்த்த கிரகங்கள், அல்ல்து பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சாரத்தை ஏற்ற கிரங்களும் பாதகம் செய்யுமா? நன்றி .

      Delete
    3. எனக்கும் இதே கேள்விகள்தான்......

      Delete
    4. அய்யா எனக்கு ஒரு சந்தேகம் என்னுடைய ஜாதகத்தில் லக்கினம் மேஷம். பதினொன்ற்றம் அதிபதி ஏழில் உட்சம் பெற்று செவ்வாய் உடன் உள்ளார். சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது சனி புத்தியில் நன்மை செய்வாரா அல்லது கேடு ப்ளலன்களை செய்வாரா சற்று விளக்கவும்

      Delete
  3. முற்றிலும் உண்மை உண்மை உண்மை .பாதகாதியும் அப்படியே .தனது சுய சாரம் பெற்றால் மட்டுமே பாதகத்தை செய்வார் .இதுதான் எல்லாவற்றிலும் உண்மை . நன்றி Dr.Kr.cbe-31

    ReplyDelete
  4. ///////////////////////எந்த ஒரு ஜாதகத்திலும், பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது. அதாவது பாதகாதிபதி கிரகம் வலுவான இடங்களில் அமர்ந்து ஸ்தானபலம் பெற்று, சுபர் பார்வையும் பெற்று வலுவாவது நல்லதல்ல.

    அப்படி வலுவானால் முதலில் அனைத்து நல்லவைகளையும் நடத்தி முடிவில் மிகப் பெரும் பாதகத்தை அவர் செய்வார்.

    அதாவது மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம் இரண்டில் ஒன்றை வலுப்பெற்ற பாதகாதிபதி நிச்சயம் தனது தசை, புக்திகளில் செய்வார்.

    சுபர்கள் கேந்திரங்களுக்கு அதிபதிகளாகவும், பாவர்கள் திரிகோணங்களுக்கு அதிபதிகளாகவும் வரக்கூடாது என்ற கருத்து மறைமுகமாக பாதகாதிபதிகள் விஷயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

    உதாரணமாக கடகம், கும்பத்திற்கு நான்காமிட கேந்திரத்திற்கு அதிபதியாக சுக்கிரனும், ரிஷப, சிம்மத்திற்கு முறையே சனியும், செவ்வாயும் ஒன்பதாமிட பெருங்கோணத்திற்கு அதிபதிகளாகவும் வருவதாலேயே பாதகாதிபதி ஆகிறார்கள்.//////////////////////////////////////////////


    யோகாதிபதியே பாதாதிபதியாகி வலுப்பெற்றால் முதலில் நன்மையும் திசைமுடிவில் மிகப் பெரும் பாதகத்தை அதாவது மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம் இரண்டில் ஒன்றை தருவார் என்பதே பொருள் என்று கொள்ளலாம் இல்லையா ஐயா.

    அப்படியாயின் பல ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்தாருக்கு முறையே சனி மற்றும் செவ்வாய் வலுப்பெற்றால் திசையின் ஆரம்பத்தில் நன்மையும் திசையின் முடிவில் பாதகமான பலன்களே நடைபெறும் என்று துணிந்து பலன் சொல்லலாமா ஐயா.

    அப்படியானால் ரிஷப சிம்ம லக்னத்தாருக்கு முழுமையான யோகமே கிடைப்பதில்லையா. பல ரிஷப லக்னத்தாருக்கு சனி திசைமுடிவில் கெடுபலன்கள் நடக்காமல் நல்லநிலையில் இருக்கின்றனரே. பல ஜோதிட நூல்களில் யோகாதிபத்யம் பெற்ற கிரகங்கள் பாதகாதிபத்யம் பெற்றால் பாதகாதிபத்ய பலன்களை செய்வதில்லை என்று கூறுகின்றனவே ஐயா. உண்மையில் அனைத்து லக்னங்களுக்கும் பாதகாதிபத்யம் என்றால் என்ன? ஏன் அவ்வாறு அமைத்தார்கள் என்பதற்கு அடிப்படையான காரணம் என்ன ஐயா மேலும் விளக்கங்கள் அளிக்க இயலுமா ஐயா. நன்றி.

    ReplyDelete
  5. அன்புள்ள மணி... மிகப்பெரிய நீண்ட விளக்கம் தேவைப்படும் சூட்சும விஷயங்களைப் பற்றிக் கேட்கிறீர்கள். தனித்தனியே லக்னங்களைப் பற்றி எழுதும்போது இதைப் பற்றி எழுதுகிறேன்

    ReplyDelete
  6. ஐயா எனது அக்கா பெண்ணின் ஜாதகத்தில் தனுசு லக்னம் 5ஆம் இடமாகிய மேஷத்தில் சூரியன் செவ்வாய் சனி செற்கை உள்ளது இது நல்லதல்ல என்று எனக்கு தெரிந்த ஒரு ஜேதிட நண்பர் கூறினார் இது எவ்வாறு விளக்கம் தாருங்கள் பணிவுடன் வாசகன்

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக ஒரு வீட்டில் பல கிரகங்கள் குறுகிய பாகைக்குள் இருக்கும் போது "கிரக யுத்தம்" என்ற அமைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுவும் அந்த கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று பகை பெற்றால் அவ்வளவு நல்லதல்ல. மேஷத்தில் செவ்வாய் ஆட்சி, சூரியன் உச்சம், மற்றும் சனி நீசம் பெறுகிறார்கள். இலக்கினாதிபதி குருவிற்கு செவ்வாயும் சூரியனும் நட்பு கிரகங்கள், சனி சம கிரகம். செவ்வாயும் சூரியனும் நட்பு கிரகங்கள் என்றாலும் சனியுடன் இருவருக்குமே பகை. இந்த அமைப்பு சனிக்கு நீச பங்க இராஜ யோகத்தை தர வாய்ப்பிருந்தாலும், இந்த வீடு மற்றும் கிரகங்களின் மேல் விழும் பார்வைகள், இலக்கினாதிபதியின் வலு, மற்றும் கிரகங்களின் பாகைகளை பொறுத்தே பலன்கள் அமையும். சூரியன் அருகே வந்தால், செவ்வாய் அஸ்தமனம் பெறும். சனிக்கு அஸ்தமனம் இல்லை என்று படித்திருக்கிறேன்.

      தங்கள் நண்பர் இந்த சேர்க்கையினால் 5ம் வீட்டிற்கு நல்லதல்ல என்று கூறினாரா? அல்லது பத்தாம் வீட்டிற்கா? அல்லது 2ம் வீட்டிற்கா என்பதை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  7. கும்ப லக்னத்துக்கு 6ல் வளர்பிறை சந்திரனுடன் சுக்ரன்
    10ல்ருந்து குருவால் பார்க்கப்பட்டால் சுக்ரி தசை பாதகமா???

    ReplyDelete
    Replies
    1. கும்ப இலக்கினத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி. அவர் ஆறாம் வீடான கடகத்தில் மறைய அவரது வலு குறைகிறது. உடன் அந்த வீட்டு அதிபதியான சந்திரனும் இருக்க, அவரது பலம் மேலும் குறைகிறது. ஆனால் பத்தில் ஆட்சி பெற்ற குரு பார்வை இருக்க அவருக்கு பலம் சற்று கூடும். ஆனால் உடன் சந்திரனும் இருப்பதால், அவருக்கும் குரு பார்வை கிடைக்கும் என்பதால், சுக்கிர தசை பெரிதாக பாதிக்காது என்பது எனது தாழ்மையான கருத்து.

      குருஜி மற்றும் அனைத்து வாசகர்களுக்கும், முந்திரி கொட்டை போல் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பதாக தயவு செய்து எண்ண வேண்டாம். எனக்கு ஜோதிட அறிவு மிக மிக குறைவு. குருஜி போன்ற பெரியவர்களின் பாடங்களை படித்து ஜோதிடம் பயில முனைகிறேன். கேள்வி பதில்களில் பங்கெடுப்பதன் மூலம் சற்று கூடுதலாக கற்றுக் கொள்ளலாம் என்பதனாலேயே சில கருத்துகளை பதிவிடுகிறேன். நான் தொழில் முறை ஜோதிடர் இல்லை என்பதால் எனது பதில்களை அப்படியே எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.

      Delete
  8. எனது பெரும் மதிப்பு குருஜீ அவர்களுக்கு ,

    அருள் முருகன்
    நாள் : 14/07/1981
    நேரம் : 04:09 PM
    இடம் : பட்டுக்கோட்டை


    கேட்டை நட்சத்ரம் 3 ம் பாதம் ,
    விருட்சக ராசி .

    விருட்சக லக்னம்

    1 ல் சந்திரன் ,
    3 ல் கேது ,
    8 ல் செவ்வாய் , புதன் , சூரியன் ,
    9 ல் சுக்கிரன் , ராகு ,
    11 ல் சனி , குரு.

    கேட்டை             3 ல்    லக்னம் ,
    புனர்பூசம்           3 ல்    சூரியன் ,
    கேட்டை             3 ல்  சந்திரன்                  
    மிருகசீரிடம்      4 ல்    செவ்வாய்             
    திருவாதிரை     3 ல்    புதன்         
    அஸ்தம்             1 ல்    குரு        
    ஆயில்யம்         2 ல்    சுக்கிரன்     
    உத்திரம்             4 ல்    சனி             
    பூசம்                    2 ல்    ராகு      
    உத்திராடம்        4 ல்   கேது     

    கெர்ப்ப செல் நீக்கி  தசா இருப்பு      
    புதன் தெசை    4 வருடம் 9 மாதம் 20 நாள் .

    தொழில் , பொருளாதாரம், வீடு வாகன வசதி மற்றும் எதிர் காலம் எப்படி இருக்கும் ?

    சூரிய, சந்திர, செவ்வாய் தெசைகள் எப்படி இருக்கும் ?

    ReplyDelete
  9. மிதுன லக்னம் (லக்னம் நின்ற நட்சத்திரம் புனர்பூசம்)
    தனுசு ராசி எனில் குரு பகவான் பாதகம் செய்வாரா? குருஜி

    ReplyDelete
  10. jjeevanprasath,

    குரு இருக்கும் இடத்தை பொறுத்தது என்று நினைக்கிறேன். தனுசு இராசியாக இருந்தாலும், மிதுன இலக்கினத்திற்கு குரு பாதகாதிபதி என்ற நிலை மாறாது. அவரது பலத்தை பொறுத்து அவரது திசையில் பலன்கள் அமையும். குரு வலுப்பெற்றால் அவரது தசையில் குருஜி சொன்ன பலன்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்காக கவலைப்படவேண்டாம். இறையருள் இருந்தால் இன்னல்கள் அகலும்.

    குருஜி, துலா இலக்கினத்திற்கு சூரியன் பாதகாதிபதி. அவர் உச்சம் பெற்று இலக்கினத்தை பார்ப்பதும், அவரது தசையில் கெடுபலன்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதல்லவா? ஆனால் அவருக்கு சுபர் பார்வையோ அல்லது அசுபர் பார்வையோ இல்லாத நிலையில், அவரது வலு கூடுமா? உச்சம் பெற்றதால் அவரது பாதகாதிபதி என்ற நிலை வலுவடையும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் சுபகர்த்தாரி யோகத்தில், முன் வீட்டில் ஆட்சி பெற்ற குருவும், பின் வீட்டில் ஆட்சி பெற்ற இலக்கினாதிபதி சுக்கிரனும், இருக்க, அவரது வலு இன்னும் கூடுமல்லவா? விளக்கமளிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. ஐயா மிக விரைவில் உங்கள் எழுத்துகள் புத்தகங்களாக வெளிவர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  12. ஐயா,
    என் பிறந்த நாள் 01-08-1989 8.15am
    சிம்ம லக்னத்தில் புதன், சுக்ரன், செவ்வாய் கேது, சுக்ரன்
    4 ல் மாந்தி
    5 ல் சனி
    7ல் ராகுu
    11ல் குரு
    12ல் சூரியன் சந்திரன்
    பலன் எப்படி இருக்கும்...
    I am preparing for Govt exams

    ReplyDelete
  13. ஒருவருக்கு ஏற்படும் அதீத பயத்திற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம்?

    ReplyDelete
    Replies
    1. லக்னம் மற்றும் அதன் அதிபதி பலம் இழந்து சனி+செவ்வாய்+இராகு. ....

      Delete
  14. கும்ப லக்னத்திற்கு ஏழில் வக்கிரமாகி குளிகனின் பார்வை பெற்று தனித்து நின்ற குருவின் திசை என்ன செய்யும்?

    ReplyDelete
  15. பாதகாதிபதி சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைத்திருந்தால் , அவர் பாதகம் செய்வாரா ? நன்றி !

    ல - மீனம் , ராசி - கடகம் , புதன்(4,7-க்கு அதிபதி ) + சூரியன் ( 6-க்கு அதிபதி ) மூன்றில் உள்ளனர் .

    ReplyDelete
  16. Sir rishaba lakanam 9 I'll sani sani thasail maaragathai seiyuma?

    ReplyDelete
  17. குருஜி அவர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  18. குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் தங்களது முகநூல் நண்பர். தங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் ஜோதிட ஆர்வலர். எனது ஜாதகப்படி சிம்ம லக்னம். 9ல் செவ்வாய் வக்கிரத்தில் உள்ளார். இந்த மாதம் 16/8/16 முதல் செவ்வாய் திசை ஆரம்பமாகிறது. எனக்கு செவ்வாய் திசை பலனளிக்குமா, பாதகமாக அமையுமா என தங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பாசமுடன் பார்த்திபன்.
    பெயர் : S.P.பார்த்திபன்/நாள்: 03/10/1973, பிறந்த நேரம் 04-50 a.m பிறந்த இடம் :சேலம்

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. சார் நமஸ்காரம். மீன லக்னத்துக்கு பாதகாதிபதி மிதுனத்தில் ஆட்சி.லக்னாதிபதி குரு 6 இல் மறைவு. இப்போ புதன் திசை . ஆனால், புதன் யோகியாக இருக்கிறார். அடுத்து, வாக்கியப்படி புதன் கடகத்தில் பகை . இப்போ எதை எப்படி எடுத்துக்கொள்வது

    ReplyDelete
  21. வணக்கம் என்னுடைய ஜாதகம் 04041988 பிறந்த நாள் ஊர் பேராவூரணி நேரம் 6.15 pm எப்போது திருமணம் நடக்கும்

    ReplyDelete
  22. மீன லக்னம் லக்னாதிபதி குரு கடகத்தில் பாதகாதிபதி புதனின் சாரமான ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் உச்சம் மகரத்தில் குருவின் ஏழாம் பார்வையில் மகரத்தில் சூரியன் புதன் சுகரன் எப்படி பலன் இருக்கும்

    ReplyDelete
  23. அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    லக்னத்திற்கு 9க்குரிய செவ்வாய் 9லேயே ஆட்சி பெற்று வக்கிர நிலையில் உள்ளார். எனினும் இவர் பாதகாதிபதியாக இருப்பதாலும் வக்கிரமடைந்துள்ளதாலும் இவரது திசையில் பாதகம் தருவதற்கு வாய்ப்பில்லை எனவும், மாறாக பலனை தருவார் என கருதலாமா

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  24. சிம்ம லக்னம்

    ReplyDelete
  25. அடேங்கப்பா எவ்வளவு கேள்விகள்,இதிலிருந்தே இந்த பதிவின் உயர்ந்த தன்மை தெரிகிறது

    ReplyDelete
  26. ஐயா,
    எனக்கு விருச்சிக லக்னம்
    குரு 9 il உச்ச வக்கிரம்

    பாதகாதிபதி சந்திரன் 7il உச்சம்....


    லக்னாதிபதி யும் 7 ல். ..

    இராகு 3 ல்
    கேது 9 ல்
    சுக்கிரன் 4th

    தற்பொழுது இராகு திசை. கேது புத்தி.


    9ல் கேது இருப்பதால் பாதகாதிபதி பலம் இழக்குமா?????

    7il பாதகாதிபதி உச்சம் பெற்றதால் திருமணம் தடை ஆகுமா?????


    26.01.2017
    2.48 am
    Udumalpet.....

    ReplyDelete
  27. Midunalaknam...2ல் குரு சந்திரன்...என்ன செய்யும் ஐயா

    ReplyDelete
  28. பாலமுரளிDecember 6, 2017 at 7:34 PM

    குருஜி அவ்களுக்கு வணக்கம்,கன்னி லக்னத்திற்கு பாதகாதிபதி குரு 11ஆம் வீட்டில் உட்சம் பெற்று கேதுவுடன் இணைந்து இருப்பது எவ்வித பலன்களை தரும்??

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. Rishaba lagnam 6ill sani with sevai,no guru parvai...pathakathipathi pathakathai seivara...enaku bayama eruku ayya...plz explain....

    ReplyDelete
  31. வணக்கம் குருஜி
    முதலாவது உதாரணத்தில் ஆணின் எட்டாம் வீடு வலுவாக இல்லாததும் அவரது மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கமுடியமா.
    மிக்க நன்றி
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  32. குருஜி அவர்களுக்கு வணக்கம்.

    http://adhithyaguruji.blogspot.com/2013/07/blog-post_9573.html

    தங்கள் இந்த பதிவில் ஒரு உதாரண ஜாதகம் கொடுத்து விளக்கி உள்ளீர்கள். அதில் மிதுன லக்கினத்திற்கு இரண்டில் பாதகாதிபதி உச்சம் அடைந்ததால் கொடுத்து கெடுத்தார் என்று கூறி உள்ளீர்கள். நீங்களே பாவத் பவ அடிப்படையில் பாதக வீட்டிற்கு அந்த கிரகம் ஆறு எட்டில் மறைந்தால் பாதக பலனை செய்யாது என்று கூறினீர்கள். உங்கள் வீடியோ பதிவில் கூட கும்ப லக்கினத்திற்கு ரெண்டில் உச்சம் அடையும் சுக்கிரன் நன்மை செய்வர் என்று கூறினீர்கள்.
    https://www.youtube.com/watch?v=zZmRS199yko

    உங்கள் பதிவில் முரண்பாடு உள்ளதால் தயவு செய்து விளக்கி கூறவும்.

    அதே போல் நீங்கள் ராகு கேதுக்கள் உயிர் காரகத்துவதை கெடுப்பார்கள் ஆனால் ஆதிபத்திய பலனை அல்ல என்று கூறினீர்கள். மற்றொரு கட்டுரையில் அவர்களே ஆதிபத்திய பலன்களை கெடுத்து மீண்டும் தன தசையில் எடுத்து செய்வார்கள் என்று கூறி உள்ளீர்கள் .

    இது போல் முரண்பட்ட பதிவுகளால் ஜோதிடம் எல்லோரும் சொல்வது போல் gimmik என்று எண்ண தோன்றுகிறது.

    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  33. சார் வணக்கம் உபய லக்னங்களுக்கு கன்னி மிதுனம் இவற்றிற்கு பாதகாதிபதி குரு ஆவார் நீங்க கட்டுரையில் குறிப்பிட்டு இருந்திங்க உபய லக்னங்களுக்கு குரு லக்னத்தில் அமர்வது சிறப்பு என்னுடைய கேள்வி ஓருவர் மிதுனம் கன்னி லக்னத்தில் பிறந்து அவருக்கு லக்னத்தில் குரு அமரும் போது அந்த ஜாதகருக்கு குரு திசை மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

    ReplyDelete
  34. கன்னி லக்னம்,புதன் 7லிலும்(நீசம்) குரு 10திலும்(பகை)பரிவர்த்தனை பெற்றிருக்க கேந்தராதிபத்ய தோஷம் வேலை செய்யுமா?

    ReplyDelete
  35. கடக லக்னம்,துலா ராசி
    2 ல் குரு
    4 ல் சந்திரன்
    6 ல் ராகு
    7 ல் சனி
    8 ல் செவ்வாய்
    9 ல் புதன், சுக்கிரன்
    10 ல் சூரியன்
    12 ல் கேது
    தற்போது 28 வயது நடக்கிறது.எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா அய்யா

    ReplyDelete
  36. அஷ்தமாதிபதி பாதகாதிபதி நட்சத்திர சரதில் அமர்ந்தாள் பாதகமா அதாவது பாதகாதிபதி யை நட்சத்திர சாரமாக கொண்டு செயல் படும் கிரகமும் பதகம் செய்யுமா

    ReplyDelete
  37. கன்னி லக்னத்திற்கு அஷ்டமாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று அஸ்தங்கம் அடைவது நன்மையா? தீமையா?

    ReplyDelete
  38. ஐயா மகர லக்னம் 1ல் மாந்தி 2ல் வக்ர குரு 5ல் சுக்கிரன் சந்திரன் கேது 6 ல் சூரியன் சனி புதன் 7செவ்வாய் 9ல் ராகு ஐயா எனக்கு சனி தசை எப்படி இருக்கும் இது வரை சனி புத்தி பாதிக்கவே செய்தது

    ReplyDelete
  39. Kadaga lagnam sukra dasa .. sultan athiga subathuvam..DOB 8.8.1983 6:10 Am mettupalayam 2 veetil budha sukran vargothamam. Sukran pathagam seiyuma.. please answer

    ReplyDelete
  40. ஐயா வணக்கம. எனது ஜாதகத்தின்படி தற்போது பாதகாதிபதி தசை நடக்கிறது.யோகாதிபதியும் அவரே.விருச்சக லக்னம் சந்திரன் பாதகாதிபதி. 2023வரைதசை நடக்கிறது. சந்திரன் பத்தாமிடமான சிம்மத்தில் உள்ளது.துளாமில் ராகுவுடன் சேர்ந்த குருவின் ஐந்தாம் பார்வையுடைய ஆச்சி பெற்ற சனி சந்திரனை ஏழாம் பார்வையாக பாற்கிறார்.பாதகாதி தசை எவ்வாறு ஐயா இருக்கும்.

    ReplyDelete
  41. 19.01.1999 || 03.55pm || udumalpet.. ஐயா, சூ, சுக்ரன்,சந், கேது 8ம் இடத்தில்... செவ்வாய்5ல் 8ல் உள்ள கிரகங்கள் செவ்வாய் சாரத்தில் உள்ளது... மிதுன லக்கினம் லக்கினாதிபதி7ல் உள்ளார்... குரு 10ல் ஆட்சி... சனி 11ல் நீசம்.... காதல் திருமணம் நடக்குமா.... .. குரு திசை எந்த மாதிரியான பலன்களை தரும்...வாழ்க்கை நன்றாக இருக்குமா.பாதகாதிபதி குரு10இல் சுய சாரம் பெற்று அட்சி ஆகி உள்ளார்
    . குரு திசை என்ன பலன்கள் தரும்.

    ReplyDelete