துலாம்:
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
(சித்திரை 3,
4ம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1,
2, 3ம் பாதங்கள் மற்றும் ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, ஆகிய எழுத்துக்களை
பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
துலாம்
ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு, ஆரம்ப மாதங்களில் நிதானமான நன்மைகளைத் தந்தாலும்
பிற்பகுதி முழுவதும் மேன்மையான பலன்களை செய்யும் வருடமாக இருக்கும்.
வருட ஆரம்பத்தில்
ராஜ கிரகங்களான குரு, சனி ஆகியோர்
உங்களுக்கு நன்மைகளைத் தர முடியாத அமைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ராசிநாதன்
சுக்கிரன் ஆட்சி வீட்டில் வலுவாக இருப்பது வேலை, தொழில், அமைப்புகளில்
நன்மைகளைத் தரும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.
இளைய
பருவத்தினருக்கு வாழ்க்கையை செட்டிலாக்கும் அமைப்பு உருவாவதால் திருமணம், நல்ல வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கை
கூடுதல், தொட்டதும்
துலங்குதல், நிரந்தர வருமானம்
கிடைத்தல் போன்ற பலன்கள் இந்த வருடம் நடக்கும்.
வருட ஆரம்பத்தில்
உங்களுக்கு கிரகங்கள் தரும் பலன்கள் சுமாராக இருந்தாலும் வருடத்தின் பிற்பகுதியில்
இருந்து நல்ல பண வரவுகளை தரக்கூடிய அமைப்புகள் இருப்பதால் துலாம் ராசிக்காரர்கள்
எதற்கும் கலங்க தேவையில்லாத வருடமாக இந்த வருடம் இருக்கும்.
இதுவரை வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி
போன்றவற்றில் ஆதாயங்களை எதிர்பார்த்திருந்த உங்களில் சிலருக்கு நன்மைகள் உண்டு.
சிலர் தூர இடங்களுக்குச் செல்வீர்கள். இளம் பருவத்தினருக்கு வருடப் பிற்பகுதியில்
திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள்
இருக்கும். இன்னும் சிலர் வருட ஆரம்பத்திலேயே எதிர்கால வாழ்க்கைத் துணைவரை
சந்தித்து செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அவரை வாழ்க்கையில் இணைத்துக் கொள்வீர்கள்.
இந்த வருடம் அனைவருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத்தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும் என்பது உறுதி.
ஒரு சிறப்புபலனாக
சிலருக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியே சொல்லமுடியாத அளவிற்கு
மறைமுகமான வகைகளில் பணலாபம் இருக்கும்.
வாக்குறுதிகளை இந்தவருடம் உங்களால் காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித்
தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்தமுடியும். யாரேனும்
ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக்கொடுத்து
இருந்தால் அதையும் பழுதின்றி நிறைவேற்றுவீர்கள்.
நீண்டநாட்களாக
திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள்
இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும்
செப்டம்பர் மாதத்திற்கு மேல் நல்லசெய்திகள் இருக்கும்.
குழந்தை பிறக்காமல்
தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக
மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள்
நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும்
உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள்
முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
கணவன் மனைவி உறவில்
இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள்
நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும்.
இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு திருப்புமுனையான
நிகழ்ச்சிகள் நடந்து அனைத்தும் சாதகமாகும்.
பெண்களுக்கு
கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும்
திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு
மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால்
மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.
சொந்தத்தொழில்
செய்பவர்கள் தொழில்அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு நல்ல நேரம் இது. சில தொழில்முனைவோர்கள் நல்ல
சந்தர்ப்பங்கள் கிடைத்து பணக்காரர்கள் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த
மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும். பூர்வீக சொத்து
விஷயத்தில் பாகப்பிரிவினை செய்வதற்கு இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில்
அனைத்தும் நல்ல படியாக நடைபெறும்.
நல்லவேலை
கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை
கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு
முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.
வேலையில்
இருப்பவர்களுக்கு தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு ஆகியவை தாமதமின்றி
கிடைக்கும். எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். நான்கில் சனி இருப்பதால்
தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வீண்வம்பை
விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று தேவையற்ற விரோதங்களை
சம்பாதித்து கொள்வீர்கள் எனபதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.
வெளிநாடு
சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள்
உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு
விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும். பன்னாட்டு
நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று
திரும்புவார்கள்.
என்னதான் பணவரவு
நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும்
பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட
வேண்டியது இருக்காது. ஆனால் வீண் செலவு செய்வதை தவிருங்கள். யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும்
தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல
காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.
பொதுவாழ்க்கையில்
இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை
போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு
இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக்
காண்பீர்கள்.
தந்தையின் ஆதரவு
கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம்
ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர்
வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும்.
குடும்பத்தில் குதூகலம் நிலவும். சகோதரர்கள் உதவுவார்கள்.
குடும்பத்தில்
சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள்
போன்றவைகளை இப்போது செய்ய முடியும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய
சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
இதுவரை சொந்தவீடு
இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம்
வருகிறது. மேலும் ஏற்கனவே வசதிகுறைந்த வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் கூட இந்த
வருடம் வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் ஒத்திக்கு வீடு எடுப்பீர்கள்.
காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும்
துறையினருக்கு இந்த வருடம் பதவிஉயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.
அரசு தனியார்துறை
ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு
குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு
போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப்
பெறுவீர்கள்.
காதலித்துக்
கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். முதல்
திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று
பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். இரண்டாவது
வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.
துலாம் ராசி
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால
வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள்
என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடம் இது.
துலாம் ராசியைச்
சேர்ந்த பெரியவர்களுக்கு இதுவரை பிள்ளைகள் வழியில் இருந்து வந்த மனக் கஷ்டங்களும், பிள்ளைகளுக்கு கல்யாணம் போன்ற சுப காரியங்களை
நடத்தி பார்க்க முடியாமல் இருந்து வந்த மன வேதனைகளும் அடியோடு விலகி குழந்தைகள்
மூலம் சந்தோஷமான விஷயங்கள் இந்த வருடத்தில் இருக்கும். கிரக நிலைகள் நல்ல விதமாக அமைவதால் வருடம்
முழுவதும் நீங்கள் நிச்சயம் சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.
புனித யாத்திரைகள்
செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனிதப் பயணம் செல்வீர்கள்.
இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார்.
மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவசமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி
பெறும் பாக்கியம் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள்
தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.
எல்லாத்தரப்பு
துலாம் ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் வருடம் இது. எப்படிப்
பார்த்தாலும் பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு துலாம் ராசிக்கு கெடுதல்களைச் செய்யக் கூடிய அமைப்பில்
இல்லை. ஆனால் உங்களின் எதிர்கால நன்மைக்குரிய சில மாற்றங்கள் இந்த வருடம்
நடக்கும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment