Friday, August 31, 2018

கடகம்-2018 செப்டம்பர் மாத ராசி பலன்கள்,



ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி


கைப்பேசி:8870998888

கடகம்:

மாத ஆரம்பத்தில் கடகநாதன் சந்திரன் யோகம் தரும் அமைப்பில் இருக்கிறார். ராஜயோகாதிபதி செவ்வாய் உச்ச நிலையில் இருப்பது கடகராசிக்கு நன்மை தரும் ஒரு அமைப்பு என்பதால் செப்டெம்பர் மாதம் உங்களுக்கு யோகம் தரும் மாதம்தான். ஒன்பதுக்குடைய குருபகவான் சுக்கிரனுடன் இணைந்து நான்காம் வீட்டில் அமர்ந்து, தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்துவதால் வேலை, தொழில் அமைப்பில் எவ்வித சிக்கல்களும் வரப் போவது இல்லை. நாலுக்குடைய சுக்கிரன் வலுப் பெறுவதால் இந்த மாதம் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும்.


தனாதிபதி சூரியன் மிகவும் வலுவாக அவருடைய நண்பரான புதனுடன் தன வீட்டில் இருப்பதால் எதிர்பாராத பண வரவு மாதம் முழுவதும் இருக்கும். யார் வீட்டுப் பணமானாலும் பாக்கெட்டில் புரண்டு கொண்டே இருக்கும். பணத் தட்டுப்பாடு இருக்காது. வேலை தொழில் விஷயங்களில் இருந்து வந்த கலக்கமான, பதட்டமான சூழ்நிலைகள் இனிமேல் இருக்காது. அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தந்தைவழி தொழில் செய்பவர்கள் போன்றவருக்கு இந்த மாதம் மிகுந்த நன்மைகள் தரும் மாதமாக இருக்கும்.

குடும்பத்தில் திருமணம் கிரகப்பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். பெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். இளைஞர்களுக்கு பெண் சினேகிதிகள் மூலம் உல்லாச அனுபவங்கள் உண்டு. சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். ஏழில் இருக்கும் செவ்வாயால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு  சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை.

1,2,3,5,7,12,13,19,20,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ந்தேதி காலை 6.11 மணி முதல் 24-ந்தேதி மாலை 5.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. ராசிநாதன் வலிமை இழப்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.  

No comments :

Post a Comment