ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி:8870998888
ரிஷபம்:
ரிஷபநாதன் சுக்கிரன்
மாத ஆரம்பத்தில் ஆறாமிடத்தில் எதிரியான குருவுடன் இணைந்திருப்பதால் சிலவிஷயங்கள்
உங்கள் கையை மீறி நடக்கும். ஆனாலும் அங்கே
சுக்கிரன் பலம் பெறுவதால் அனைத்து நல்ல விஷயங்களும் உங்களுக்கு உண்டு.
ரிஷபத்திற்கு இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். ராசிநாதன் ஆறில் இருப்பதால்
சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் தொல்லைகளைத்
தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.
சுக்கிர, குரு
சேர்க்கையால் ஏதேனும் ஒரு விஷயத்தில் பதற்றப்பட்டு முடிவெடுத்து அது தவறாகி
போவதற்கு வாய்ப்பு இருப்பதால் எங்கும், எதிலும் நிதானத்துடன்
இருங்கள். பொதுவாக, அடிக்கடி நான் எழுதுவதுபோல் ரிஷப
ராசிக்காரர்களைக் கெடுப்பதற்கு வெளியில் இருந்து ஆள் வரவேண்டாம். உங்களுக்கு
நீங்களேதான் எதிரி என்பதால் நீங்களே ஏதாவது தவறாக முடிவெடுத்து வாய்ப்புகளை நழுவ
விடுவீர்கள். மாதத்தின் முற்பகுதியில் பிள்ளைகளால் செலவுகளும், பிற்பகுதியில் அவர்கள் மூலம் நன்மைகளும் இருக்கும். கலைத்துறையினருக்கு
சற்று சுணக்கமான மாதம்தான் என்றாலும், உங்களுடைய கடின
உழைப்பு என்றுமே வீண் போகாது. அரசுத் துறையினர் இந்த மாதம் நல்ல திருப்புமுனைகளைச்
சந்திப்பீர்கள்.
எட்டில் அமர்ந்து
கணவன்மனைவி இடையே கருத்து வேற்றுமைகளையும், குடும்பத்தில் சில தேவையற்ற
பிரச்னைகளையும் சனி செய்து கொண்டு இருக்கிறார். கணவன் மனைவிக்குள் விட்டுக்
கொடுத்துப் போங்கள். மனைவி பேச்சைக் கேட்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.
உங்கள் கௌரவமும் பாழாகாது. அஷ்டமச் சனி நடப்பதால் பத்தொன்பது மிளகை முடிச்சாக
கட்டி அந்த முடிச்சை புது மண் அகல்விளக்கில் இட்டு நல்லெண்ணெய் ஊற்றி
காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் ஏற்றுவதும் சிரமங்களை குறைக்கும்.
3,4,5,8,9,17,18,19,25,26
ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ந்தேதி அதிகாலை 4.55 மணி முதல் 19-ந்தேதி மாலை 5.22
மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ
செய்வதை தள்ளி வைப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாரிடமும்
சண்டையோ, வீண் வாக்கு வாதமோ செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment