ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
உன்னதமான அதியோகத்தால் உயர்வடைந்த உதாரண ஜாதகத்தின் சிறப்புகளை தற்போது பார்க்கலாம்.
இந்த ஜாதகத்தில் அதியோக நாயகனான சந்திரன் பௌர்ணமிக்கு அருகில், பூரணத்தை அடையப் போகும் நிலையில் மிகுந்த ஒளித்திறனுடன் இருக்கிறார். மதிக்கு எதிரே ஏழு, மற்றும் எட்டாமிடங்களில் சுக்கிரன், புதன், குரு, சூரியன், செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்கள் இருக்கின்றன.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக செவ்வாயும், குருவும் அஸ்தமன நிலையை அடைந்திருக்கிறார்கள். அஸ்தமன நிலை என்பது, ஒரு கிரகம் தனது இயல்பான வலுவை இழக்கும் பலவீனமான ஒன்றாகும்.
இது பற்றி “ஜோதிடம் எனும் தேவரகசியம்” நூலில் விளக்கியிருக்கிறேன். அஸ்தமனம் என்பது சூரியன் எனும் மாபெரும் ஒளிக்கு முன்னால், ஒரு கிரகத்தின் பிரதிபலிப்பு ஒளி எடுபடாமல் அதனுள் அமிழ்ந்து போவதைக் குறிக்கிறது. அஸ்தமன நிலையில் இருக்கும் கிரகங்கள் தன்னுடைய இயல்பை சூரியனிடம் பறி கொடுத்து விடுகின்றன.
அதிக ஒளியையும், கடும் இருளையும் நெருங்கும் கிரகங்கள் சுய இயல்பை இழக்கும் என்பது ஒரு சூட்சுமம். அதன்படி ஒளியான சூரியனையும், இருளான ராகுவையும் நெருங்கும் கிரகங்கள் அஸ்தமன தோஷத்தையும், கிரகண தோஷத்தையும் அடைகின்றன.
அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தால் இழந்த வலுவைத் திரும்பப் பெறும். அதேபோன்ற இன்னொரு விதிவிலக்கான நிலைதான் இந்த அதியோக அமைப்பும்.
ஒரு கிரகம் அஸ்தமன நிலையில் இருந்தாலும் அது அதியோக அமைப்பில் இருந்தால், சூரியனிடம் தான் இழந்த ஒளியை, சந்திரன் மூலமாக பெற்று சுய இயல்பை அடையும். அதன்படி இந்த ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் அதியோக அமைப்பினால் அஸ்தமன தோஷ நிவர்த்தியை பெறுகிறார்கள்.
அதியோகத்திலும் பாப அதியோகம், சுப அதியோகம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. சுபர்களான சுக்கிரன், புதன், குரு ஆகியவை சந்திரனுக்கு 6, 7, 8 ல் இருக்கும்போது உயர்வாக சொல்லக்கூடிய சுப அதியோகம் உண்டாகிறது. இது எல்லா நிலைகளிலும் நன்மைகளை மட்டுமே தரக் கூடியது.
சந்திரனுக்கு 6. 7 .8 ல் சுபர்கள் சேர்ந்த நிலையில் இருந்தாலும், தனித்தனியே இருந்தாலும், ஒரே ராசியில் சந்திரனுக்கு ஆறிலோ, ஏழிலோ, எட்டிலோ கூடியிருந்தாலும் அது அதியோகம்தான். ஆனால் சுபர்கள் மட்டும் அதியோக அமைப்பில் இருக்கும் போதுதான் நன்மைகள் அதிகம் இருக்கும். இவற்றுடன் பாபர்களும் இணைந்திருப்பின், சேர்ந்துள்ள பாபக் கிரகத்தின் ஆதிபத்தியப்படி யோகவலு குறையும்.
பாபக் கலப்பற்ற சந்திராதி யோகமே முதன்மையானது.
சந்
|
|
|
|
|
|
|
|
|
|
||
|
ல |
சூரி, புத,குரு, செவ் |
|
சுபமான சந்திராதி யோகத்தைப் போலவே பாபர்கள் சந்திரனுக்கு 6, 7, 8 ல் இருப்பது பாப அதியோகம் என்று குறிப்பிடப்படுகிறது.
சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன், ராகு-கேதுக்கள் ஆகியவை பாபர்களாக குறிப்பிடப்படுகின்றன. அதியோக அமைப்பின் நாயகனே சந்திரன்தான் என்பதால் நிலவைத் தவிர்த்த முதன்மை பாபர்களான சனி, செவ்வாய் இரண்டுமே பாப அதியோக அமைப்பில் இருக்கும்போது சுபத்துவ நிலையை அடையும்.
சந்திரன் அதிக ஒளி நிலையில் இருக்கும்போது சந்திரனுக்கு நேர் எதிரில் ஏழிலோ, எட்டிலோ, ஆறிலோ சனியோ, செவ்வாயோ அல்லது சனி, செவ்வாய் இரண்டுமோ இருப்பின் அவை தங்களின் பாபத்துவத்தை சந்திரனின் ஒளிக்கேற்ப ஓரளவு இழந்து, நன்மைகளைத் தரும் நிலையில் அமைகின்றன. சந்திரனின் ஒளிநிலையைப் பொருத்து சுபத்துவம் கூடுதல், குறைவாக இருக்கும்.
சந்திரனுக்கு சஷ்டாஷ்டகமாக ஆறு, எட்டில் சனி, செவ்வாய் இருக்கும் போதும், இருக்கும் டிகிரி நிலை, சந்திரனின் ஒளி நிலையைப் பொருத்து, சனி - செவ்வாய்க்கு சந்திர பார்வை இருக்கவே செய்யும்.
சூரிய ஒளியை பூமிக்கு அதிக அளவில் பிரதிபலிப்பது நமக்கு வெகு அருகில் இருக்கும் சந்திரன் மட்டும்தான் என்பதால்தான் சந்திரனின் அதியோகம் ஜோதிடத்தில் சிறப்பாக சொல்லப்படுகிறது.
பிறந்த நேரத்து கோள் நிலைகளின்படி செவ்வாய், சனியின் தீய கதிர்கள் ஒரு உயிருக்கு கிடைக்கும் நிலையில், அந்த கெடுதலான ஒளி அலைகளோடு சந்திரன் சம்பந்தப்படுமாயின், அதாவது கேந்திரம், கோணம், அதியோகம் போன்ற நிலை அமையுமாயின், சனி, செவ்வாயின் தீய கதிர்கள் சந்திர ஒளியால் ஓரளவு மாற்றப்பட்டு, அதாவது சந்திரன் ஒரு வடிகட்டியாக செயல்பட்டு, பாபர்களின் தீய கதிர்களை மாற்றி உயிர்களுக்குத் தேவையான நல்ல ஒளியாக (சுபத்துவம்) மாற்றித் தருகிறது என்றுதான் இதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிக ஒளியுடன் குரு இருக்கும்போது, அவருக்கும் இந்த அதியோக அமைப்பு உண்டு. ஆனால் அவர் பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதால் சந்திரனை விட குறைவாகத்தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
சென்ற அத்தியாயத்தில் கிரகங்களின் பார்வைச் சிறப்பை விளக்கும்போது கடகத்தின் இறுதி நிலையில் இருக்கும் குருவின் பார்வை அதற்கு எட்டில் இருக்கும் கும்பத்திலும் ஓரளவு விழும் என்று நான் எழுதியிருந்தது சிலருக்கு முரண்பாடாக தோன்றியுள்ளது என்பதை அறிகிறேன். அவர்கள் ஜோதிடத்தின் ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் என் பதில்.
எந்த ஒரு கருத்தையும், விளக்கத்தையும் “எடுத்தேன். கவிழ்த்தேன்” என்ற பாணியில் நான் எழுதுவது இல்லை. ஆய்வுநோக்கில் ஆயிரக்கணக்கான யோக, அவயோக ஜாதகங்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் என்னால் நான் எழுதுபவற்றுக்கோ, அல்லது நீங்கள் கேட்பதற்கோ இசைவான ஜாதகங்களை எந்த நேரத்திலும் காட்ட முடியும்.
ஜோதிடத்தில் சகலத்தையும் யாரும் தங்களின் உண்மையான ஆய்வு முடிவிற்கேற்ப சீர்திருத்தி சொல்லலாம். ஆனால் அது எல்லாவற்றுக்கும் எல்லா நிலைகளிலும் சரியாகப் பொருந்த வேண்டும்.
எவரும் இங்கே விதிகளை உருவாக்கலாம். ஆனால் அவை அனைத்து ஜாதகங்களிலும் நூறு சதவிகிதம் பொருந்த வேண்டும்.
இப்போது நான் சொல்லி வரும் “சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு கோட்பாடு” அனைத்து ஜாதகங்களிலும் முழுமையாகப் பொருந்தி வரும். எதிர்காலத்தில் இது ஜோதிடத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
சரி.. பாப அதியோகத்தில் சனி, செவ்வாயை அடுத்த பாபர்களான ராகு, கேதுக்களின் நிலை என்னவென்று பார்த்தோமேயானால், ராகுவும், கேதுவும் எந்த ஒரு நிலையிலும் சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அதியோகமாக இருக்காது. அதியோகமே ஒளி சார்ந்த யோகம் என்பதால், வெளிச்சம் தரும் நிலவுடன் எந்த நிலையில் ராகு, கேதுக்கள் சம்பந்தப் பட்டாலும், மதியின் ஒளி குறையும்.
சந்திரனுக்கு ஆறில் ராகு இருந்தால், பனிரெண்டில் கேது இருக்கும். இது ஒளியை இருள் நெருங்கும் நிலை போன்றது. சந்திரனுக்கு எட்டில் ராகு இருந்தால், எதிரே இரண்டில் கேது இருக்கும். இது இருள் விலகப் போகும் நிலையைக் குறிக்கிறது.
சந்திரனுக்கு எதிரே ஏழில் ராகு இருக்குமாயின், மதியின் பக்கத்திலேயே கேது இருக்கும். இது முழுக்க முழுக்க இருளின் ஆதிக்கத்தில் சந்திரன் ஒளியை இழந்து கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும். அன்று பவுர்ணமி தினமாயின் கிரகண நிலையாகக் கூட இருக்கலாம். அப்போது நிலவின் ஒளி பங்கப்பட்டிருக்கும். எனவே ராகு, கேதுக்களுக்கு அதியோக நிலை இல்லை.
சுப அதியோகத்திற்கு நிகராக பாப அதியோகம் சொல்லப்படவில்லை என்றாலும் சந்திரனின் ஒளி மிகவும் சக்தி வாய்ந்த நிலையில் இருக்கும் போது பாபக்கோள்கள் சுபத்துவம் அடையவே செய்யும். பாபர்களின் ஆதிபத்திய நிலையைப் பொருத்து இது ஜாதகத்தை மேம்படுத்தும்.
கொடுக்கப்பட்டிருக்கும் உதாரண ஜாதகத்தில் பாபக் கோளான செவ்வாய் மற்ற சுபர்களுடன் இணைந்து அதியோக நிலையில் இருக்கிறார். அதாவது செவ்வாய் இங்கே சுபர்களான குரு, புதனுடன் இணைந்து சுபத்துவமாக இருக்கிறார். சுக்கிரன், புதன் பரிவர்த்தனையின் மூலமாக சுக்கிரனுடனும் செவ்வாய் மறைமுக சம்பந்தம் பெறுகிறார்.
முக்கியமாக செவ்வாய் இங்கே லக்னாதிபதியாகி பனிரெண்டில் மறைந்து, சூரியனுடன் இணைந்து அஸ்தமன நிலை அடைந்துள்ள நிலையில், அதி யோகத்தின் மூலமாக இழந்த தனது வலுவை திரும்ப அடைகிறார். ஆக லக்னாதிபதி சுபத்துவமும், சூட்சுமவலுவும் ஒருங்கே பெற்றிருக்கிறார். ஆகவே இந்த ஜாதகிக்கு பிறந்தது முதல் வெகு சிறப்பான ஒரு சொகுசு வாழ்க்கை அமைந்திருக்கிறது.
ஒரே ஒரு யோக அமைப்பு மட்டுமே ஜாதகத்தை சிறப்பாக்கி விடாது. பல சுப விதிகள் இணைந்துதான் ஒரு யோக ஜாதகத்தை உருவாக்குகின்றன. ஒரு நல்ல ஜாதகத்தில் கிரகங்கள் அனைத்தும் நல்ல நட்சத்திர சாரம் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் தசை நடத்தும் கிரகங்கள் யோக நட்சத்திரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
பூரட்டாதி நான்காம் பாதத்தில், குருவின் தசை பத்து மாதம் மீதமிருக்கும் நிலையில், சென்னையில் பிறந்த இந்த யோக ஜாதகத்தில், தற்போது நடைபெறும் தசாநாதனான புதன், பஞ்சமாதிபதி என்று சொல்லப்படக்கூடிய அதியோக நிலையில் உள்ள குருவின் சாரத்தில் இருக்கிறார்.
ராகு,கேதுக்களுக்கு சார நிலை ஐந்தாம் அமைப்புத்தான் என்றாலும், அடுத்த தசாநாதன் கேதுவும் ஒன்பதுக்குடைய, அதிக ஒளியுடன் ஐந்தாமிடத்தில் இருக்கும் சுபச் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். அதனையடுத்து நடைபெறக்கூடிய சுக்கிர தசையும் அதே சந்திரனின் நட்சத்திரமான அஸ்தத்தில் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையின் மிக முக்கியமான ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் இந்தப் பெண்ணிற்கு நல்ல நட்சத்திர சாரத்தில் அமர்ந்து, அதி யோகத்தைப் பெற்ற கிரகங்களின் தசைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஜாதகம் யோகமாக இருந்தாலும் யோக தசைகள் நடைபெற வேண்டும் என்று நான் அடிக்கடி எழுதுவதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
மேம்போக்காக யோகமற்ற ஜாதகமாகத் தெரிந்தாலும், சூட்சும அமைப்பில் வலுவான ஒரு ஜாதகத்தை மேற்கோள் காட்ட வேண்டும் என்பதினால்தான் இந்த ஜாதகத்தை அதியோக நிலையை விளக்குவதற்கு தேர்ந்தெடுத்தேன்.
நேரிடையாக “பளிச்” சென்று அதியோக அமைப்பினால் பிரகாசிக்கும் பல ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றை விளக்குவதினால் இதைப் படிப்பவர்களுக்கு பயன் இல்லை. சிக்கலான ஜாதகங்களின் மூலமாகவே ஜோதிடத்தின் இன்னொரு பரிமாணத்தினை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
மீண்டும் அடுத்த வெள்ளி பார்க்கலாம்.
(13-07-2018 மாலைமலரில் வெளிவந்தது).
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
பரிவர்த்தனை அமைப்பை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா...
ReplyDeleteஇவை தன் வீட்டில் இருக்கும் அமைப்பா?.. இல்லை தன் வீட்டில் இருப்பதை போன்று பலம் பெறும் அமைப்பா?
சனி 3ம் பார்வை சந்திரனை பார்ப்பது அவரை ஒளி இழக்க செய்யாதா.
ReplyDeleteசெய்யாது என்றே நினைக்கிறேன்.
Deleteலக்ன பாபிகளுக்கு 3 சிறந்த இடமே. மேலும் மகரத்தில் சனி பகவான் இருக்கும் போது, சூரிய சந்திர, செவ்வாய் நட்சத்திரத்திலேயே இருப்பார். நன்றி.
மிக அற்புதம்.
ReplyDelete