கைபேசி எண் :8870998888
மகர ராசியினர்
தேவையற்ற கோபத்தையும் அடுத்தவர் மேல் காட்டவேண்டிய எரிச்சலையும் வீட்டில் காட்டுவீர்கள் என்பதால் நிதானமாக
இருக்க வேண்டிய மாதம் இது. ராசியில் செவ்வாய், கேது, ஏழில்
ராகு என்ற அமைப்பு இப்போது மகரத்திற்கு இருப்பதால் ஒருமுறை ராகு, கேது பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம்,
திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற
புனிதத்தலங்களுக்கு சென்று ராகு,கேது பரிகாரங்களை செய்து
வாருங்கள். உங்களில் சிலருக்கு இந்த மாதம் பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க
வேண்டி இருக்கும். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு
விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.
ராசிநாதன் வலுவாக
குருவின் வீட்டில் இருப்பதால் பெரிய கெடுபலன்கள் எதுவும் வரப்போவது இல்லை. அரசு, தனியார்துறை
ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். காவல் துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வேலை,
வியாபாரம் தொழில் போன்ற அனைத்தும் லாபத்துடன் இயங்கும்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. வேகமாக போய்க் கொண்டிருக்கும் கார்
வேகத்தடையை பார்த்ததும் வேகம் குறைவதைப் போல சிலருக்கு மட்டும் எதிர்மறை
அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு நிறைய மாற்றங்கள் இருக்கும். வேலையில்
டிரான்ஸ்பர் கிடைத்து ஊரை விட்டு மாறுதல், வெளிமாநிலம்,
வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு
மாற்றுதல் போன்ற பலன்கள் நடக்கும்
ஆறாமிடம் பாபத்துவம்
பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர்
துரோகியாக மாறலாம். யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக
இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக
இருங்கள். தன,
லாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் பணவரவு இருக்கும். வெளிநாட்டில்
இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள்.
செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களிலும்
யோசித்து செயல் படுவது நல்லது.
1,2,4,10,11,12,21,24,25,28
ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம் தேதி அதிகாலை 12.05 மணி முதல் 14-ம் தேதி
அதிகாலை 12.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன்
இருப்பது நல்லது. ஆயினும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.
No comments :
Post a Comment