கைபேசி எண் :8870998888
ராசிநாதன் புதன்
வலுக்குறைந்து இருந்தாலும் ராசிக்கு குருபார்வை இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம்
இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்ல
அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு தந்தையின் வழியில் மனவருத்தங்கள் மற்றும்
செலவுகள் உண்டு. வயதான தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக
இருப்பது நல்லது. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும். பழைய கடன்கள்
கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
ஆறுக்குடையவன் உச்ச
வலுப் பெறுவதால் நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ராசிநாதனை செவ்வாய் பார்ப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சிறு
விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக
இருங்கள். ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள்
விலகும். பிரிந்த தம்பதிகள் சேருவார்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு
இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் இதுவரை
இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள்
இருக்கும்.
நீண்டநாள்
எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல் கிடைக்கும். தாய் வழியில்
நன்மைகளும்,
பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம்
உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு
முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு.
குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு
முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம். ஆகஸ்டு மாதம் மிதுனத்திற்கு
தொல்லைகள் எதுவும் தராமல் நன்மைகள் மட்டுமே இருக்கும் மாதம்தான்.
5,6,8,9,11,12,22,24,25,26
ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி காலை 10.26 மணி முதல் 25-ம் தேதி இரவு
11.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ
இந்த நாட்களில் செய்ய வேண்டாம். ஆயினும் கெடுதல்கள் எதுவும் நடைபெறாது.
No comments :
Post a Comment